Songs

Monday, January 27, 2025

28-01-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 - 28-01.2025

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண்: 114


தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்  படும் .


பொருள் : ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால் தெரியப்படும். நேர்மையானவர்களுக்கு பண்புடைய  மக்கள் பிறப்பதும்,நேர்மை தவறுவோர்க்கு நல்ல மக்கள் அமையாமல் போவது உலகியல் மரபு."


பழமொழி :

He that can stay obtains.


பொறுத்தார் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 


 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :


கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது. ---ஆஸ்கர் வைல்ட்


பொது அறிவு : 


1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?


விடை: குதிரை


2.மாநிலத்தின் கீழுள்ள நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றவை எது?


விடை: உயர்நீதிமன்றம்


English words & meanings :


 Fence- வேலி                                 


Fertilizer. -  உரம்


வேளாண்மையும் வாழ்வும் : 


சர் ஆல்பர்ட் ஹோவர்ட என்பவர்தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்


.நீதிக்கதை


 பொம்மை 


ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது நான்கு வயது தங்கையை அழைத்துக் கொண்டு  கடைத்தெரு வழியாக சென்றான்.


 ஒரு கடையிலிருந்து பொம்மையை பார்த்து, தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை உனக்கு வேண்டும்" என்று கேட்டான்.


அவள் விரும்பிய பொம்மையை வாங்கி கையில் கொடுத்துவிட்டு பெரிய மனித தோரணையுடன் கடைக்காரரைப் பார்த்து, "அந்த பொம்மை என்ன விலை? என்றான்.


 அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக் கொண்டே,"உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? என்று கேட்டார்.


அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேகரித்து வைத்திருந்த சிற்பிகளை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தான். இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கவலையான முகத்தை பார்த்துக் கொண்டே," எனக்கு நான்கு சிப்பிகள் போதும் மீதியை நீயே எடுத்துக்கொள்" என்றார்.


சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி இருந்த சிற்பிகளையும் தன் தங்கையுடன் அந்த 


பொம்மையையும் எடுத்துக் கொண்டு சென்றான். 


இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கடையின் வேலையாள் தனது முதலாளியிடம், " ஐயா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை எடுத்துக்கொண்டு விலையுயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா" என்று கேட்டார்.


அதற்கு  முதலாளி, "அந்த சிறுவனுக்கு  பணம்  கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்  என்பது புரியாத வயது  அவனைப் பொறுத்தவரை அவனிடம் உள்ள சிப்பிகளே உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவனுடைய மனதில் பணம் தான் உயர்ந்தது என்ற எண்ணம் வந்துவிடும்.


அதனை நான் தடுத்து விட்டேன். மேலும், தனது தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர இயலும் என்ற தன்னம்பிக்கையும் அவனது மனதில் விதைத்து விட்டேன்"என்றார்.


மேலும்,"என்றாவது ஒருநாள் அவன் பெரியவனாகி இதை நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற எண்ணம் அவன் மனதில் எழும் ஆகையால் அவனும் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வான்" என்றும் கூறினார்.


நீதி: இந்த உலகம் அன்பாலும், மனிதத் தன்மையாலும் கட்டமைக்கப்பட வேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.01.2025


*தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு.


* 'திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக் கல்வித்துறை சாதனை.


* தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால் உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


* உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.


* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


* மகளிர் ஹாக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்.


* பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்.


Today's Headlines


* Under the 'Efficient Classroom' program, 22,931 smart boards were set up in 7 months, a great achievement in record time in the school education department.


* Court order to remove party flag poles from public places and roads in Tamil Nadu within 12 weeks.


* Roadside barriers made of bamboo cuttings are being erected on national highways to avoid casualties during accidents.


* The General Civil Code came into force in the state of Uttarakhand from yesterday.


* President Donald Trump ordered to lift the embargo  on the supply of explosives to Israel by Former US President Joe Biden


* Women's Hockey India League: Odisha Warriors are champions.


* Big Bash Final: Hobart Hurricanes beat Sydney Thunder to become champions




SLAS STUDENTS LIST - SCHOOL LIST

 Please click this link

Sunday, January 26, 2025

27-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண்: 655


எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 

மற்றன்ன செய்யாமை நன்று.


பொருள்: பின்னாளில் நினைத்து வருத்தப்படத் தக்க செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவேளை தவறிச் செய்தாலும் மீண்டும் அத்தன்மையுடைய செயல்களைச் செய்யக் கூடாது.


