பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: பழைமை
குறள் எண்:806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
பொருள்:உரிமைவாழ்வின் எல்லையில்
நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்."
பழமொழி :
தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.
Defeat the defeat before the defeat defeats you.
இரண்டொழுக்க பண்புகள் :
*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.
* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.
பொன்மொழி :
"உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்."
பொது அறிவு :
1. கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம் எது?
விடை: சோடியம்
2. . கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்?
விடை: மஞ்சள்
English words & meanings :
Cinnamon-இலவங்க பட்டை,
Clove-கிராம்பு
வேளாண்மையும் வாழ்வும் :
நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)
நீதிக்கதை
ஒரு மாபெரும் கூட்டம்.புகழ் பெற்ற இரண்டு பேச்சாளர்கள் இடையே போட்டி யாருடைய பேச்சுக்கு அதிக கைத்தட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு.
கூட்டம் துவங்குவதற்கு முன் இரு பேச்சாளர்களும் ஒரு அறையில் அமர்ந்து அந்தக் கூட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வரவே அவர் எழுந்து பேசிக்கொண்டே வெளியில் சென்றார் ஆனால் அவர் எழுதிய அன்றைய பேச்சுக்கான குறிப்புகளை மேஜை மேலே மறந்து விட்டு சென்றார்.
அப்போது அமர்ந்திருந்த மற்றொரு பேச்சாளர் அந்த குறிப்புகளை எடுத்துப் பார்த்தார். அவர் தயாரித்த குறிப்புகளை விட அந்த குறிப்புகள் மிகவும் அருமையாக இருந்தது.
கூட்டம் துவங்கியது.குறிப்புகளை எடுத்துக் கொண்டவர்க்கே முதலில் பேச வாய்ப்பு அமைந்தது. அவரும் தன்னுடைய குறிப்புகளை விட்டுவிட்டு எதிர்ப்பேச்சாளர் பேச வைத்திருந்த குறிப்புகளையே தன்னுடைய குறிப்புகள் போல மிகவும் அற்புதமாக பேசி முடித்தார்.
எதிர் பேச்சாளருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. அடுத்து அவர் பேச வேண்டும். அவர் என்ன பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை. மெதுவாக எழுந்து சென்று, மைக்கை பிடித்து, "முதலில் எனக்கு முன்னால் பேசியவருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு தொண்டை கட்டு என்னால் சரியாக பேச முடியாது. எனது உரையை நீங்கள் வாசிக்க முடியுமா? என்று கூட்டம் துவங்குவதற்கு முன் கேட்டேன். அவர் பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்" என்று கூட்டத்தை பார்த்து கூறி அமர்ந்தார்.
நீதி : சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவன் தான் புத்திசாலி
இன்றைய செய்திகள் - 04.02.2025
* கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.
* ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
* அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
* சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.
Today's Headlines
* The High Court has dismissed a petition seeking the return of vehicles carrying medical waste from Kerala to Kumari and ordered them to be auctioned.
* The UGC has issued notices to 18 medical colleges across the country, including 2 colleges in Tamil Nadu, for not following anti-ragging regulations.
* Canadian Prime Minister Justin Trudeau has announced a 25 percent tax on American goods.
* Davis Cup tennis: Indian team wins by defeating Togo.
* International chess tournament: Praggnanandhaa defeats Kukesh to become champion.
No comments:
Post a Comment