Songs

Wednesday, April 16, 2025

16-04-25 காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


திருக்குறள்: 


பால்: பொருட்பால்

 இயல்: குடியியல்

 அதிகாரம்: உழவு

 குறள் எண்:1031

 சூழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
 உழந்தும் உழவே தலை.

பொருள்:
மக்கள் பலதொழில் வளங்களில் சிறந்திருந்தாலும் உணவிற்காக உழவை நாடுவர். எனவே உழவே முதன்மையானது.

பழமொழி :

Whatever is worth doing, is worth doing well.


செய்ய வேண்டியதைச் சரியாக செய்.

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

மொழி  மனிதனுக்கு  விழி  போன்றது.---கலைஞர்

பொது அறிவு : 

1. குழந்தை உதவி எண் எது? 

விடை: 1098.      

2. மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? 

விடை: தாமிரபரணி

English words & meanings :

 Anniversary.   -     ஆண்டுவிழா 

Birthday     -      பிறந்த நாள்

வேளாண்மையும் வாழ்வும் : 

 அறுவடை செய்து வடிகட்டிய மழைநீரை கழிப்பறை, வீட்டுத்தோட்டம், புல்வெளிப் பாசனம், சிறு விவசாயம் போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

ஏப்ரல் 16

சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

நீதிக்கதை

 கொக்குவுக்கு எத்தனை கால்?


பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.


“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.


சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.


“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.


சாப்பாட்டு நேரம்—

முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.


நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.


மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.


“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.


முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.


ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது தூரம் தாவிப் பின் பறந்து சென்றன.


“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.


மேலும், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.


“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.

இன்றைய செய்திகள்

16.04.2025

* மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

* இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர்.

* அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர்.

* மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நிறைவு: வீரர்-வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு.
Today's Headlines

* Chief Minister M.K. Stalin has announced in the Tamil Nadu Legislative Assembly that a high-level committee headed by retired Justice Kurian Joseph will be formed to protect the rights of the state.
 
 * The Tamil Nadu Health Department has issued a government order to establish the Kalaignar Centenary Integrated Research Foundation to promote medical research and new discoveries.
 
* Authorities are taking action to deport 15 foreigners who were staying illegally in India.
 
 * The Chinese government has stopped the export of minerals, metals, and magnetic materials to the United States. This has created a risk of impacting military equipment production in America.
 
* An all-female celebrity crew has traveled to and returned from space via Jeff Bezos's space company, Blue Origin.
 
 * New rankings for male and female players have been released following the conclusion of the Monte Carlo Tennis Tournament.
 
* The Indian squad for the women's hockey series against Australia has been announced.





Tuesday, April 15, 2025

15-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 இயல் :குடியியல்

 அதிகாரம்: நன்றிஇச் செல்வம் 


குறள் எண்:1010


சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந் தனையது உடைத்து.


பொருள்:

கொடையாளர்கள் சில காலம் வறுமையுறுதல், மேகம் வறுமையுற்றது போலாகும்.


பழமொழி :

செயல் வார்த்தைக்கு மிகுந்து பேசும்.


Action speaks louder than words.


இரண்டொழுக்க பண்புகள் :


*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 


* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :


இன்று கை கொடுக்க யாருமில்லை  என்று  வருந்தாதே, நாளை  கை  தட்ட உலகமே காத்திருக்கும்  நீ  ""முயற்சி"" செய்தால்.


பொது அறிவு : 


1. மனித உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு எது? 


விடை :  காது எலும்பு.       


2. சமுதாய பூச்சி என அழைக்கப்படுவது எது? 


விடை : தேனீக்கள்


English words & meanings :


 Vehicle.   -   வண்டி/வாகனம் 


Wheel.      -     சக்கரம்


வேளாண்மையும் வாழ்வும் : 


பலநாடுகளில்  சுத்தமான பாத்திரங்களை வைத்து, மழைநீரை சேகரித்து அதை கொதிக்கவைத்து குடிக்கின்றனர். 


நீதிக்கதை


 ஒரு பூவும் வண்டும்


      ஒரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில்   சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. வண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. 


அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும், “நீ ஏன் வாட்டமா இருக்கே?” என்று கேட்டது. 


அதற்கு அந்தப் பூ, “பூக்களின் தோற்றம் வளர்ச்சியில் ஏழு நிலைகள் உண்டு. அதை நீ தெரிஞ்சுக்கிட்டா என் வாட்டத்துக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும்!” என்றது. 


