Songs

Wednesday, February 19, 2025

20-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்: 819


 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.


பொருள்:

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும்  உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் களவிலும் துன்பம் தருவதாகும்."


பழமொழி :

சத்துருக்களையும் சித்தமாய் நேசி.


  Love even your enemies heartily.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல,  நீ நினைத்ததை முடிக்கும் வரை.


பொது அறிவு : 


1. இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்


   விடை: பெரம்பூர்

             

 2.தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம் 


விடை:  நெய்வேலி 


English words & meanings :


 Energetic. -   துடிப்புள்ள,

Envy.    -     பொறாமை


வேளாண்மையும் வாழ்வும் : 


மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, தாவரத்திற்கு துணைத் தாவரங்களையும் நட்டு அவற்றின் மூலம் நோயைக் கட்டுப் படுத்தலாம்.


நீதிக்கதை


 நமது எண்ணம் 


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்  குடிக்க தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்குச் சென்றார் .


தாகத்தினால் உயிர் போய்விடுமோ என்று  நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போன்ற வீடு இருப்பதை கண்டார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த இடத்திற்கு சென்று விட்டார்.


அங்கே கையால் அடிக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு குவளையில் தண்ணீரும் வைக்கப்பட்டு இருந்தது. அருகே இருந்த சிறிய அட்டையில் யாரோ எதையோ எழுதி வைத்திருந்தார்கள். அதை அவர் படித்துப் பார்த்தார். அதில், குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.குடித்துவிட்டு மீண்டும் குவளையில் நீரை நிரப்பி வைத்து செல்லவும் என்று எழுதி இருந்தது.


அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா? அதிலிருந்து தண்ணீர் வருமா? என்று சந்தேகமாக இருந்தது.


அந்தப் பம்பு இயங்காவிட்டால் இந்த தண்ணீர் வீணாகி விடுமே என்றும் அவர் மனதில் நினைத்தார்.


அதுக்கு பதிலாக இந்த தண்ணீரை நாம் குடித்து விட்டால் தாகமும் தீரும். உயிர்பிழைக்கவும் உத்தரவாதம் உண்டு.அவன் யோசித்தான். தண்ணீரை குடித்து விடுவது புத்திசாலித்தனம் என்று ஒரு கணம் நினைத்தாலும், ஒருவேளை அதில் எழுதி இருந்ததைப் போல இந்த பம்ப் இயங்கும் நிலையில் இருந்து,  பம்ப் இயங்க தேவையான இந்த தண்ணீரை குடித்து விட்டால் இனி நம்மை போல தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.


அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்த குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டினுள் ஊற்றி அடிக்க ஆரம்பித்தார். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர தண்ணீரை குடித்துவிட்டு அந்த குவளையையும்  நீரால் நிரப்பி வைத்த போது அவரது மனம் நிறைந்து இருந்தது.


 நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல் பயன்படும்படி விட்டுச் செல்ல வேண்டும்.எந்த நன்மையும் நம்முடன் நின்று போக விடக்கூடாது.


இன்றைய செய்திகள் - 20.02.2025


* தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


* 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.


* “விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது” - மத்திய தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்.


* தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும்  என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.


* துபாய் ஓபன் டென்னிஸ் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா  ரைபகினா.

* பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது.


Today's Headlines


*  Tamil Nadu Chief Minister M.K. Stalin has written to Union Minister for Women and Child Development Smriti Irani, requesting her to release the central government's share of funds for various schemes within a specified timeframe.


*  Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Tidal Parks in Trichy and Madurai, which will provide employment opportunities for 12,000 people.


*  "India is making rapid progress in various fields, including space technology," said Union Minister of State for Technology Jitendra Singh.


*  The United Nations has stated that India will experience rapid growth using clean energy and industrialization.


* Dubai Open Tennis: Kazakhstani player Elena Rybakina advances to the next round.


*  MRF team joins British Rally Championship for the 2025 season and obtains the rights to supply all the necessary tires for the tournament




Tuesday, February 18, 2025

19-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 

19-02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்:818


 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

 சொல்ஆடார் சோர விடல்.


