Songs

Friday, February 7, 2025

10-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

குறள் எண்:811


பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை

பெருகலின் குன்றல் இனிது.


பொருள்:அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின்

நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.


பழமொழி :

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை     


Distance lends enchantment to the view


இரண்டொழுக்க பண்புகள் :  


 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன். 


* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :


மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. - சுப்பிரமணிய பாரதியார்


பொது அறிவு : 


1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி

விடை: சோனார். 


2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை

விடை : நீர் ஆற்றல்


English words & meanings :


Ginger-இஞ்சி,


Cardamom-ஏலக்காய் 


வேளாண்மையும் வாழ்வும் : 


பூச்சிகள் மற்றும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் ஊடு பயிரும் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ள தழைச் சத்தை மண்ணில் அதிகரிக்கும்.


நீதிக்கதை

 ரகசியம் 


ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அந்த துறவிக்கு யார் என்ன அவமானப்படுத்தினாலும் கோபமே வராது. அவருடைய சிஷ்யருக்கு அந்த ரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார்.


 ஒருநாள் குருவிடம் சென்று, குருவே! யார் என்ன அவமானப்படுத்தினாலும் தங்களுக்கு கோபமே வருவதில்லையே ஏன்? அந்த ரகசியம் என்ன என்னிடம் கூறுங்கள்" என்று கேட்டார்.


அதற்கு குரு, " ஏரியில் உள்ள காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம்.ஒரு நாள் அவ்வாறு தியானம் செய்யும்பொழுது என்னுடைய படகை மற்றொரு படகு வந்து முட்டியது.


இப்படி யார் அஜாக்கிரதையாக வந்து முட்டியது? என்று மிகவும் கோபத்துடன்   கண்களைத் திறந்து பார்த்தால், அது வெற்று படகு. காற்றினால் அசைந்து அசைந்து வந்து என்னுடைய படகின் மீது முட்டி இருக்கிறது.என் கோபத்தினை அந்த வெற்று படகின் மீது காட்டி என்ன பயன்? 


அதுபோல் தற்போது என்னை யாராவது கோபப்படுத்தினால் அந்த வெற்றுப் படகின் ஞாபகம் தான் எனக்கு வரும்.இதுவும் வெற்று படகு தான் என்று அமைதியாக இருந்து விடுவேன்". என்று தனது ரகசியத்தை விளக்கிக் கூறினார்.


இன்றைய செய்திகள்

10.02.2025

* மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னையின் எப்.சி அணி.

* தேசிய விளையாட்டுப் போட்டி:  போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவித்ரா.


Today's News


10.02.2025


* 800-year-old Pandya-era inscriptions have been discovered on a hillside near Madurai.


* Transport officials have said that steps are being taken to provide bus passes to 35.12 lakh students in the coming academic year.


* ISRO successfully conducted tests of the CE20 cryogenic engine used for the Gaganyaan project at the test center in Mahendrigiri.


* ISL. Football: Chennai FC team won by defeating East Bengal.


* National Games: Tamil Nadu athlete Pavithra won gold in the pole vault competition.





Thursday, February 6, 2025

07-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:810


 விழையார் விழையப் படுப பழையார்கண்

 பண்பின் தலைப்பிரியா தார்.


பொருள்:


(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்."


பழமொழி :

தூய்மை என்பது தெய்வபக்திக்கு அடுத்தது.   


Cleanliness is next to Godliness.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன். 


* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :


காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தான் அவற்றை மாற்ற வேண்டும். -- ஆண்டி வார்ஹோல்


பொது அறிவு : 


1. ரத்த வெள்ளை அணுக்களின் வேறு பெயர் என்ன? 


லூக்கோசைட்ஸ்


2. ரத்த சிவப்பணுக்களின் வேறு பெயர் என்ன ? 


எரித்ரோசைட்ஸ்.


English words & meanings :


 Fenugreek Seed-வெந்தயம்,


Garlic-பூண்டு


வேளாண்மையும் வாழ்வும் : 


பயிர் சுழற்சி, பசுந்தாள் எரு, மூடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பேபேசியே குடும்பத்தாவரங்களைப் பயிரிடும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சத்தை  வளி மண்டலத்திலிருந்து எடுத்து பொருத்துகிற்து.


நீதிக்கதை

எலுமிச்சம் பழம்


முதல் நாள் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் அடுத்த நாள், எலுமிச்சம் பழம் கொண்டு வருமாறு பேராசிரியர் கூறினார்.


