Songs

Monday, June 2, 2025

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025

திருக்குறள் 

பால் : 


குறள் 391:


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.


விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.


பழமொழி :

He who has an art, has everywhere a part. 


கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.


இரண்டொழுக்க பண்புகள் :


1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.


2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :


எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர்


பொது அறிவு : 


01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது?


மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin


02. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது?


ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River


English words & Tips :


 surprise        -        ஆச்சரியம்


 wonderful     -        அற்புதம்


When two singular subjects are connected by or, use a singular verb. The same is true for either/or and neither/nor.


John or Joe is coming tonight.

Either coffee or tea is fine.

Neither Kavi nor Nandhini was late.


அறிவியல் களஞ்சியம் :


 நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் கடல் அலைகள் தோன்றுகின்றன. அதுபோல, மேச்சோ எனும் ஒரு நட்சத்திரத்தில், அதன் அருகே இருக்கும் சிறிய நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால், நமது சூரியனைப் போல மூன்று மடங்கு உயரம் மிக்க அலைகள் தோன்றுவதை ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் நம்முடைய சூரியனை விட 35 மடங்கு அதிக நிறையை உடையது.


ஜூன் 02 இன்று


கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவுதினம்


அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.


நீதிக்கதை

 மாயக்கண்ணாடி


ஒரு சிறுவன், புத்தகக் கடையில் ஒரு அழகான கண்ணாடியைப் பார்த்தான்.அதில் பார்த்ததெல்லாம்  அப்படியே தெரிந்தது.தன் முகமும் புன்னகைப்பது போலவே தெரிந்தது.அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.


அவன் சந்தோசத்தில் சிரிக்கும் போது கண்ணாடியும் சிரித்தது. அவன் கோபப்பட்டபோது கண்ணாடியும் கோபப்படுவது போலவே தெரிந்தது.அதை வைத்து மகிழ்ச்சியுடன்  விளையாடினான்


ஒரு நாள்,அவன் கண்ணாடியை  தரையில் வீசினான். அது உடைந்து போனது. அந்த நேரம் தான் அவனுக்கு உண்மை தெரிந்தது. அவன் முகத்தையே கண்ணாடி காட்டியது! அவன் முகம் எப்படி இருக்கிறதோ, அதையே பிரதிபலித்தது என்பதைஅவன் உணர்ந்தான். 


வாழ்க்கையும் இப்படித்தான்! நாம் எப்படி இருப்போமோ, உலகமும் அதுபோலவே பிரதிபலிக்கிறது. நாம் நல்லவர்களாக இருந்தால், உலகமே நல்லது தான்!


அதிகம் எதிர்பார்க்காமல், நம் மனதைச் சுத்தமாக வைத்தால் போதும்.நம்மால் உலகமே மாறும்.இதுவே மாயக்கண்ணாடி அவனுக்கு உணர்த்திய வாழ்க்கையின் பெரிய பாடமாகும்.


அவன் சிரித்தான் — உண்மையுடன்.


இன்றைய செய்திகள் - 02.06.2025


⭐ கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை பள்ளிகளும் திறப்பு .


⭐புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம். -போக்குவரத்து துறை அறிவிப்பு.


⭐சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார்.


⭐ பூமியில் இருந்து நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில் உள்ள சிறிய கிரகம் கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்திற்கு 'பிளானட் நைன்' என பெயர் சூட்டினர் அமெரிக்க விஞ்ஞானிகள்.


விளையாட்டுச் செய்திகள்


⭐ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.


  ⭐ தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ்!


Today's Headlines


✏All types of Tamil nadu state schools reopen after the summer vacation.


✏Students can travel using their old bus passes until a new bus pass is issued. -Transport Department announcement.


✏America'S President Trump imposed a 50% tariff on steel and aluminum imports from China.


