Songs

Monday, March 3, 2025

04-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:850

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.


பொருள்:உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.


பழமொழி :

Time stoops to no man's cure.


காலம் யார் கணிப்புக்கும் அடிபணியாது


இரண்டொழுக்க பண்புகள் :  


 *நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன். 


*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.


பொன்மொழி :


மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான் ---சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு : 


1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?


விடை: மொழி


2. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?


விடை: மதுரை


English words & meanings :


 Shock       -     அதிர்ச்சி, 


Shy           -      கூச்சம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 யூரோப்பியன் யூனியன் போன்ற சில அரசாங்கங்கள், கரிம வேளாண்மைக்கு பெரும் அளவில் மானியம் வழங்குகின்றன

நீதிக்கதை

 கண்ணாடி 


ஒரு நாள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தகவல் பலகையில் ஏதோ எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சென்றனர்.


அதில்," உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரை நான் பெட்டிக்குள் அடைத்து விட்டேன். அந்தப் பெட்டி அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ளது. அனைவரும் வந்து பார்த்துச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.


 நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரா,அது யாராக இருக்கும்? என்று அனைவர் மனதினுள் ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதில் காணும் ஆர்வத்தில் அனைவரும் அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றனர். அங்கே ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. 


அனைவரும் அந்த பெட்டியின் உள்ளே  பார்த்தபின் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்தப் பெட்டினுள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. எவர் பார்த்தாலும் அவர்களது முகமே அதில் தெரிந்தது.


 அந்த கண்ணாடியின் அருகில், "உங்கள் வளர்ச்சிக்கு  நீங்கள் தான் காரணம்.நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும்  தடுத்து நிறுத்த முடியாது" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது


நீதி :  உங்கள் வாழ்க்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது.உங்கள் வாழ்க்கையை உங்கள் நண்பனால் மாற்ற முடியாத. நீ நினைத்தால் மட்டுமே உங்களது வாழ்வை மாற்ற முடியும்.


இன்றைய செய்திகள் - 04.03.2025


* தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் இனி கிளாம்பக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


* தமிழக சட்டப்​பேர​வை​யில் வரும் 14-ம் தேதி பட்ஜெட் தாக்​கலின் போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட​வுள்​ளது.


* மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது.


* ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பில் ஐ.டி. ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.  இதில் 80 சதவீதம் பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


* அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கி உள்ளது.


* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.


* சிலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இந்தியாவின் ரித்விக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines


* Buses coming from southern Tamil Nadu will now operate only up to Koyambedu, as announced by the Transport Department.


* The Economic Survey Report will be presented for the first time on February 14, along with the budget, in the Tamil Nadu Legislative Assembly.


* The CUET exam for undergraduate admissions in central universities will be held from May 8 to June 1.


* A study by Hyderabad University found that 80% of IT employees suffer from fatty liver disease.


* The US Blue Ghost lunar lander successfully landed on the moon.


* Indian chess players Praggnanandhaa and Aravindh are performing well in the Braintree Masters International Chess Tournament.


* India's Ritwik pair won the championship title in the Chile Open International Tennis Tournament








Sunday, March 2, 2025

03-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -

03-03-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்: புல்லறிவாண்மை


 குறள் எண்:848


 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 

போஒம் அளவும்ஓர் நோய்.


பொருள்:தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய்,தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்."


பழமொழி :

Well began is half done


நல்ல தொடக்கம் பாதி வெற்றி


இரண்டொழுக்க பண்புகள் :  


 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்


 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்


பொன்மொழி :


தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார் -- பிடல் காஸ்ட்ரோ


பொது அறிவு : 


1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?


விடை: 27


2. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?


விடை: கால்சியம் பாஸ்பேட்


English words & meanings :


 Proud     -  பெருமை


Sad       -   சோகம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்



நீதிக்கதை

 கடல்


 கடலில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அன்று  அவர் நினைத்ததை விடவே அதிகமான மீன்கள் கிடைத்தன. எனவே கடற்கரையில் அவர் "இக்கடல் பெரும்  கொடையாளி" என்று எழுதினார்.


 இளைஞர் ஒருவர் கடலில் முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு கரைக்கு திரும்பினார். அவர் கடற்கரையில், "இந்த கடல் ஒன்றே போதும் நான் மகிழ்ச்சியுடன் வாழ" என்று எழுதினார்.


கடற்கரையில் பந்து விளையாடி கொண்டு இருந்த சிறுவனின் பந்தை, கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த சிறுவன் கடற்கரையில், " இந்த கடல் பெரும் தொல்லை" என்று எழுதினான்.


முதிய பெண்மணி  ஒருவரின் பொருட்களை கடலலை இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த பெண்மணி கடற்கரையில், " இந்த கடல் மிகவும் பேராசை கொண்டது" என்று எழுதினார்.


ஆனால் கடலோ இவர்கள் எழுதியது அனைத்தையும்  அலை ஒன்றை அனுப்பி அழித்துவிட்டு சென்றது.


 மனிதா! இவ்வாறு பிறர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள்.


 உன்னுடைய நட்பும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் எனில்,நீ பிறரின் தவறுகளை  உன் மனதில் இருந்து அழித்துவிடு. வாழ்க்கை சிறக்கும்



இன்றைய செய்திகள் - 03.03.2025


* தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.


* தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.


* உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்.


* துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்




Thursday, February 27, 2025

28-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-28.02.2025

திருக்குறள் 

பால் :பொருட்பால்


அதிகாரம்: புல்லறிவாண்மை


 குறள் எண்:845


கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற

 வல்லதூஉம் ஐயம் தரும்.


பொருள்:

அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்."


பழமொழி :

When one door shuts another open.


ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்


 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்


பொன்மொழி :


கற்றவர்களிடம் கற்பதை விட,  கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொழ்..!---+காரல் மார்க்ஸ்


பொது அறிவு : 


1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது? 


விடை : பிப்ரவரி 28.       


 2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?    


விடை : பஞ்சாப்


English words & meanings :


Lonely. -  தனிமை,


Loving. -   அன்பான


வேளாண்மையும் வாழ்வும் : 


வேம்பு  கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறந்த பூச்சிக் கொல்லி ஆகும்


நீதிக்கதை

 சாவி


ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது, "உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஒரு பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து  விடுகிறாயே எப்படி?


அதற்கு சாவி,"நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.ஆனால், நான் பூட்டின் இதயத்தை 


தொடுகிறேன். என்னுடைய அன்பினால் பூட்டு விரைவில் திறந்து விடுகிறது"என்று பதில் கூறியது.



 நீதி: அன்பே உலகை ஆளும்.



இன்றைய செய்திகள்

28.02.2025

* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

* 25 மருத்துவமனைகளில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

* கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு.

* பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து போட்டி: தென் கொரியா வெற்றி.

Today's Headlines

* The Medical Services Recruitment Board has announced that applications are invited for 425 vacant pharmacist positions in government hospitals.

* Chief Minister Stalin has inaugurated de-addiction treatment and rehabilitation centers in 25 hospitals.

* The Chennai Meteorological Centre has predicted heavy rain in 10 districts, including Kanyakumari and Tirunelveli, today.

* The Central government has spent over ₹400 crore on court cases over the past 10 years, according to government data.

* Hamas has announced its readiness for the next round of ceasefire talks.

* South Korea wins the Pink Women's Cup football tournament






02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...