Songs

Sunday, February 16, 2025

17-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.2.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்:816

 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்

 ஏதின்மை கோடி உறும்.


பொருள்:

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின்

 நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்."


பழமொழி :

தோலுக்கு அழகு செங்கோல் முறைமை.  


A sceptre of justice is the beauty of royalty.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


தெரியாது  என்பதை தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள் ...அதை நேரம் தெரியாததைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். -அப்துல் கலாம்.


பொது அறிவு : 


1.பெட்ரோல் காரை கண்டுபிடித்தவர் யார் ? 


 கால் பென்ஸ், 1888 . (ஜெர்மனி).


 2. நீராவியைக் கண்டுபிடித்தவர் யார் ?


 நிகோலஸ் குறாட்,1769. (பிரான்ஸ்).


English words & meanings :


 Anxiety - பதட்டம்,


Brave - துணிச்சல்


வேளாண்மையும் வாழ்வும் : 


களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.


நீதிக்கதை

 கற்றல் 


 ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சொல்லிக் கொடுத்த குருநாதர் மீது சீடனுக்கு கோபம். தன் நேரம் *வீணாவதாய்* வருந்தினான்.


அவனுக்கு விஷயங்களை புரிய வைக்க நினைத்த குரு,கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்து கோழிகளை திறந்து விடச் சொன்னார்.


 சீடன் திறந்து விட்டான். இப்போது திறந்துவிட்ட 10 கோழிகளையும் பிடித்து வர சொன்னார்.பத்தும் பத்து திசையில் ஓடிவிட்டன. அதனை பிடிக்க ஓடி ஓடி களைத்துப் போனான் சீடன். இப்போது குரு கழுத்தில் சிவப்பு நாடா கட்டப்பட்டிருக்கும் கோழியை மட்டும் பிடித்து வருமாறு கூறினார். அந்த ஒரு கோழியை மட்டும் குறி வைத்து துரத்தினான்.சிறிது நேரத்தில் பிடித்தும் விட்டான். 

குரு,"ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று. பலவற்றைப் பிடிக்க நினைத்தால்,  எல்லாவற்றையும் இழந்து நிற்பாய். அதாவது ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே கற்றுக் கொள்வது நல்லது" என்பதை சீடனுக்கு விளக்கினார்.



இன்றைய செய்திகள் - 17.02.2025


* தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, விதிகளின்படி தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


* ஓட்டுநர் இல்லாத 2-வது மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


* மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


* கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


* ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி.


* கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்க வீராங்கனை  அமண்டா அனிசிமோவா.


Today's Headlines


* Union Education Minister Dharmendra Pradhan has said that the SSA project funds cannot be allocated to Tamil Nadu as per the rules until the national education policy is accepted.


* Metro Rail Company officials said that the 2nd Metro driverless train  will arrive soon.


* ISRO plans to send fruit flies into space in the first trip of the Gayanan project that will send humans to the sky.


* The US state's performance sector, led by billionaire Elon Musk, has announced the cancellation of $ 21 million funded in India to increase the percentage of voters in India.


* ISL Football Series: Chennai's FC team beat Punjab 2-1


* Qatar Open Tennis Tournament: Amanda Anisimova won the championship title



No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...