Songs

Sunday, December 22, 2024

மூன்றாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தமிழ் பாடல்கள்

மூன்றாம் வகுப்பு பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்க




உள்ளங்கையில் ஓர் உலகம்


உலகைச் சுற்றிக் காட்டிடுவேன் 


உனக்கு மகிழ்ச்சியைத் தந்திடுவேன் 


என்ன வேண்டும் என்றாலும் 


எண்ணும் முன்னே சொல்லிடுவேன்


இணைய வழியில் அனைவரையும்


 இணைந்தே இருக்கச் செய்திடுவேன் 


கடிதம் அனுப்ப வேண்டுமென்றால்

https://youtube.com/playlist?list=PLOOtVdhsXANBLv-BlmjAvlfL9g-gQ0UkW&si=mIHh-fCZAEu_Udv7



 விரைந்தே அனுப்பத் துணைபுரிவேன்


தகவல் களஞ்சியம் நான்தானே


 தரணி போற்றி மகிழ்ந்திடுமே 


உலகைச் சுருக்கி உன்கையில் 


உலவிடும் கணினி நான்தானே


என்றும் ஓய்வு எனக்கில்லை 


எதிலும் சோர்வு என்றில்லை 


எந்தப் பொருளின் செய்தியையும்


 எடுத்துத் தருவேன் ஒருநொடியில்


உள்ளங்கையில் ஓர் உலகம்


 உள்ளதைக் காட்டும் கண்ணாடி


என்றே என்னை எல்லாரும்


 ஏற்றம் கொண்டே அழைத்திடுவார்.


மழைநீர்


மழைநீர் வெள்ளம் ஓடியே 


மண்ணில் வீணாய்ச் செல்லுதே 


உழைப்பின் வியர்வை போலவே


 உயர்வாய் எண்ண வேண்டுமே!


பொன்னும் பொருளும் போலவே


 பொழியும் நீரும் செல்வமே 


விண்ணின் கொடை என்பதில் 


வியப்பு ஒன்றும் இல்லையே!


குளங்கள் ஏரி நிரம்புமே


 குருவி கொக்கும் வாழுமே 


வானின் அமுதம் சேமித்தே 


வாழ்வைச் செம்மை செய்வமே!


நாடும் வீடும் செழிக்கவே 


நல்ல தண்ணீர் வேண்டுமே 


ஓடும் நீரைத் தேக்கியே


 உலகின் பசியைத் தீர்ப்பமே !


உழவும் தொழிலும் ஓங்கவே 


உற்ற துணை மழைதானே 


வளமும் நலமும் நிறைந்திட 


வணங்கி மழையைப் போற்றுவோம்!


மனிதர் பறவை விலங்குகள்


 மகிழ்ந்து வாழத்தேவையே


 இனிய மழை வரும்போதே 


இல்லம் முழுதும் சேமிப்போம்!


https://youtube.com/playlist?list=PLOOtVdhsXANBLv-BlmjAvlfL9g-gQ0UkW&si=mIHh-fCZAEu_Udv7



No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...