“பூக்களின் வளர்ச்சில் ஏழு நிலைகளா? சொல்லு... சொல்லு” என ஆர்வமானது வண்டு. 


‘`ஒரு பூ முதன்முதலா செடியில் உருவாகும்போது ‘அரும்பு’ எனச் சொல்வாங்க. அப்படி நான் உருவானபோது, ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. தாய்ச்செடி என்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்துச்சு. என் சகோதரிகள், பிரியமா நடந்துக்கிட்டாங்க. மழை, வெயில், காற்று, பனியினால் எனக்குக் கெடுதல் வந்துடக் கூடாதுனு, இலைகளால் மூடிப் பாதுகாக்கப்பட்டேன். அரும்புதான் என் மழலைப் பருவம். மிகவும் இனிமையான பருவம்!” என்றது பூ.

ஆஹா அருமை. பூக்களின் இரண்டாம் நிலை?’’ - கேட்டது வண்டு. 


`பூக்களின் இரண்டாம் நிலை ‘மொட்டு’. இந்த நிலையில் பூவின் இதழ்கள் வளர ஆரம்பிச்சாலும், குவிஞ்ச நிலையில்தான் இருக்கும்.அப்போ, சிறிசும் பெருசுமா நிறைய மொட்டுகள் இருந்தோம். நாங்க எல்லாரும் கூடிப் பேசுவோம். எங்க எல்லாருக்கும் பல கனவுகள் இருந்துச்சு. ‘மொட்டு’ எனது உற்சாகமான சிறார் பருவம்!” என்றது பூ.


“உன் கதையைக் கேட்கவே சுவராஸ்யமா இருக்கு. உன் அடுத்த நிலை என்ன?” என ரீங்காரமிட்டது வண்டு. 


“பூக்களின் மூன்றாம் நிலை ‘முகில்’. ஒரு மொட்டின் இதழ்கள் முதன்முதலா அவிழ்ந்து விடுபடுவதைத்தான் முகிழ் அல்லது முகிழ்த்தல் எனச் சொல்வாங்க. இந்த நிலையில் எனக்குத் தாய்ச் செடியின் பராமரிப்பு அதிகம் தேவைப்படலை. நான் தன்னம்பிக்கையோடு இருந்தேன். நெக்டார் எனப்படும் தேன், என்னிடம் உருவாக ஆரம்பிச்சது. முகிழ்ப் பருவத்தை இளமையின் ஆரம்பநிலைனு சொல்லலாம்!” என்றது பூ.  



வண்டு வியப்புடன் பார்க்க, பூ தொடர்ந்து பேசியது. “பூக்களின் நான்காம் நிலை ‘மலர்’. இந்த நிலையில் எனது இதழ்கள் மேலும் பெருசா வளர்ந்துச்சு. என் நிறம், அடர்த்தியான நீலத்துக்கு மாறி, பார்க்கிறவங்க மனசைக் கவர்ந்தது. தினமும் காலையில் சூரிய உதயத்தின்போது மலர்வேன். அந்திசாயும் வேளையில் இதழ்கள் குவிவேன். உன்னை மாதிரி வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் தேனுக்காக வரும். மலர் ஒரு பூவின் துடிப்பான இளமைப் பருவம்!”


குறுக்கிட்ட வண்டு, “மொட்டுகளா இருந்தப்போ பலருக்கும் பல கனவுகள் இருந்ததா சொன்னியே, அது என்ன?” எனக் கேட்டது. 


“வளர்ந்த மொட்டுகளைத் தங்கள் தேவைக்காக மனுஷங்க கொய்து எடுத்துட்டுப் போவாங்க. சில மொட்டுகளுக்குத் தாங்கள் அழகான மாலையாகத் தொடுக்கப்படணும்னு ஆசை இருந்துச்சு. சில மொட்டுகள் இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பாதமலரா இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க!” 


“ஓகோ... நினைச்சது நடந்துச்சா?” 


“எண்ணம்தானே வாழ்க்கை. எல்லா மொட்டுகளுக்கும் அவங்க நினைச்சதே நடந்துச்சு. பூக்களின் ஐந்தாம் நிலை ‘அலர்’. ஒரு பூ எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருப்பது அலர்!” என்றது பூ.



ஒரு சந்தேகம்... அலருக்கும் மலருக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டது கருவண்டு. 