பொருள்:

முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை , அவர் அறியுமாறு

 ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்."


பழமொழி :

சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.


 He who has a brother does not fear to fight.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக்கொடுப்பது மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் - விவேகானந்தர்..


பொது அறிவு : 


1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 


 1914 ஆம் ஆண்டு 


 2. உலக சமாதான சின்னம் எது ?


 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :


 Confusedகுழப்பமான,


 Curiousஆர்வமாக


வேளாண்மையும் வாழ்வும் : 


நோயை ஒழிக்க பூச்சிக் கொல்லிகள் உபயோகப் படுத்துவதை விட இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீதிக்கதை

 போட்டி


ஒரு அரசருக்கு மூன்று மகன்கள். அவர்களில் யார் கையில் அரச பதவியை கொடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். ஆகவே அரசர் அவர்கள் மூவருக்கும் போட்டி ஒன்றை வைத்தார். 


 காட்டுக்குச் சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவினை எடுத்து வந்து  ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும் என்றார் அரசர்.


மகன்கள் மூவரும் காட்டிற்குச் சென்றனர். முதலாமவன் மரத்தின் மீது  சிரமப்பட்டு ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டையாக கட்டினான்.

 இரண்டாமவன் மரத்தின் மீது ஏற கஷ்டப்பட்டு கீழே கிடந்த அழுகிய பழங்களை  எடுத்து மூட்டையாக கட்டினான்.


மூன்றாமவன் ஏழை தானே சாப்பிட போகிறார்  என்று அலட்சியத்துடன் நினைத்து வெறும் குப்பைகளை மூட்டையாக கட்டினான்.


 மூவரும் அரசரிடம் வந்தனர். பின்பு அரசர் மூவரையும் பார்த்து, "நான் சொன்ன ஏழைகள் வேறு எவரும் இல்லை நீங்கள்தான்.


நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்களே சாப்பிடுங்கள்" என்று கூறினார். 


நல்ல பழங்களை கொண்டு வந்த முதலாமவனே நன்றாக சாப்பிட்டு  நலமுடன் திரும்பினார். பின்னர் அரச பதவியையும் ஏற்றார்.


நீதி :  நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்



இன்றைய செய்திகள் - 19.02.2025


* வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.


​* போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச் செயலர் முரு​கானந்தம் அறிவித்​துள்ளார்.


* புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


* தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


 * கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி.


* 3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே.


Today's Headlines


 * Tamil Nadu Chief Minister M.K. Stalin awarded the "Living Crafts Tradition Award" to 9 skilled craftsmen and the "Poompuhar State Award" to 9 skilled craftsmen.


* The certificates of teachers who were punished in the POCSO cases will be cancelled. Henceforth, police verification certificates will be made mandatory for new teacher appointments, announced Chief Secretary Muruganandam.


* Vivek Joshi, a 1989-batch Indian Administrative Service officer from Haryana, has been appointed as the new Election Commissioner, announced by Ministry of Law.Russia has expressed its readiness to hold talks with Ukrainian President Zelensky if necessary.


* Qatar Open Tennis Tournament: Spanish player Alcaraz qualifies for the 2nd round.


* 3rd One-Day Match: Zimbabwe wins the series by defeating Ireland




Monday, February 17, 2025

18-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

குறள் எண்:817


 நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்

 பத்துஅடுத்த கோடி உறும்.


பொருள்:

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின்

 நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்."


பழமொழி :

Do your duty and then ask for your rights


கடமையை செய்து பின்பு உரிமையைக் கேள்.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


சிரிக்க தெரிந்த மனிதன் தான், உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்.- கலைஞர் கருணாநிதி


பொது அறிவு : 


"1. புகையிலை உலராமல் தடுக்க பயன்படும் பொருள்


விடை: கிளிசரால்


2. இந்திய திட்ட நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது?