 ஏன்? எலுமிச்சம்பழம் என்ற வினாவோடு மாணவர்கள் அனைவரும் எலுமிச்சம்பழம் ஒன்றை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தனர்.


"அவரவரின் பெயரின் முதல் எழுத்தை  எலுமிச்சம் பழத்தின் மேல் செதுக்குங்கள்" என்றார் பேராசிரியர். மாணவர்கள் செதுக்கினார்கள். ஒரு கூடை ஒன்றில்  அனைத்து பழங்களையும்  போடச் சொன்னார்.நன்றாக கலந்தார். 


பின்பு மாணவர்கள் அனைவரையும் அவரவர் பழங்களை எடுக்கச் சொன்னார். மாணவர்களும்  அவரவர் தம் முதல் எழுத்தை கொண்டு பழங்களை சரியாக எடுத்துக் கொண்டனர். 


பின்பு எலுமிச்சம் பழத்தின் தோலை அகற்றிவிட்டு கூடையில் போடச் சொன்னார். மீண்டும் கலந்தார். மீண்டும் அவரவர் பழங்களை எடுக்குமாறு கூறினார்.  ஆனால் மாணவர்களால் எடுக்க  இயலவில்லை.


 அப்போது பேராசிரியர்  "தோலை நீக்கிவிட்டால் அனைத்து எலுமிச்சம் பழங்களும் ஒன்றுதான். ஆனால் அதன் சுவை எப்போதும் மாறுவது இல்லை. அதேபோலத்தான் மாணவர்களாகிய நீங்களும் எந்த  சமூக வேறுபாடுகளின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் அனைவரும் மனித பண்புள்ளவர்கள்.  மனிதநேயத்தை எப்போதும் விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரும் பழக வேண்டும். இதுவே உங்களுக்கு முதல் பாடம்" என்று முடித்தார்



இன்றைய செய்திகள் - 07.02.2025


* முழு கொள்ளளவை எட்டிய பார்சன்ஸ் வேலி அணை: கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.


* பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை.


* வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 79% நிறைவு என மத்திய அமைச்சர் தகவல்.


* சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்.


* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி.


Today's Headlines


* Parsons Valley Dam reaches full capacity: Ooty city will not face water shortage in summer.


* Tamil Nadu Public Health Department takes steps to keep necessary medicines in stock at primary health centres as seasonal diseases continue to affect the country at all times.


* Union Minister informs that the work of constructing a fence on the Bangladesh border is 79% completed 


* Chennai Open Tennis: Indian pairs advanced to the quarterfinals.


* First ODI cricket match: India easily defeated England



.

Wednesday, February 5, 2025

06-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:809


 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

 விடாஅர் விழையும் உலகு.


பொருள்:உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்."


பழமொழி :

அடக்கம் ஆயிரம் பொன் தரும். 


Humility will give one thousand bucks.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :


கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்


பொது அறிவு : 


1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்? 


விடை : ஜேம்ஸ் வாட்.


2. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து ____________மீட்டர் உயரமுடைய பெரும்பாறை ஒன்றில் அமைந்துள்ளது 


விடை : 70


English words & meanings :


Cumin-சீரகம்


Curry Leaf-கறிவேப்பிலை 


வேளாண்மையும் வாழ்வும் : 


நாம் எப்படி நில மேலாண்மை செய்தால்  விவசாயத்தை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். அதில் பயிர் வளர்ச்சிக்கு முதன்மையான தழைச் சத்து சரியான நேரத்தில் சரியான அளவு கிடைக்கும் படி பார்க்க வேண்டும். 


நீதிக்கதை


சூரியனும்... குகையும்...


சூரியனும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தன. குகையால் ஒளி என்றால் என்ன? என்பதையும் என்றால் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள தெரியவில்லை. அதேபோல் சூரியனுக்கு இருட்டு என்றால் என்ன? என்றே தெரியவில்லை. 


எனவே இருவரும் தத்தமது இடத்தை மாற்றிக்கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள விரும்பினர். குகை வானத்தில் ஏறி சூரியனின் இடத்திற்கு சென்றது. சூரியன், பூமிக்கு இறங்கி வந்து குகையின் இருப்பிடத்துக்குச் சென்றது. 


