பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: மருந்து
குறள் எண்:948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
பொருள்: நோய் இன்னதென்றும், அதன் காரணத்தையும் போக்கும் வழியையும் அறிந்து பிழையரப் போக்க வேண்டும்.
பழமொழி :
சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.
A man is affected by his environment.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
*பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி :
தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ,அதுவே உண்மையான கல்வி --சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. இமயமலைச் சரிவுகளில் காணப்படும் காடுகள் ____________
விடை: இலையுதிர் காடுகள்
2.ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்________
விடை : செம்மண்
English words & meanings :
Shooting. - சுடுதல்
Volleyball. - கைப்பந்து
நீதிக்கதை
காகமும் அன்னப்பறவையும்
ஒரு குளத்தின் அருகில் காகம் வசித்து வந்தது. அதற்கும் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அன்னப்பறவையும் வசித்து வந்தது. அந்த அன்னப்பறவை மணிக்கணக்கில் அந்தக் குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும்.
காகத்திற்கு எப்போதுமே தன் நிறத்தை பார்த்து வருத்தமாக இருந்தது. அன்னப்பறவையின் நிறத்தை பார்க்கும் போது காக்கைக்கு பொறாமையாக இருந்தது. ஒருநாள் அந்த அன்னப்பறவையின் நிறத்தை பார்த்துக்கொண்டு காகம், “எனக்கும் இதுபோல் நிறம் வேண்டும்” என்று ஆசைப்பட்டது.
“இந்த அன்னப் பறவைக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகும் வெள்ளை நிறமும் உள்ளது” என்று காகம் யோசித்தது. “ஒருவேளை அந்தப் பறவை எப்போதும் தண்ணீரில் இருப்பதாலும், பல முறை குளிப்பதாலும் தான் வெள்ளையாக இருக்கிறதோ“என்று நினைத்தது.
காகமும், “இனிமேல் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை குளிக்க வேண்டும்” என்று தீர்மானித்தது. அப்படி செய்தால் தானும் அழகாகவும், வெள்ளையாகவும் மாறிவிடலாம் என்று ஆசைப்பட்டது. அந்த ஆசையில் அழகாக மாறும் தன்னுடைய பயிற்சியை காகம் ஆரம்பித்தது.
காகத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அன்னப்பறவையும் மற்ற பறவைகளும் காத்திருந்தன. பலமுறை குளித்த பிறகும் காகத்தின் தோற்றத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தும் காகம் தன் முயற்சியை கைவிட தயாராக இல்லை. ஒரு நாளில் காகம் பலமுறை குளித்தது.
கடைசியில் ஒரு நாள் காகம் காய்ச்சலில் விழுந்தது. அதிலிருந்து நலம் பெற்று வர மிகவும் கஷ்டப்பட்டது. அப்போதுதான் காகம் தன்னுடைய தவறை புரிந்துகொண்டது. தன் முயற்சியை கைவிட்டு, “நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்க பழகிக் கொள்ள வேண்டும்” என்று நினைத்தது. மனதில் அந்த மாற்றம் வந்தபின் காகம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் பறவையாக மாறியது.
நீதி : நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதில் சந்தோஷப்பட வேண்டும்.
இன்றைய செய்திகள்
18.03.2025
* இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
* குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்.
* போலி பாஸ்போர்ட், விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை: மக்களவையில் புதிய குடியுரிமை மசோதா தாக்கல்.
* இந்தியா - நியூசிலாந்து இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.
* ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: தென்கொரிய வீராங்கனை அன்சே யங் சாம்பியன் பட்டம் வென்றார்.
* இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டனின் ஜேக் டிராப்பர்.
Today's Headlines
* In the Indian Army, applications are invited for Agniveer jobs. You can apply for any two categories simultaneously based on merit.
* Group-1, Group-4 Examination announcements will be released in April: DNBSC President SK Prabhakar Information
* Seven years in prison for fake passport, visa fraud: filed a new citizenship bill in Lok Sabha.
* A Defense Agreement is signed between India and New Zealand.
* In All India badminton tournament South Korean player Anse-young won the championship
Indianwells Open International Tennis Tournament: Britain's Jack Dropper won the championship
No comments:
Post a Comment