விடை: அலகாபாத்"


English words & meanings :


 Calm -  அமைதி,


Cautious -  எச்சரிக்கையாக


வேளாண்மையும் வாழ்வும் : 


களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.


நீதிக்கதை


 ஒரு காட்டு பகுதியில இருக்குற குளத்துக்கு பக்கத்துல ஒரு குரங்கும் ஆமையும் ரொம்ப நண்பர்களா இருந்துச்சுங்க. ஒருநாள் குளத்துல குதிச்ச குரங்கு நீச்சல் அடிக்க முயற்சி செஞ்சுச்சு ,


எப்படி முயற்சி செஞ்சாலும் அதுக்கு சரியா நீச்சல் அடிக்க வரல. அப்ப தண்ணியில குதிச்ச ஆமை ரொம்ப அழகா நீச்சல் அடிச்சுச்சு ,அத பார்த்த குரங்குக்கு ரொம்ப பொறாம வந்திடுச்சு. அப்பத்தான் நீங்க மட்டும் எப்படி சுலபமா நீச்சல் அடிக்கிறீங்க ஆமையாரேனு கேட்டுச்சு குரங்கு. அதுக்கு ஆமை சொல்லுச்சு என்னோட உடம்பு அப்படி இருக்கு எனக்கு இருக்குற பெரிய ஓடு தண்ணியில நீந்த உதவி செய்யுது அதனால தான் என்னால் சுலபமா நீந்த முடியுதுனு சொல்லுச்சு.இத கேட்ட முட்டாள் குரங்கு அடடா சுலபமா நீச்சல் அடிக்க பெரிய ஓடு இருந்தா போதும்னு நம்பிடுச்சு.  உடனே பக்கத்துல இருந்த இலவம் பஞ்சுகள சேகரிச்சு தன்னோட முதுகுல பந்து போல கட்டிகிடுச்சு


ஆமை போல இப்ப தனக்கு பெரிய ஓடு வந்திடுச்சுனு சொல்லிட்டு தண்ணிக்குள்ள குதிச்சுச்சு குரங்கு. தண்ணில குதிச்சதும் பஞ்சு நனைஞ்சு குரங்கை உள்ள அமுக்க ஆரம்பிச்சுடுச்சு. இத பார்த்த ஆமை தன்னோட நண்பர்களை கூப்பிட்டு குரங்கு கட்டியிருந்த பஞ்ச பிச்சி போட்டு ,குரங்கை தண்ணியில இருந்து காப்பாத்துச்சு. தான் முட்டாள் தனமா நடந்துக்கிட்டத நினச்சு வெட்க பட்டுச்சு குரங்கு


நீதி: நம் அனைவருக்கும் கடவுள்  தனித்துவமான திறமைகளைக் கொடுத்து உள்ளார். நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  


மற்றவர்களைப் பார்த்து அதைப் போன்று செய்ய நினைத்தால் தோல்வி தான் கிடைக்கும்


இன்றைய செய்திகள் - 18.02.2025


* கோடைகால மின் தேவையை சமாளிக்க, 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


* சென்னையில்பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் ரூ.5,000 அபராதம்: இடிபாட்டு கழிவுகள் மேலாண்​மை வழிகாட்டு​தல் வெளி​யீடு.


* தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.


* உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


* 6 வது புரோ ஆக்கி லீக் தொடர்: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.


* ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி.


Today's Headlines


* * To meet the summer electricity demand, the Electricity Regulatory Commission has granted permission to the Power Department to purchase 8,525 megawatts of electricity on a short-term contract basis.


* * In Chennai, a fine of Rs. 5,000 will be imposed for dumping construction waste in public places: Guidelines for Construction Waste Management released.


* * An earthquake occurred in Delhi and its surrounding areas yesterday, measuring 4.0 on the Richter scale.


* * Ukrainian President Vladinir Zelensky stated that they will not recognize agreements made without Ukraine's participation.


* In the 6th Pro Archery League, India won by defeating Spain.


* In the ISL football match, East Bengal won by defeating Mohammedan SC



02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...