சூரியனின் இடத்தை தற்போது அடைத்திருந்த குகை, அருமை! வெளிச்சம் என்றால் என்ன என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவும் தெளிவாகத் தெரிகின்றன. நன் இதற்கு முன் எவ்வளவு கீழ்மையாக வாழ்த்தேன் என்பது இப்போதுதான் புரிகிறது?" என்றது குகை     குகையின் இருப்பிடத்தை அடைத்திருந்த சூரியனோ, எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றது.  


அறிவுள்ளவர்களைப் பொறுத்தவரை. அவர்கள் அறியாமை நிறைந்தவர்களின் பெரும் கூட்டத்தில் இருந்தாலும் அந்த அறியாமை அவரை சிறிதும் பாதிக்கப் போவதில்லை. தன்னுடைய ஞானத்தின் ஒளியில் அவர் எப்போதும் தெளிவாகவே இருப்பார். 



இன்றைய தலைப்புச் செய்திகள்!

‣ நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு. உணவு பதப்படுத்தும் கூடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறந்து வைக்கிறார

‣ குடும்பத்தினருக்கே தெரியாமல் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள இந்தியர்கள். ஐரோப்பா செல்வதாகக் கூறிவிட்டு அமெரிக்காவுக்கு பயணம்.

‣ இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி. நாக்பூரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.



* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


* பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுக்கப்பட்டன.


* சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றி வந்த அமெரிக்க விமானம் இந்தியா வந்தடைந்தது.


* காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு.


* 38-வது தேசிய விளையாட்டு போட்டி:  பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன்  தங்கப்பதக்கம் வென்றார்.


* ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கோங்கடி திரிஷா பெற்றுள்ளார்.


Today's Headlines


* Pensions with increased dearness allowance have been credited to the bank accounts of transport pensioners.


* A small piece of broken gold and a bone-pointed tool were found in the ongoing excavations at the Golden Fort.


* A US flight carrying 104 Indians who had illegally immigrated to the US has arrived in India.


* China, Saudi Arabia and Turkey strongly oppose Trump's announcement to 'capture' Gaza.


* 38th National Games: Tamil Nadu's Satish Karunakaran wins gold medal in badminton men's singles.


* India's opening player, Gongadi Trisha, has won the player of the season award in the Junior Women's T20 World Cup



‣ Chief Minister M.K. Stalin to conduct field inspection in Nellai district today. Inaugurate various projects including food processing plant

‣ Indians who have taken refuge in America without their families knowing. Travel to America after claiming to be going to Europe.

‣ First ODI between India and England. Day-night match to be played in Nagpur


Tuesday, February 4, 2025

05-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:808


 கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

 நாள்இழுக்கம் நட்டார் செயின்.


பொருள்:பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும்

 உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்."


பழமொழி :

கருணை உள்ளமே கடவுள் வாழும் அமைதி இல்லம்.   


Where mercy lives that mind itself where GOD lives peacefully.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.


பொன்மொழி :


நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே


பொது அறிவு : 


"1. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) முக்கிய நோக்கம் என்ன?


விடை: வேலைவாய்ப்பை உருவாக்குவது.       


  2.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது?


விடை:  இந்திராகாந்தி"


English words & meanings :


Clove-கிராம்பு,


Coriander-கொத்துமல்லி


வேளாண்மையும் வாழ்வும் : 


உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)


நீதிக்கதை


 இரண்டு மரங்கள்! 


ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது."மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா?"


என்றது.


முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.


குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம். 


அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்" என்றது.


அதற்கு மரம் கூறிய பதில் 'எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு'என்றது.


நீதி :உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை கேளுங்கள்


இன்றைய செய்திகள் - 05.02.2025


* தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


* புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.


* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்.


* சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.


* தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்.


* சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி.


Today's Headlines


* Chief Minister Stalin has said that the "Environment Club" will be created in all schools in Tamil Nadu. Soon a pilicey will be declared for the Environmental Education.


* In order to help with cancer research work, Chennai IIT has released for the first time in the country a cancer gene map.


* Rs.6,626 crore has been allotted for the Railway Projects which are going to be done at Tamil Nadu 


* The number of Indian workers working in Saudi Arabia has risen by two lakhs in the last financial year.


* National Sports Tournament: Tamil Nadu player won gold in the squash competition.


* Chennai Open Tennis: Italian player won in the first round



02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...