- 20.03.2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:மருந்து
குறள் எண்:950
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
பொருள்:
நோயாளி, மருத்துவன், மருந்து, துணையாளி என்ற இந்நான்கும் மருத்துவத்தின் கூறுகள்.
பழமொழி :
சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.
Nothing is too great for a clever man.
இரண்டொழுக்க பண்புகள் :
*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.
*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.
பொன்மொழி :
படைப்பாற்றலின் கதவை திறக்கக்கூடிய சாவி கல்வி --அகதா கிறிஸ்டி
பொது அறிவு :
"1. கார்பன் மோனாக்சைடும் ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்?
விடை: நீர்வாயு
2. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: கவிக்குயில் சரோஜினி நாயுடு "
English words & meanings :
Drums - மேளம்
Joke - நகைச்சுவை
வேளாண்மையும் வாழ்வும் :
எதிர்கால உணவுத் தேவைகளைச் சமாளிப்பதற்கான உலகின் திறனைப் பொருத்த விஷயத்தில், பெரும் கவலையளிக்கக்கூடிய இரு தடைகள் நிலமும் தண்ணீரும்தான்
நீதிக்கதை
கருத்துடன் செயல்படு
ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்து போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால்பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோமுறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.
அந்தப் பத்தியில் கருங்கடல் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக்கண்டு கொள்வது என்றும், அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டு இருந்தது.தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக்கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.
இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரையை நோக்கி உடனேபுறப்பட்டான்.
அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான்.
கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.
பல மாதங்களும், வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.
ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால்,எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.
நீதி:செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.
இன்றைய செய்திகள் - 20.03.2025
* சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாநகராட்சிக்கு உட்பட்ட 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மேயர் பிரியா அறிவிப்பு.
* வெம்பக்கோட்டை அகழாய்வில் 87 செ.மீ. ஆழத்தில் பதக்கம், இரும்பு கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
* அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் இஷாராணி பரூவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
* ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.
Today's Headlines
* Chennai Corporation Budget: Mayor Priya has announced that the book reading zones with a roof facility will be set up at an estimated cost of Rs. Two crore
* In the excavation of Vembakkottai at the depth of 87 cm Iron Medal is Discovered: Minister Thangam Thennarasu Informated.
* The Chennai Meteorological Department said that there is a chance of mild rains in Tamil Nadu till March 22.
* The central government has said that the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme is being implemented in the last 10 years.
* US -based Nick Hague, Sunita Williams, Pear Wilmore and Russia Alexander returned to Earth on a Dragon spacecraft of SpaceX.
* Swiss Open Badminton Tournament: India's Isharani Barua won and advanced to the next round.
* IPL Cricket: Tickets for Chennai - Mumbai Tickets have been sold in an hour
No comments:
Post a Comment