பழமொழி :

தீய பண்பைத் திருத்தி நல்ல பண்பை பொலிவுறச் செய்யும் கல்வி. 


Education polishes good nature and corrects bad ones.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :


" கோழையும் முட்டாளுமே ' இது என் விதி ' என்பர், ஆற்றல் மிக்கவரோ 'என் விதியை நானே வகுப்பேன் ' என்பர்".----விவேகானந்தர்.


பொது அறிவு : 


1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


விடை: ஞானபீட விருது


2.ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?


விடை: சத்யஜித்ரே


English words & meanings :


 Mug-குவளை,


 Tub-தொட்டி


வேளாண்மையும் வாழ்வும் : 


18-வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன.



நீதிக்கதை: 


திருடன் மற்றும் விவசாயி

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் மொத்தம் பயிர்கள் வளர்த்து, மிகவும் உழைத்துக் கொண்டிருந்தார். அவ்வாறு உழைத்து கிடைத்த பயிர்களை வீட்டு அருகிலேயே அம்பாரத்தில் சேமித்து வைத்திருந்தார்.

ஒருநாள் இரவில், திருடன் ஒருவன் அம்பாரத்தில் கள்வியிட நினைத்தான். அப்போது விவசாயி விழித்துக் கொண்டு, அந்த திருடனை பிடிக்க முயன்றார். திருடன் தப்பிக்க முயற்சி செய்த போது, விவசாயி அவனை பிடித்து, "ஏன் இதைப் பண்றே? உன் வாழ்க்கை இதற்கு வேண்டுமா?" என கேட்டார்.

திருடன் சிரித்துக்கொண்டு, "எனக்கு சாப்பிட பசிக்கிறது. எனது பிழைப்பு இந்தப் பாவத்தில்தான் இருக்கிறது" என்றான்.

விவசாயி சொன்னார்: "நீ ஒரு பிழையாக உழைப்பதைப் போய் கள்வியால் வாழ்கிறாய். உன் உழைப்பில் கிடைத்த உணவின் சுவை உண்மையாக இருக்கும்."

அப்போதிருந்து, திருடன் கள்வியைக் கைவிட்டு, விவசாயியிடம் வேலைக்கு சேர்ந்தார். அவன் மாறிய வாழ்க்கை, அனைத்து கிராமத்தினருக்கும் முன்மாதிரியானது.

நீதி: உழைப்பால் வந்த வாழ்வு மட்டுமே நீண்ட நாள் நன்மை தரும்.







இன்றைய செய்திகள் - 27.01.2025


* சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


* தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


   

* பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



* உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.


Today's Headlines


* 23 people from the Tamil Nadu Police Department, including 2 IGs, have been awarded the President's Medal for their outstanding service.


* Tamil Nadu has emerged as the second-largest economic state in India, says Tamil Nadu Chief Minister M.K. Stalin.


* Indonesian President meets Prime Minister Modi: Various agreements including maritime security signed.


* The US government has decided to suspend funding for global aid programs.


* Australian Open Tennis: Italy's Gianni Cener wins the championship



Friday, January 24, 2025

25-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2025

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் எண்: 198


அரும்பயன் ஆயும் ஆறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.


பொருள் : சொல்லுக்கு ஆற்றலுண்டு, பயனுண்டு  என்று அறிந்த பெருமக்கள் நல்ல,உயர்ந்த பயன் தராத சொற்களைக் கூமாட்டார்கள். தம் மதிப்பைக் குன்றச் செய்யும் சொற்களை ஒரு போதும் கூறார் என்பது கருத்து."


பழமொழி :

கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.      


The roots of education is bitter, but the fruits are sweet.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :


"சரித்திரம் ஒரு முறை உன் பேரைச் சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும். இப்படிக்கு "" முயற்சி""."


பொது அறிவு : 


1. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது? 


சிலப்பதிகாரம்


2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? 


கேரளா


English words & meanings :


 Toothpaste-பற்பசை,


 Towel-துண்டு


வேளாண்மையும் வாழ்வும் : 


கரிம விவசாய இயக்கம் 1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஓர் எதிர்ப் போக்காக இது காணப்பட்டது.



ஆனால் நீங்களோ இவர் செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் நன்றியை மறந்து இவரை அடித்து விரட்டுகின்றீர்கள் என்று கூறியபடி கோபத்துடன் சுப்பையாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை நல்லபடியாக உபசரித்தார் சத்திரத்துக் காவலாளி.


