Songs

Friday, April 11, 2025

11-04-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

இயல்: குடியியல்

குறள் எண்:1009 


அதிகாரம்: நன்றிஇச் செல்வம்


அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.


பொருள்:

அன்பின்றி அறம் செய்யாது சேர்த்த பொருளை எடுத்துக் கொள்வார் யாரோ?


பழமொழி :

No sweet without sweat


வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :


* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 


* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.


பொன்மொழி :


நேற்றிலிருந்து கற்றுக்கொள் ,இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை மட்டும் நிறுத்தாதே.---ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


பொது அறிவு : 


1. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 


விடை: தமிழ்நாடு.


2. இந்தியாவில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது? 


விடை : குஜராத்


English words & meanings :


 Subway      -     சுரங்கப்பாதை 


 Submarine      -     நீர்மூழ்கிக் கப்பல்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நீர் சேமிப்பு உத்திகளில் ஒன்று மழைநீர் சேகரிப்பு ஆகும்.குளங்கள், ஏரிகள், கால்வாய்களை துார்வாருதல், நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்துதல், மழைநீர் பிடிக்கும் குழாய்கள் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை வீடுகளில் நிறுவுதல் ஆகியவை மழைநீரை சேகரிக்கும் வெவ்வேறு முறைகளாகும்.


இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.


அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். ”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.


அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.


“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.


அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.


அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.


நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.


இன்றைய செய்திகள் - 11.04.2025


* சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.


* சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


* வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட சரக்கு முனைய வசதியை நிறுத்தியது இந்தியா.


* அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார்.


* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி.


* ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி கேப்டன்.


Today's Headlines


* The Minister of Micro, Small, and Medium Enterprises (MSME ) Tha.mo. Anbarasan, announced in the legislative assembly that the maximum limit for additional investment subsidies for small businesses will be increased from ₹5 lakh to ₹10 lakh.


   * An agreement was signed in the presence of Chief Minister M.K. Stalin with Dixon Technologies Limited at the IndoSpace Industrial Park in Oragadam, Chennai, for an investment of ₹1,000 crore, creating 5,000 job opportunities.

 

   * India has stopped the cargo terminal facility provided to Bangladesh.

 

   * The trade war between the United States and China has intensified. Following Trump's increase of tariffs on Chinese goods to 104%, Chinese President Xi Jinping has raised tariffs on American goods to 84%.

 

   * Asian Badminton Championship: P.V. Sindhu won her first-round match.


   * IPL 2025: Dhoni will captain Chennai Super Kings again.





Thursday, April 10, 2025

 வணக்கம் நண்பரே...

VIP நிறுவனத்தின் அற்புதமான மற்றொரு உருவாக்கம்....

ஒத்தக்கடை அருகில் 

Investment செய்வதற்கு ஏற்ற இடம் 

விரும்பினால் தங்கள் இல்லத்தில் இருந்து இடத்தை பார்வையிட வாகன வசதி முழுமையாக செய்து தரப்படுகிறது...

வருங்காலத்தில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வரவிருக்கிறது 

முழுமையாக அப்ரூவல் செய்யப்பட்ட இடங்கள் 

இடத்தின் அளவு விவரங்கள் மற்றும் விலை விபரங்களுடன்...

விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்










விலை விவரம் 





Tuesday, April 8, 2025

08-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: காலம் அறிதல்


குறள் எண்:483


அறுவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்?


பொருள் :(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?


பழமொழி :

Blessings are not valued till they are gone


நிழலின் அருமை வெயிலில் தெரியும்.


இரண்டொழுக்க பண்புகள் :  


*இறைவனின் படைப்பில் அற்புதமானது மனித வாழ்க்கை .எனவே, என் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும்  எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டேன். ‌‌


*குழந்தைகளை வழிதவறச் செய்யும் பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :


தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம். –ஜான் ஹெர்சி


பொது அறிவு : 


1. வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது?


விடை: கந்தக அமிலம்


2. திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?


விடை: வேதாரண்யம்


English words & meanings :


 muddy-சேறு,


 sludge-கசடு


வேளாண்மையும் வாழ்வும் : 


ஆடி மாதம், ஆடிப் பெருக்கு என்றழைக்கப்படும், ஆடி 18க்குப் பிறகு விவசாயிகள், விவசாயம் செழிக்க விதைக்க தொடங்குவார்கள்.

நீதிக்கதை


 அழகு ஆபத்துக்கு உதவாது


ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. வயிறு முட்ட நீரை பருகியது.


அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.


சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.


மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை.


புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.


இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.


“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.


மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தன் கொம்புகளை 


மரக்கிளையிலிருந்து விடுவித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது.




Monday, April 7, 2025

07-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயற்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 இயல் :குடியியல்               

குறள் எண்:1006


 அதிகாரம் :நன்றிஇச் செல்வம்


ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்.


பொருள்:


தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.


பழமொழி :

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்.


A teacher is better than two books.


இரண்டொழுக்க பண்புகள் :


* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 


* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.


பொன்மொழி :


உன் வேதனை  பலரைச்  சிரிக்க வைக்கலாம். ஆனால்,  உன் சிரிப்பு யாரையும்  வேதனைப்பட வைக்கக்கூடாது.----சார்லி  சாப்ளின்


பொது அறிவு : 


1. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?    


விடை : பிங்கலி வெங்கையா.         


2. காற்றிலுள்ள நைட்ரஜனுக்கு பதிலாக ஆழ்கடலில் மூழ்குபவர்கள் சுவாசிக்க  பயன்படுத்தும் மந்த வாயு எது? 


விடை: ஹீலியம்


English words & meanings :


Aeroplane.    -   விமானம்


Bicycle.     -     மிதிவண்டி 


வேளாண்மையும் வாழ்வும் : 


 மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை துணி துவைக்க பயன்படுத்துங்கள்.


ஏப்ரல் 07


உலக நலவாழ்வு நாள்


உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.


நீதிக்கதை


 அபசகுனம்


அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள கடவுளின் படத்தை தான் பார்ப்பார்.


ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வந்தது. எல்லாம் சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் நடந்தது என்று,அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.


இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.


அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.


அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.


“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.


அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார்.


அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌


இன்றைய செய்திகள் - 07.04.2025


* தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


* 500 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்களின் வீடுகளில் சோலார் பேனல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு.


* நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.


* உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்-18 பேர் பலி.


* உலக குத்துச்சண்டை கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் ஹிதேஷ்.


* சார்லஸ்டன் டென்னிஸ் தொடர்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* This year's fishing ban in Tamil Nadu begins on the coming 15th. This ban will remain in effect for 61 days. Thus, the price of fish is expected to increase from next week.


* The Supreme Court has ordered the Tamil Nadu government to determine the minimum educational qualification for minority educational institute teachers.


* Solar Panel is a must in the homes of families who use 500 units. Kerala Government Announcement.


* India has provided 442 metric tonnes of food items to Myanmar affected by the earthquake.


* Russia's  missile attack on Ukraine. 18 people killed 


* World Boxing Cup: Hitesh set a historic record as the first Indian to advance to the final.


* Charleston Tennis Series: Jessica Begula Progress to the final.







02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...