02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள் பால் : குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். பழமொழி : He who has an art, has everywhere a part. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இரண்டொழுக்க பண்புகள் : 1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன். 2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன். பொன்மொழி : எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர் பொது அறிவு : 01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது? மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin 02. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது? ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River English words & Tips : surprise - ஆச்சரியம் wonderful -...