Songs

Wednesday, February 5, 2025

06-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:809


 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

 விடாஅர் விழையும் உலகு.


பொருள்:உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்."


பழமொழி :

அடக்கம் ஆயிரம் பொன் தரும். 


Humility will give one thousand bucks.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :


கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்


பொது அறிவு : 


1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்? 


விடை : ஜேம்ஸ் வாட்.


2. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து ____________மீட்டர் உயரமுடைய பெரும்பாறை ஒன்றில் அமைந்துள்ளது 


விடை : 70


English words & meanings :


Cumin-சீரகம்


Curry Leaf-கறிவேப்பிலை 


வேளாண்மையும் வாழ்வும் : 


நாம் எப்படி நில மேலாண்மை செய்தால்  விவசாயத்தை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். அதில் பயிர் வளர்ச்சிக்கு முதன்மையான தழைச் சத்து சரியான நேரத்தில் சரியான அளவு கிடைக்கும் படி பார்க்க வேண்டும். 


நீதிக்கதை


சூரியனும்... குகையும்...


சூரியனும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தன. குகையால் ஒளி என்றால் என்ன? என்பதையும் என்றால் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள தெரியவில்லை. அதேபோல் சூரியனுக்கு இருட்டு என்றால் என்ன? என்றே தெரியவில்லை. 


எனவே இருவரும் தத்தமது இடத்தை மாற்றிக்கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள விரும்பினர். குகை வானத்தில் ஏறி சூரியனின் இடத்திற்கு சென்றது. சூரியன், பூமிக்கு இறங்கி வந்து குகையின் இருப்பிடத்துக்குச் சென்றது. 


சூரியனின் இடத்தை தற்போது அடைத்திருந்த குகை, அருமை! வெளிச்சம் என்றால் என்ன என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவும் தெளிவாகத் தெரிகின்றன. நன் இதற்கு முன் எவ்வளவு கீழ்மையாக வாழ்த்தேன் என்பது இப்போதுதான் புரிகிறது?" என்றது குகை     குகையின் இருப்பிடத்தை அடைத்திருந்த சூரியனோ, எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றது.  


அறிவுள்ளவர்களைப் பொறுத்தவரை. அவர்கள் அறியாமை நிறைந்தவர்களின் பெரும் கூட்டத்தில் இருந்தாலும் அந்த அறியாமை அவரை சிறிதும் பாதிக்கப் போவதில்லை. தன்னுடைய ஞானத்தின் ஒளியில் அவர் எப்போதும் தெளிவாகவே இருப்பார். 



இன்றைய தலைப்புச் செய்திகள்!

‣ நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு. உணவு பதப்படுத்தும் கூடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறந்து வைக்கிறார

‣ குடும்பத்தினருக்கே தெரியாமல் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள இந்தியர்கள். ஐரோப்பா செல்வதாகக் கூறிவிட்டு அமெரிக்காவுக்கு பயணம்.

‣ இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி. நாக்பூரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.



* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


* பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுக்கப்பட்டன.


* சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றி வந்த அமெரிக்க விமானம் இந்தியா வந்தடைந்தது.


* காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு.


* 38-வது தேசிய விளையாட்டு போட்டி:  பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன்  தங்கப்பதக்கம் வென்றார்.


* ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கோங்கடி திரிஷா பெற்றுள்ளார்.


Today's Headlines


* Pensions with increased dearness allowance have been credited to the bank accounts of transport pensioners.


* A small piece of broken gold and a bone-pointed tool were found in the ongoing excavations at the Golden Fort.


* A US flight carrying 104 Indians who had illegally immigrated to the US has arrived in India.


* China, Saudi Arabia and Turkey strongly oppose Trump's announcement to 'capture' Gaza.


* 38th National Games: Tamil Nadu's Satish Karunakaran wins gold medal in badminton men's singles.


* India's opening player, Gongadi Trisha, has won the player of the season award in the Junior Women's T20 World Cup



‣ Chief Minister M.K. Stalin to conduct field inspection in Nellai district today. Inaugurate various projects including food processing plant

‣ Indians who have taken refuge in America without their families knowing. Travel to America after claiming to be going to Europe.

‣ First ODI between India and England. Day-night match to be played in Nagpur


Tuesday, February 4, 2025

05-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:808


 கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

 நாள்இழுக்கம் நட்டார் செயின்.


பொருள்:பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும்

 உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்."


பழமொழி :

கருணை உள்ளமே கடவுள் வாழும் அமைதி இல்லம்.   


Where mercy lives that mind itself where GOD lives peacefully.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.


பொன்மொழி :


நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே


பொது அறிவு : 


"1. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) முக்கிய நோக்கம் என்ன?


விடை: வேலைவாய்ப்பை உருவாக்குவது.       


  2.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது?


