பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: மானம்
குறள் எண்:962.
சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
பொருள்: புகழொடு
மானமும் வேண்டுபவர், புகழில்லா இழிவான செயல் செய்யார்.
பழமொழி :
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
There is no words superior to one's father's advice.
இரண்டொழுக்க பண்புகள் :
* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.
* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்.
பொது அறிவு :
1. தேனீக்களுக்கு எத்தனை கண்கள் உள்ளன?
விடை : 5.
2. பின் பக்கமாகவும் நீந்தும் உயிரினம் எது?
விடை : இறால்
English words & meanings :
Meadow. - புல்வெளி
Mine. - சுரங்கம்
வேளாண்மையும் வாழ்வும் :
நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தண்ணீர் முக்கியமானது - அதற்கு மாற்றீடு எதுவும் இல்லை. எனவே நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று ஆகும்
நீதிக்கதை
ஒற்றுமை
ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள். அவர்கள் நால்வரும் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். அதைப் பார்த்த பெரியவர் மிகவும் வருத்தப்பட்டார்.
அவர்களை "ஒற்றுமையாக இருங்கள்" என்று எவ்வளவோ கூறியும், அவர்கள் முடியாது என்று கூறி விட்டார்கள்.
ஒரு நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே நால்வருக்கும் ஒற்றுமை பற்றிய பாடத்தினை புகட்ட அவர் நால்வருக்குள் ஒரு போட்டியை வைத்தார்.
நான்கு பேரும் ஆளுக்கு ஒரு கொம்புகளை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். அவர்களும் கொண்டு வந்தனர். நான்கு கொம்புகளையும் கயிறு கொண்டு ஒன்றாக கட்டச் சொன்னார். பின்பு ஒவ்வொருவராக வந்து அந்த கட்டை உடைக்கச் சொன்னார் ஆனால் எவராலும் உடைக்க இயலவில்லை.
பின்னர் கட்டுக்களை அவிழ்த்து ஒவ்வொரு கொம்புகளாக எடுத்து உடைக்க சொன்னார்.விரைவில் சுலபமாக உடைத்து விட்டனர் அப்போது செல்வந்தர் "ஒற்¡றுமையின் பலம் என்ன என்று இப்போது புரிகிறதா"?என்று கேட்டார். மேலும்,"நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் எவராலும் உங்களை அசைக்க முடியாது" என்றும் கூறினார்
இன்றைய செய்திகள் - 02.04.2025
* மும்பையில் காடுகளின் நடுவே மரத்தினால் ஆன நடைபாதை திறப்பு!மும்பை மலபார் ஹில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வன நடைபாதை நேற்று திறக்கப்பட்டது.
* இதுவரை அரசு
பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.
* கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.
* கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு
* தொடர் தோல்வி எதிரொலி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்.
* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Today's Headlines
* A wooden bridge is opened in the middle of the forest in Mumbai!
The newly built forest corridor in Malabar Hill, Mumbai, opened yesterday.
* So far
Admission of 1,17,310 students in government schools - Education Minister Anbil Mahesh is proud.
* Sanjay Gandhi, special lawyer, said that Kumbakonam Beetal, Kumari Thovalai's maanika malai which is made of flowers to give to temple had got a geographical code
* The possibility of a severe earthquake; 3 lakhs of people in danger: Announcement of Japan
* Series Failure Echo: Medvedev lost the top 10 in the tennis rankings.
* In the name of former India captain Mansoor Alikan awards were given. Now the England Cricket Board planned to stop this trophy
No comments:
Post a Comment