✏A small planet three times farther from Earth than Neptune has been discovered. American scientists have named the new planet 'Planet Nine


 Sports news 


🏀Indian athlete Pooja Singh won the gold medal in the women's high jump at the Asian Athletics Championships, clearing 1.89 meters.


🏀Tamil Nadu athlete Vidya Ramraj won bronze in the 400m hurdles at the Asian Athletics Championships in South Korea, running with a swollen foot!





Saturday, May 31, 2025

02-06-2025 பள்ளி காலை நேர வழிபாட்டுச் செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025

திருக்குறள்

அதிகாரம் 100 – 

பண்புடைமை

 குறள் 991:

 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் 

பண்புடைமை என்னும் வழக்கு 

 பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர். 


பழமொழி

  • அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
  • அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.



இரண்டொழுக்க பண்புகள் :


*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 


* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :


நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும்.


பொது அறிவு : 


1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்? 


விடை: தந்தை பெரியார்.        


2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது? 


விடை: கீழாநெல்லி


English words & meanings :


 Bride.    -     மணமகள்


Candle.    -     மெழுகுவர்த்தி


வேளாண்மையும் வாழ்வும் : 


நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்



நீதிக்கதை




இன்றைய செய்திகள் - 02.06.2025



Thursday, April 17, 2025

17-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 இயல் :குடியியல்

 அதிகாரம்: உழவு


 குறள் எண்: 1032

 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

 எழுவாரை எல்லாம் பொறுத்து,


பொருள்:

உழவுத் தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர்களையும் உழவு தாங்குதலால் அது உலகத்தவர்க்கு அச்சாணியாகும்.


பழமொழி :

சுறுசுறுப்பு வெற்றி தரும்.


Briskness will bring success.


இரண்டொழுக்க பண்புகள் :


*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 


* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :


நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும்.


பொது அறிவு : 


1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்? 


விடை: தந்தை பெரியார்.        


2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது? 


விடை: கீழாநெல்லி


English words & meanings :


 Bride.    -     மணமகள்


Candle.    -     மெழுகுவர்த்தி


வேளாண்மையும் வாழ்வும் : 


நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்



நீதிக்கதை


 நரித் தந்திரம்!


ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டது. எல்லா மிருகங்களும் வந்தன.


முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டது.


‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’என்று கேட்டது.


குரங்கு வந்து முகர்ந்து பார்த்து விட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’என்றது.


சிங்கத்துக்கு கோபம் வந்து விட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. குரங்கு சுருண்டு விழுந்துவிட்டது.


அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ என்றது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக் கொண்டே வந்தது.


சிங்கத்தை முகர்ந்து பார்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ என்றது. "பொய்யா சொல்றே?ன்னு சிங்கம் ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் சுருண்டு விழுந்தது.


அடுத்த படியாக ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ என்றது சிங்கம்.


 நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக் கொண்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்தது. அப்புறம் கூறியது, ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’


 நரி தன் தந்திரமான குணத்தாலும், சமயோசித புத்தியாலும் தப்பித்தது



இன்றைய செய்திகள் - 17.04.2025


* அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


* தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்.


* 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா.


* இந்திய ஓபன் தடகளம் 2025: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்.


* பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The Secretary of the Tamil Development and News Department has ordered all government department secretaries to issue government orders only in Tamil from now on.


 * The Meteorological Department has reported that the temperature will increase in Tamil Nadu for the next three days starting tomorrow. The public is advised to be cautious regarding the heatwave.

 

* The Supreme Court has issued a strict order stating that the license of the concerned hospital must be canceled if a newborn child goes missing.


 * China has issued 85,000 visas to Indians in the four months from January to April 2025. This is seen as a significant move in the relationship between the two countries.

.

 * Indian Open Athletics: Yash Veer Singh has won the gold medal in the javelin throw event at the Indian Open Athletics Championships.


 * Barcelona Open Tennis: Danish player Holger Rune has advanced to the quarterfinals of the Barcelona Open Tennis tournament. He is displaying excellent performance



02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...