விடை:  இந்திராகாந்தி"


English words & meanings :


Clove-கிராம்பு,


Coriander-கொத்துமல்லி


வேளாண்மையும் வாழ்வும் : 


உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)


நீதிக்கதை


 இரண்டு மரங்கள்! 


ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது."மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா?"


என்றது.


முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.


குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம். 


அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்" என்றது.


அதற்கு மரம் கூறிய பதில் 'எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு'என்றது.


நீதி :உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை கேளுங்கள்


இன்றைய செய்திகள் - 05.02.2025


* தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


* புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.


* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்.


* சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.


* தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்.


* சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி.


Today's Headlines


* Chief Minister Stalin has said that the "Environment Club" will be created in all schools in Tamil Nadu. Soon a pilicey will be declared for the Environmental Education.


* In order to help with cancer research work, Chennai IIT has released for the first time in the country a cancer gene map.


* Rs.6,626 crore has been allotted for the Railway Projects which are going to be done at Tamil Nadu 


* The number of Indian workers working in Saudi Arabia has risen by two lakhs in the last financial year.


* National Sports Tournament: Tamil Nadu player won gold in the squash competition.


* Chennai Open Tennis: Italian player won in the first round



Monday, February 3, 2025

04-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:806


 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

 தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.


பொருள்:உரிமைவாழ்வின் எல்லையில்

 நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்."


பழமொழி :

தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.   


 Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.


பொன்மொழி :


"உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்."


பொது அறிவு : 


1. கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம் எது?


விடை: சோடியம்      


 2. . கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்?


விடை: மஞ்சள்


English words & meanings :


Cinnamon-இலவங்க பட்டை,


Clove-கிராம்பு 


வேளாண்மையும் வாழ்வும் : 


நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)


நீதிக்கதை


ஒரு மாபெரும் கூட்டம்.புகழ் பெற்ற இரண்டு பேச்சாளர்கள் இடையே போட்டி யாருடைய பேச்சுக்கு அதிக கைத்தட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு.


 கூட்டம் துவங்குவதற்கு முன் இரு பேச்சாளர்களும் ஒரு அறையில் அமர்ந்து அந்தக் கூட்டத்தை பற்றி  பேசிக்கொண்டிருந்தனர்.


அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வரவே அவர் எழுந்து பேசிக்கொண்டே வெளியில் சென்றார் ஆனால் அவர் எழுதிய அன்றைய பேச்சுக்கான குறிப்புகளை மேஜை மேலே மறந்து விட்டு சென்றார்.


 அப்போது அமர்ந்திருந்த மற்றொரு பேச்சாளர் அந்த குறிப்புகளை எடுத்துப் பார்த்தார். அவர் தயாரித்த குறிப்புகளை விட அந்த குறிப்புகள் மிகவும் அருமையாக இருந்தது.


கூட்டம் துவங்கியது.குறிப்புகளை எடுத்துக் கொண்டவர்க்கே முதலில் பேச வாய்ப்பு அமைந்தது. அவரும் தன்னுடைய  குறிப்புகளை விட்டுவிட்டு   எதிர்ப்பேச்சாளர் பேச வைத்திருந்த குறிப்புகளையே தன்னுடைய குறிப்புகள் போல மிகவும் அற்புதமாக பேசி முடித்தார்.


எதிர் பேச்சாளருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. அடுத்து அவர் பேச வேண்டும். அவர் என்ன பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை. மெதுவாக எழுந்து சென்று, மைக்கை பிடித்து, "முதலில் எனக்கு முன்னால் பேசியவருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு தொண்டை கட்டு என்னால் சரியாக பேச முடியாது. எனது உரையை நீங்கள் வாசிக்க முடியுமா? என்று கூட்டம் துவங்குவதற்கு முன் கேட்டேன். அவர் பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்" என்று  கூட்டத்தை பார்த்து கூறி அமர்ந்தார்.


நீதி :  சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவன் தான் புத்திசாலி 


இன்றைய செய்திகள் - 04.02.2025


* கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.


* ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


* அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.


* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.


* சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.


Today's Headlines


* The  High Court has dismissed a petition seeking the return of vehicles carrying medical waste from Kerala to Kumari and ordered them to be auctioned.


* The UGC has issued notices to 18 medical colleges across the country, including 2 colleges in Tamil Nadu, for not following anti-ragging regulations.


* Canadian Prime Minister Justin Trudeau has announced a 25 percent tax on American goods.


* Davis Cup tennis: Indian team wins by defeating Togo.


* International chess tournament: Praggnanandhaa defeats Kukesh to become champion.




2024-25 ஆண்டில் செலுத்திய வருமான வரி- 11 மாத சம்பளத்தை பார்ப்பது எப்படி

Please click this link 

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.

ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...