Songs

Wednesday, January 29, 2025

30-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண்: 724


கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.


பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."


பழமொழி :

Do good to those who harm you


பகைவனை நேசித்துப்பார்


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 


 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :


வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு , வேடிக்கை பார்த்தவர்க்கும்,விமர்சனம் செய்பவர்க்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.......,


பொது அறிவு : 


1. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?


விடை: தென்பெண்ணை


2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?


விடை: சாரதா கால்வாய்


English words & meanings :


Needle-ஊசி,                                        


Pliers-இடுக்கி 


வேளாண்மையும் வாழ்வும் : 


பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர்.


நீதிக்கதை


 அச்சம் 


அக்பரிடம் ஒரு அறிவாளி, "எனது வேலைக்காரன் ஒருவன் பெரும்தீனிக்காரன். அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள். ஆனால்  அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. மாத இறுதியில் அவனுடைய உடலில் ஒரு கிலோ எடை கூட ஏறக்கூடாது" என்று சவால் விட்டார்.


அக்பரின் சார்பாக பீர்பால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதேபோல் அந்த வேலையாளுக்கு  ஒரு மாதம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. மாத இறுதியில் அவருடைய எடையை பார்த்தபோது, அவருடைய எடை கூடவே இல்லை. அக்பருக்கு ஆச்சரியம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.


 பீர்பால், "அரசரே அவருக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள்  கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய இரவு படுக்கை மட்டும் சிங்கத்தின்  குகையின் அருகே  அமைக்கப்பட்டது.


அதனுடைய கதவின் பூட்டு சரியாக இல்லை என்றும் கூறினேன். அச்சத்தின் காரணமாகவே அவருடைய உடலில் ஊட்டச்சத்து ஒட்டவில்லை.


 நீதி: அச்சமின்மையே ஆரோக்கியம்.



இன்றைய செய்திகள் - 30.01.2025


* தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.


* சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைகின்றன.


* சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* இஸ்ரோ 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.


* ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி.


* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The Tamil Nadu government has permitted a new mini-bus project in Tamil Nadu. Accordingly, minibusses can be operated in expanded areas in Chennai. Also, minibus fares have been raised.


*Chennai Metro made a historical achievement...for the first time in the world, they are building 5 rails in a single pillar.


* The High Court has ordered an interim injunction to the state for excluding the physically challenged people from applying for the cooking assistant job in schools.


* ISRO 100th Rocket GSLV F-15- successfully launched with NVS-02 satellite.


* ISL Callball Tournament: Jamshedpur won the Punjab team.


* ICC Test ranking: Indian player Varun Emperor Progressed to 5th place





Tuesday, January 28, 2025

29-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 783


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்  பண்புடை யாளர் தொடர்பு.


பொருள் : நூலின் நற்பொருள் படிக்கப் படிக்க மேன்மேலும் இன்பம் தருவதைப் போல, நற்பண்புடையவரின் நட்பு ஒருவருக்கு பழகப் பழக இன்பம் தரும்."


பழமொழி :

ஆயிரம் கல் தொலைவு பயணமும் ஒரே ஒரு எட்டில் தான் துவங்குகிறது .


A journey of a thousand miles begins with a single step.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 


 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :


வாய்மைக்கு மிக நெருக்கமான நண்பன் அச்சமின்மையே.---ஜவஹர்லால் நேரு


பொது அறிவு : 


1. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை எது?


விடை : பங்கு வணிகச்சந்தை


2. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது______


விடை: தொழிற்புரட்சி


English words & meanings :


 Hammer.      - சுத்தி           Handsaw -      ஈர்வாள்/ரம்பம்


வேளாண்மையும் வாழ்வும் : 


பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது.


நீதிக்கதை


அன்பு எதையும் சுமக்கும் 


 துறவி ஒருவர்  தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்.அது செங்குத்தான மலை. மலையின் மேலே ஏற ஏற சுமை சற்று அதிகமானதாக தோன்றியதுடன் அவருக்கு  மூச்சு வாங்கியது.


 சற்று தூரம் முன்னால் சென்றபோது மலைவாழ் சிறுமி ஒருத்தி தனது மூன்று வயதுள்ள தம்பியை முதுகில் சுமந்து கொண்டு உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டு  


 மிக சாதாரணமாக மலை உச்சியை நோக்கி ஏறுவதை பார்த்தார்.துறவிக்கோ மிகவும் ஆச்சரியம். அவர் சிறுமியை பார்த்து, "என்னம்மா இவ்வளவு சிறிய பையை தூக்கிக்கொண்டு மலையை ஏற என்னால் முடியவில்லை. உன்னால் எப்படி இவ்வளவு பெரிய பையனை தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது?என்றார்.


அதற்கு  அந்த சிறுமி பதில் சொன்னாள்,"ஐயா நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை. நான்  தூக்கிக் கொண்டிருப்பது எனது தம்பியை என்றாள்.துறவிக்கு புரிந்தது அன்பு எதையும் சுமக்கும் என்று. 



இன்றைய தலைப்புச் செய்திகள்


* பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


* இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவத் தயாராக உள்ளது. வரைபடங்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நேவிக் நிறுவனத்தின் 2வது தலைமுறை செயற்கைக்கோளை நாளை ஏவும் முக்கியமான பணியை இது மேற்கொள்ளும்.


* இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகை தந்து தொல்பொருள் இடங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களை பார்வையிடும்.


