மூன்றாம் வகுப்பு பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்க
உள்ளங்கையில் ஓர் உலகம்
உலகைச் சுற்றிக் காட்டிடுவேன்
உனக்கு மகிழ்ச்சியைத் தந்திடுவேன்
என்ன வேண்டும் என்றாலும்
எண்ணும் முன்னே சொல்லிடுவேன்
இணைய வழியில் அனைவரையும்
இணைந்தே இருக்கச் செய்திடுவேன்
கடிதம் அனுப்ப வேண்டுமென்றால்
https://youtube.com/playlist?list=PLOOtVdhsXANBLv-BlmjAvlfL9g-gQ0UkW&si=mIHh-fCZAEu_Udv7
விரைந்தே அனுப்பத் துணைபுரிவேன்
தகவல் களஞ்சியம் நான்தானே
தரணி போற்றி மகிழ்ந்திடுமே
உலகைச் சுருக்கி உன்கையில்
உலவிடும் கணினி நான்தானே
என்றும் ஓய்வு எனக்கில்லை
எதிலும் சோர்வு என்றில்லை
எந்தப் பொருளின் செய்தியையும்
எடுத்துத் தருவேன் ஒருநொடியில்
உள்ளங்கையில் ஓர் உலகம்
உள்ளதைக் காட்டும் கண்ணாடி
என்றே என்னை எல்லாரும்
ஏற்றம் கொண்டே அழைத்திடுவார்.
மழைநீர்
மழைநீர் வெள்ளம் ஓடியே
மண்ணில் வீணாய்ச் செல்லுதே
உழைப்பின் வியர்வை போலவே
உயர்வாய் எண்ண வேண்டுமே!
பொன்னும் பொருளும் போலவே
பொழியும் நீரும் செல்வமே
விண்ணின் கொடை என்பதில்
வியப்பு ஒன்றும் இல்லையே!
குளங்கள் ஏரி நிரம்புமே
குருவி கொக்கும் வாழுமே
வானின் அமுதம் சேமித்தே
வாழ்வைச் செம்மை செய்வமே!
நாடும் வீடும் செழிக்கவே
நல்ல தண்ணீர் வேண்டுமே
ஓடும் நீரைத் தேக்கியே
உலகின் பசியைத் தீர்ப்பமே !
உழவும் தொழிலும் ஓங்கவே
உற்ற துணை மழைதானே
வளமும் நலமும் நிறைந்திட
வணங்கி மழையைப் போற்றுவோம்!
மனிதர் பறவை விலங்குகள்
மகிழ்ந்து வாழத்தேவையே
இனிய மழை வரும்போதே
இல்லம் முழுதும் சேமிப்போம்!
https://youtube.com/playlist?list=PLOOtVdhsXANBLv-BlmjAvlfL9g-gQ0UkW&si=mIHh-fCZAEu_Udv7
No comments:
Post a Comment