Songs

Tuesday, March 25, 2025

26-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: குடிமை 

குறள் எண் :958


 நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்

 குலத்தின்கண் ஐயப் படும்.


பொருள்:

குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின், அவன் குலப் பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.


பழமொழி :

சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.  


Learning the future by looking at things past.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் --சுபாஷ் சந்திரபோஸ்


பொது அறிவு : 


1. முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது? 


விடை : உருகுவே         


  2. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?


 விடை :உதடு


English words & meanings :


 Field.    -     வயல்

 

 Forest.   -     காடு


வேளாண்மையும் வாழ்வும் : 


  நீர் பற்றாக்குறை தீர நீர் வளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் முறையான நீர் மேலாண்மை, முக்கியமாக அனைத்து பயன்பாடுகளுக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

நீதிக்கதை


 அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து


ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும்.பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.


ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்றுகட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.


ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.


யோகி ஒரு நாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.


யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குபின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.



இன்றைய செய்திகள் - 26.03.2025


* ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்க பயணிகளுக்கு சிறப்பு பரிசு: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.


* தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.


* அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


* நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு.


* கேலோ இந்தியா பாரா விளையாட்டு: பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்தனர் ஜாண்டு குமார் மற்றும் சீமா ரானி.


* 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதிச் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி தகுதி.


Today's Headlines


*  To encourage  online booking reservation scheme, The Tamil Nadu State Transport Corporation has announced  special lucky draw 


 * Toll Fees at 40 Toll Plazas in Tamil Nadu to be Increased from April 1st: National Highways Authority of India Announced.


 * Comprehensive Screening Centers to Detect All Types of Cancer to be Launched in All Districts of Tamil Nadu Within 10 Days: Minister Ma. Subramanian. This method is first in the Country.


 * India Urges at the United Nations that Pakistan Continues to Illegally Occupy the Jammu and Kashmir Region and Should Vacate it Immediately.


 * Earthquake in New Zealand: Recorded 6.7 on the Richter Scale.


 * Khelo India Para Games: Jaandu Kumar and Seema Rani Set National Records in Weightlifting.


 * 2026 World Cup Football: New Zealand Team Qualifies for the Qualifying Round




No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...