* ஊட்டி: ஈஸ்வரன் கோயில் திருவிழாவின் போது பாரம்பரிய படுகர் மக்களின் வண்ணமயமான குடை ஊர்வலம். பக்தர்கள் 600 படிகள் நடந்து விழாவைக் கொண்டாடினர்


* நம் நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய, வின்ஃபாஸ்ட் தூத்துக்குடியில் ஒரு அதிநவீன கார் தொழிற்சாலையை கட்டி வருகிறது.


* பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. த்ரிஷா சதத்துடன் வரலாறு படைத்தார்.


Today's Headlines

* The Tamil Nadu government has announced that the law providing strict punishment for crimes against women will come into effect from January 25.

* ISRO is ready to launch its 100th rocket from Sriharikota in Andhra Pradesh. It will carry out the important mission of launching NavIC's 2nd generation satellite, which will provide services including maps, tomorrow.

* A seven-member team of Indian Foreign Service officers will visit Tamil Nadu and visit various landmarks including archaeological sites and archaeological sites.

* Ooty: The traditional Padukar people's colorful umbrella procession during the Easwaran temple festival. Devotees celebrated the festival by walking 600 steps

* To meet the demand for electric vehicles in our country, Winfast is building a state-of-the-art car factory in Thoothukudi.

* India beat Scotland by 150 runs in Women's T20 World Cup. Trisha creates history with century







Monday, January 27, 2025

28-01-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 - 28-01.2025

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண்: 114


தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்  படும் .


பொருள் : ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால் தெரியப்படும். நேர்மையானவர்களுக்கு பண்புடைய  மக்கள் பிறப்பதும்,நேர்மை தவறுவோர்க்கு நல்ல மக்கள் அமையாமல் போவது உலகியல் மரபு."


பழமொழி :

He that can stay obtains.


பொறுத்தார் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 


 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :


கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது. ---ஆஸ்கர் வைல்ட்


பொது அறிவு : 


1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?


விடை: குதிரை


2.மாநிலத்தின் கீழுள்ள நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றவை எது?


விடை: உயர்நீதிமன்றம்


English words & meanings :


 Fence- வேலி                                 


Fertilizer. -  உரம்


வேளாண்மையும் வாழ்வும் : 


சர் ஆல்பர்ட் ஹோவர்ட என்பவர்தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்


.நீதிக்கதை


 பொம்மை 


ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது நான்கு வயது தங்கையை அழைத்துக் கொண்டு  கடைத்தெரு வழியாக சென்றான்.


 ஒரு கடையிலிருந்து பொம்மையை பார்த்து, தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை உனக்கு வேண்டும்" என்று கேட்டான்.


அவள் விரும்பிய பொம்மையை வாங்கி கையில் கொடுத்துவிட்டு பெரிய மனித தோரணையுடன் கடைக்காரரைப் பார்த்து, "அந்த பொம்மை என்ன விலை? என்றான்.


 அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக் கொண்டே,"உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? என்று கேட்டார்.


அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேகரித்து வைத்திருந்த சிற்பிகளை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தான். இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கவலையான முகத்தை பார்த்துக் கொண்டே," எனக்கு நான்கு சிப்பிகள் போதும் மீதியை நீயே எடுத்துக்கொள்" என்றார்.


சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி இருந்த சிற்பிகளையும் தன் தங்கையுடன் அந்த 


பொம்மையையும் எடுத்துக் கொண்டு சென்றான். 


இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கடையின் வேலையாள் தனது முதலாளியிடம், " ஐயா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை எடுத்துக்கொண்டு விலையுயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா" என்று கேட்டார்.


அதற்கு  முதலாளி, "அந்த சிறுவனுக்கு  பணம்  கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்  என்பது புரியாத வயது  அவனைப் பொறுத்தவரை அவனிடம் உள்ள சிப்பிகளே உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவனுடைய மனதில் பணம் தான் உயர்ந்தது என்ற எண்ணம் வந்துவிடும்.


அதனை நான் தடுத்து விட்டேன். மேலும், தனது தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர இயலும் என்ற தன்னம்பிக்கையும் அவனது மனதில் விதைத்து விட்டேன்"என்றார்.


மேலும்,"என்றாவது ஒருநாள் அவன் பெரியவனாகி இதை நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற எண்ணம் அவன் மனதில் எழும் ஆகையால் அவனும் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வான்" என்றும் கூறினார்.


நீதி: இந்த உலகம் அன்பாலும், மனிதத் தன்மையாலும் கட்டமைக்கப்பட வேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.01.2025


*தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு.


* 'திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக் கல்வித்துறை சாதனை.


* தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால் உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


* உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.


* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


* மகளிர் ஹாக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்.


* பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்.


Today's Headlines


* Under the 'Efficient Classroom' program, 22,931 smart boards were set up in 7 months, a great achievement in record time in the school education department.


* Court order to remove party flag poles from public places and roads in Tamil Nadu within 12 weeks.


* Roadside barriers made of bamboo cuttings are being erected on national highways to avoid casualties during accidents.


* The General Civil Code came into force in the state of Uttarakhand from yesterday.


* President Donald Trump ordered to lift the embargo  on the supply of explosives to Israel by Former US President Joe Biden


* Women's Hockey India League: Odisha Warriors are champions.


* Big Bash Final: Hobart Hurricanes beat Sydney Thunder to become champions




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...