இன்று
16-12-24 தினம்.
திருக்குறள்
பால்:பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: கல்வி
குறள் எண்:395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
பழமொழி
இரண்டொழுக்க பண்புகள்
1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி
வீரன் வீழலாம் ஆனால் பணிய மாட்டான்
மொழி மொழி தவறாதவன் வழி தெரியாதவன்
பொது அறிவு
- இத்தாலி நாட்டின் தேசிய மலர்? லில்லி
- அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம் - இன்கா நாகரிகம்
English words & meanings :
Cooking. - சமைத்தல்
Dancing. - நடனம்
இலக்கணம் (Grammer)
Perfect Continuous
S+V+O
I had been eating an apple- ஆப்பிள் சாப்பிட்டு கொண்டு இருந்திருந்தேன்
I have been eating an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டு கொண்டே இருந்திருக்கிறேன்
I shall have been eating an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டு கொண்டு இருந்திருப்பேன்
விவசாயம் -உணவு
முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது
நீதி கதை
ஒரு காலத்தில் ஒரு வனம் இருந்தது. அந்த வனத்தில் பல விலங்குகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. ஒரு நாள், ஒரு சிங்கம் அந்த வனத்தில் வந்தது. அதன் ஆணவத்தால், அது மற்ற விலங்குகளைச் சீண்டத் தொடங்கியது. தினமும் ஒரு விலங்கைக் கொன்று உண்ணும் பழக்கம் உருவானது.
மற்ற விலங்குகள் அனைவரும் சிங்கத்தின் கொடூரத்தால் அச்சத்தில் இருந்தனர். இறுதியில், அவர்கள் ஒன்றிணைந்து சிங்கத்திடம் சென்று பேசினர்.
"ஏலே சிங்க ராஜா, நீ எங்களை ஒவ்வொரு நாளும் கொன்று உண்ணுவதால், எங்கள் குடும்பங்கள் அழிவதைப் பார்த்து தாங்க முடியவில்லை. அதனால், தினமும் உனக்கான உணவை மாறி மாறி அனுப்புகிறோம். நீயும் சாந்தமாக இரு, நாங்களும் அமைதியாக இருப்போம்," என்று கூறினர்.
சிங்கம் எண்ணிப் பார்த்து, "சரி, நீங்கள் என்னை தினமும் உணவுடன் சந்தோஷமாக வைத்தால், நான் வேறு யாரையும் வேட்டையாட மாட்டேன்," என்றது.
மற்ற விலங்குகள் ஒவ்வொரு நாளும் ஒரு விலங்கைக் கொண்டுசெல்லத் தொடங்கின. பல நாட்கள் இந்த ஒழுங்கு நடந்தது. ஒரு நாள், ஒரு சாண்கொறி (கோழிக்குஞ்சு போன்ற சிறு பறவை) தன் முறை வந்தது. அது சிந்தித்து, ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டது.
அன்று மாலை சாண்கொறி சிங்கத்தின் மாளிகைக்கு சென்று, "சிங்க ராஜா, நான் எடையில் சிறியவள் என்றாலும், எனது அறிவால் உன்னை எப்படி நம்பிக்கையுடன் மாறுவேன் என்பதை காட்டுகிறேன்," என்று கூறியது.
அதற்கு சிங்கம், "சரி, நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று வினவியது.
சாண்கொறி தன்னுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, வனத்தின் அருகே இருக்கும் ஒரு ஆழமான குளத்துக்கு சிங்கத்தை அழைத்துச் சென்றது. குளத்தின் நீரில் சிங்கத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது. "அந்த சிங்கம் தான் உன்னை வெறுக்கிறது!" என்று சாண்கொறி கூறியது.
சிங்கம் கோபத்தில் குளத்தில் இறங்கி அந்த "இன்னொரு சிங்கத்துடன்" போர் தொடங்கியது. ஆனால் அது குளத்தின் ஆழத்திற்குள் விழுந்து முடிவடைந்தது.
மற்ற விலங்குகள் சிங்கத்தின் இறப்பை அறிந்து, சாண்கொறியை பாராட்டின. அவர்கள் மீண்டும் சுதந்திரமாக வாழத் தொடங்கினர்.
நீதிகதை: அறிவும் தன்னம்பிக்கையும் ஒருவரின் பெரும் சவால்களை வெல்ல உதவிகரமாக இருக்கும்.
டிசம்பர் 16 இன்று
வெற்றி நாள்
வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - 16.12.2024
* அரசு பேருந்துகளுக்கு தகுதிச்சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையருக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவு.
* பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
* நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றுள்ளதாக தகவல்.
* ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்.
* ஐ.எஸ்.எல்.கால்பந்து: கேரள அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி.
* இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை.
Today's Headlines
* The state Chief Information Commissioner has directed the Transport Commissioner to pay due attention to issuing qualification certificates to government buses.
* The Tamil Nadu government informed the High Court that 7 more new training courses, including the discontinued bookbinding training for the visually impaired, will be started soon.
* 1.45 crore cases were closed in a single day through Lok Adalats held across the country. It is reported that Rs. 7 thousand crores of money was paid out of this.
* Russian army destroyed 37 Ukrainian drones in a single night.
* ISL football: Mohun Bagan defeats Kerala team.
* 3rd Test against England; New Zealand leads by 340 runs at the end of the 2nd day.
No comments:
Post a Comment