சுப்பையாவின் பசியெல்லாம் அடங்கிய பின்னர் சத்திரத்து காவலாளி “ஐயா! நானும் தங்களிடம் உதவி பெற்றள்ளேன். நீங்கள் கோயிலுக்கு வருகின்ற நேரமெல்லாம் உங்களை கவனித்திருக்கின்றேன்.


இன்றுதான் உங்களோடு பேசுகின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.உங்களோடு  பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அதனைக்கேட்ட சுப்பையா சிரித்தபடியே அந்தக் காவலாளியை நோக்கி,


“அப்பா என் பசியைப் போக்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.


நீதி:ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் வாழ வேண்டும். நன்றி உணர்ச்சியோடு வாழ்ந்தால் நன்மையே நடக்கும்.



இன்றைய செய்திகள் - 25.01.2025


* குடியரசு தின விழா: சென்னை​யில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை.


* இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்றும் நீட்டிக்கப்பட உள்ளது.


* இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது. மத்திய தேர்தல் ஆணையம் தகவல்.


* அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக உள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


* ஹாக்கி இந்தியா லீக்: ஐதராபாத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர்  ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Republic Day: Drones banned in Chennai for 2 days


* For the convenience of the spectators coming to watch the India-England cricket match, the metro train service in Chennai will also be extended today.


* The number of voters in India is nearing 100 crores. Central Election Commission Information.


* Russian President Vladimir Putin is ready to talk to US President Donald Trump on the phone, the country's government has said.


* Hockey India League: Tamil Nadu Dragons beat Hyderabad.


* Australian Open Tennis: Italian Janic Ciner advances to final







Thursday, January 23, 2025

24-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 - 24-01-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 787


அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.


பொருள் : நண்பனை அழிவைத் தரும் தீமைகளிலிருந்து விலக்கி, நன்னெறியில் நடக்கச் செய்து,அவனுக்குத் துன்பம் வந்த போது அவனுடனிருந்து துன்பப்படுவதே நட்பு ஆகும்.            


பழமொழி :

கல்வியே நாட்டின் முதல் அரண்.  


  Education is the chief defence of a Nation.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :


ஒரு போதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டென்றால், அது நாம் செய்யும் நற்செயலே.---மேட்டர்லிங்க்


பொது அறிவு : 


1. ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி எது?


விடை:  பூமத்திய ரேகை மண்டலம்


2. அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது எது? 


விடை:  பட்டு நாண்


English words & meanings :


 Comb-சீப்பு,


 Scissors-கத்தரிக்கோல்


வேளாண்மையும் வாழ்வும் : 


செயற்கை அல்லது வேதியல் உரங்கள் உபயோகித்து செய்யப் படும் விவசாயம் அதிக மகசூல் தந்தாலும் இது அதிக அளவில் மண்ணையும் மனிதனையும் பாதிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக இயற்கை உரம் கொண்டு செய்யப் படும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற குரல் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது



நீதிக்கதை


 பருவத்தே பயிர்செய் 


பழனிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான்.


இதனைக் கவனித்த பழனியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான்.


மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.


அதனைக் கண்டு பழனியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.


சோம்பேறியான பழனி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.


அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.


அதனைப் பார்த்து பழனியால் பொறாமைப்படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம் இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.


இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்துச் செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.


நீதி:


பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல்,எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.



இன்றைய செய்திகள்


24.01.2025


* மயிலாடும்பாறை அகழ்வாய்வில் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு என்பது 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்ட ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்


* பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அறிவிப்பு.


* பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.


* தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது.


* உலகப் பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம்: ஏஐ சீர்திருத்தங்களுக்கு நாடுகளின் தலைவர்கள் அழைப்பு.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: லட்சயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Chief Minister Stalin released a research report that found that the use of iron in Tamil Nadu dates back 4,200 years in the Mayiladumbarai excavations


* Considering the importance of the biodiversity heritage site and the commitment of the Central Government under the leadership of Prime Minister Modi to protect traditional rights, the Union Ministry of Mines announced the cancellation of the tungsten mining auction.


* Strict punishment for sexual offences: Governor Ravi approves the amendment bill.


* The Union Cabinet meeting yesterday approved the continuation of the National Health Scheme for another 5 years and an increase in the minimum support price for jute.


* World Economic Forum Annual Meeting: Leaders call for AI reforms.


* Australian Open Tennis Tournament: Aryna Sabalenka advances to the final.


* Indonesia Masters Badminton Tournament: Lakshya Sen wins and advances to the next round.




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...