“அலர்ந்த நிலையில் ஒரு பூ தன் இதழ்கள் குவிந்து விரியும் தன்மையை இழந்துரும். மலர் இளமைப் பருவம்னா, அலர் முதுமையின் ஆரம்பம்னு சொல்லலாம். அலர்ந்த நிலையில் ஒரு பூவுக்குப் பனிக்காற்று, வெயில், மழையிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது. இதனால், பூ வாடத் தொடங்கும். மகரந்தத்தாள் காய ஆரம்பிக்கும். ஓர் அலர்ந்த பூ வாடும் நிலைதான் ஆறாம் நிலை!” என்றது பூ. 


“புரியுது புரியுது! அப்போ, ஏழாம் நிலை என்ன?” 


“பூக்களின் ஏழாம் நிலை, ‘செம்மல்’. வாடிய பூ வதங்கும் நிலை. பூக்களின் இதழ்கள் சுருங்கும். மகரந்தத்தாளும் முழுசா வாடிரும். இப்போ, நான் வதங்கியிருக்கேன். இது எனது ஏழாம் அதாவது கடைசி நிலை. இப்போ, இந்தச் செடியில் பெயரளவுக்குத்தான் ஒட்டிக்கிட்டுருக்கேன். ஒரு சின்னக் காற்று அடிச்சாலும் உதிர்ந்திருவேன். நீ என் பக்கத்துல வந்து உன் இறக்கைகளைப் படபடத்துவிட்டுப் போ!” என்றது பூ. 


பூ கேட்டுக்கொண்டபடி வண்டு செடியின் அருகில் வந்து படபடத்தது. அதன் அதிர்வில் பூ காம்பிலிருந்து உதிர்ந்து ஓசையின்றித் தரையில் வீழ்ந்தது. விழுந்த பூவின் அருகே வண்டு சென்றது. “மொட்டா இருந்தப்போ, நீ என்ன ஆசைப்பட்டே?” எனக் கேட்டது வண்டு.

பூ காம்பிலிருந்து உதிர்ந்து ஓசையின்றித் தரையில் வீழ்ந்தது. விழுந்த பூவின் அருகே வண்டு சென்றது. “மொட்டா இருந்தப்போ, நீ என்ன ஆசைப்பட்டே?” எனக் கேட்டது வண்டு. 


“என் ஏழு நிலைகளையும் தாய்ச் செடியிலேயே கழிக்கணும். அதன் காலடியில் விழுந்து சருகாக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் நினைச்சதே நடந்தது!” சிரித்தபடி சொன்னது பூ. 


‘’ஆனால், யாருக்கும் பயனில்லாமல் போய்ட்டோமோ என்ற வருத்தம் இல்லியா?’’ எனக் கேட்டது வண்டு. 


‘’யார் சொன்னது பயனில்லாமல் போனதாக? உன்னைப்போலப் பலருக்கும் பசியாற்றினேன். என் தாய்ச் செடிக்கே நான் உரமாகிறேன். என்னை இத்தனை தூரம் வளர்த்த மண்ணுக்கு நன்றி சொல்றேன்’’ - என்றது பூ.


வண்டு அமைதியாகத் தலைவணங்கி, அந்தப் பூவைச் சுற்றி வந்து, ரீங்காரமிட்டபடி பறந்துசென்றது. 


என் ஏழு நிலைகளையும் தாய்ச் செடியிலேயே கழிக்கணும். அதன் காலடியில் விழுந்து சருகாக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் நினைச்சதே நடந்தது!” சிரித்தபடி சொன்னது பூ. 


‘’ஆனால், யாருக்கும் பயனில்லாமல் போய்ட்டோமோ என்ற வருத்தம் இல்லியா?’’ எனக் கேட்டது வண்டு. 


‘’யார் சொன்னது பயனில்லாமல் போனதாக? உன்னைப்போலப் பலருக்கும் பசியாற்றினேன். என் தாய்ச் செடிக்கே நான் உரமாகிறேன். என்னை இத்தனை தூரம் வளர்த்த மண்ணுக்கு நன்றி சொல்றேன்’’ - என்றது பூ.


வண்டு அமைதியாகத் தலைவணங்கி, அந்தப் பூவைச் சுற்றி வந்து, ரீங்காரமிட்டபடி பறந்துசென்றது. 


இன்றைய செய்திகள் - 15.04.2025


* நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயர்கல்வியில் இணையும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது.


* விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்.


* எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.


* அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு இணங்க மறுத்தால் அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


* பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் பியாஸ்ட்ரி முதலிடம்.


* மாண்டி கார்லோ டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.


Today's Headlines


* The number of government school students enrolling in higher education has increased by 30% in the last three years, due to schemes like "Naan Mudhalvan," "Pudhumai Penn," and "Tamil Pudhalvan."

 

   * AI (Artificial Intelligence) technology cameras have been installed in 200 locations on Chennai roads to capture traffic violations.

 

   * DRDO has successfully tested a laser-based weapon called 'DEW' (Directed Energy Weapon) that can shoot down enemy warplanes, missiles, and drones mid-air. With this, India has joined the list of a few countries possessing such weapons.

 

   * The Trump administration has announced that foreigners staying in the US for more than 30 days must register with the government. Failure to comply will result in fines and imprisonment.

 

   * Australian driver Piastri won first place in the Bahrain Formula 1 car race.


   * Alcaraz won the champion title in Monte Carlo Tennis.





Friday, April 11, 2025

11-04-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

இயல்: குடியியல்

குறள் எண்:1009 


அதிகாரம்: நன்றிஇச் செல்வம்


அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.


பொருள்:

அன்பின்றி அறம் செய்யாது சேர்த்த பொருளை எடுத்துக் கொள்வார் யாரோ?


பழமொழி :

No sweet without sweat


வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :


* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 


* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.


பொன்மொழி :


நேற்றிலிருந்து கற்றுக்கொள் ,இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை மட்டும் நிறுத்தாதே.---ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


பொது அறிவு : 


1. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 


விடை: தமிழ்நாடு.


2. இந்தியாவில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது? 


விடை : குஜராத்


English words & meanings :


 Subway      -     சுரங்கப்பாதை 


 Submarine      -     நீர்மூழ்கிக் கப்பல்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நீர் சேமிப்பு உத்திகளில் ஒன்று மழைநீர் சேகரிப்பு ஆகும்.குளங்கள், ஏரிகள், கால்வாய்களை துார்வாருதல், நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்துதல், மழைநீர் பிடிக்கும் குழாய்கள் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை வீடுகளில் நிறுவுதல் ஆகியவை மழைநீரை சேகரிக்கும் வெவ்வேறு முறைகளாகும்.


இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.


அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். ”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.


அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.


“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.


அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.


அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.


நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.


இன்றைய செய்திகள் - 11.04.2025


* சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.


* சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


* வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட சரக்கு முனைய வசதியை நிறுத்தியது இந்தியா.


* அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார்.


* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி.


* ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி கேப்டன்.


Today's Headlines


* The Minister of Micro, Small, and Medium Enterprises (MSME ) Tha.mo. Anbarasan, announced in the legislative assembly that the maximum limit for additional investment subsidies for small businesses will be increased from ₹5 lakh to ₹10 lakh.


   * An agreement was signed in the presence of Chief Minister M.K. Stalin with Dixon Technologies Limited at the IndoSpace Industrial Park in Oragadam, Chennai, for an investment of ₹1,000 crore, creating 5,000 job opportunities.

 

   * India has stopped the cargo terminal facility provided to Bangladesh.

 

   * The trade war between the United States and China has intensified. Following Trump's increase of tariffs on Chinese goods to 104%, Chinese President Xi Jinping has raised tariffs on American goods to 84%.

 

   * Asian Badminton Championship: P.V. Sindhu won her first-round match.


   * IPL 2025: Dhoni will captain Chennai Super Kings again.





Thursday, April 10, 2025

 வணக்கம் நண்பரே...

VIP நிறுவனத்தின் அற்புதமான மற்றொரு உருவாக்கம்....

ஒத்தக்கடை அருகில் 

Investment செய்வதற்கு ஏற்ற இடம் 

விரும்பினால் தங்கள் இல்லத்தில் இருந்து இடத்தை பார்வையிட வாகன வசதி முழுமையாக செய்து தரப்படுகிறது...

வருங்காலத்தில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வரவிருக்கிறது 

முழுமையாக அப்ரூவல் செய்யப்பட்ட இடங்கள் 

இடத்தின் அளவு விவரங்கள் மற்றும் விலை விபரங்களுடன்...

விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்










விலை விவரம் 





02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...