Songs

Thursday, March 6, 2025

06-03-2025 பள்ளி பாலை வழிபாட்டு செயல்பாடுகள்

 -


06.03.2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: சான்றாண்மை

 குறள்எண்:983


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.


பொருள்:

அன்புடைமை. நாணம், பொதுநலம், இரக்கம், வாய்மை ஐந்தும் குனநிறைவு என்ற கட்டடத்தின் தூண்களாகும்.


பழமொழி :

செயல்கள் தேவை; சொற்களல்ல.


Wanted deeds only, not words.


இரண்டொழுக்க பண்புகள் :   


*  பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     


 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .


பொன்மொழி :


எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல, எவரும் எவருக்கும் மேலானவனும் அல்ல, மனிதர்கள் அனைவரும் சமம்.---தந்தை பெரியார்


பொது அறிவு 


1. உலகின் முதல் கணினி வைரஸை உருவாக்கிய நாடு எது? 


விடை:  பாகிஸ்தான்.    


2. இந்தியாவின் இளைய பிரதமர் யார்?


 விடை: ராஜீவ் காந்தி 


English words & meanings :


 Railway station.     -     தொடர்வண்டி நிலையம்


Zoo.      -    விலங்குகள் பூங்கா


வேளாண்மையும் வாழ்வும் : 


 விவசாய உற்பத்தியில் அதிகப்படியான நீர், கனமழை முதல் அதிகப்படியான நீர்ப்பாசனம் வரை, பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கும், அத்துடன் கட்டிடங்கள்/கட்டமைப்புகளை சேதப்படுத்தும்


மார்ச் 06 இன்று


வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்


நீதிக்கதை


 நாளைய உணவு


சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. 


அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது.


அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்றது காட்டமாய்.இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.


சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில்  ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன.


வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.


‘அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன.


‘இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன




இன்றைய செய்திகள் - 06.03.2025


* வரும் கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.


* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


* இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது.


* இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார்.


* ICC சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.


Today's Headlines


* India's daily electricity demand is expected to increase to 22,000 megawatts this summer, a 10% rise from last year.¹


* The Tamil Nadu government has allocated ₹265 crores as a short-term loan to transport corporations to provide pension benefits to retired transport employees.


* India has seen a significant surge in visa applications, with over 67.5 lakh applications received in 2024 alone.


* The United States has announced plans to impose reciprocal tax rates on several countries, including India, China, Brazil, Mexico, and Canada, starting from April 2


* ICC Champions Trophy: New Zealand, defeated South Africa by 50 runs, will play with  India in the final



Tuesday, March 4, 2025

05-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : சூது

குறள் எண்:931


வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.


பொருள்:வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.


பழமொழி :

Better one word in time than two afterward.


வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் மேற்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன். 


*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.


பொன்மொழி :


உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும் --- அரிஸ்டாட்டில்


பொது அறிவு : 


1. இந்திய விண்வெளி மையம் இஸ்ரோ அமைந்துள்ள இடம் எது?


விடை: பெங்களூரு


2. பாம்பின் நுரையீரல்களின் எண்ணிக்கை என்ன?


விடை: 1


English words & meanings :


 Stress     -    அழுத்தம்


 Suffering     -     துன்பம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 கரிம வேளாண்மைக்கு தொழிலாளிகள் மற்றும் அறிவுத் திறன் ஆகிய இரண்டும் மிக அதிக அளவில் தேவைப்படும்..


நீதிக்கதை

ஒட்டகங்கள்


ஒருவர் குருவிடம் சென்று, "ஓடிக்கொண்டே இருக்கிறேன் பல பிரச்சனைகள். வீட்டில்,வேலை செய்யும் இடத்தில், கிராமத்தில் என்று எங்கு சென்றாலும் பிரச்சனைகள் தான். என்னால் நிம்மதியாக தூங்கவே இயலவில்லை. எனக்கு தீர்வை சொல்லுங்கள்" என்று  முறையிட்டார்.


அப்போது மாலை நேரம்.குரு அவரிடம் தோட்டத்திற்குச் சென்று "ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று பார்த்து வா. அதன் பின் உனக்கு தீர்வை சொல்கிறேன்" என்றார்.


சென்றவர் திரும்பி வந்து "நூறு ஒட்டகங்களும் நின்று கொண்டு தான் இருக்கின்றன" என்று கூறினான். "நல்லது. நீ சென்று நூறு ஒட்டகங்களும் படுத்தபின் அங்கு இருக்கும் ஓய்வறையில் தூங்கிவிட்டு,காலையில் வந்து என்னை பார்" என்று குரு கூறினார்.


" சரி குருவே", என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றவர்,சிறிதும் தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலையில் வந்து  குருவிடம் "ஐயா இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை" என்று கூறினார்.


" என்ன ஆச்சு? " என்றார் குரு. அதற்கு அவர்,"சில ஒட்டகங்கள் தானாகவே படுத்துக் கொண்டன.சில ஒட்டகங்களை மெனக்கெட்டு நான் படுக்க வைத்தேன். சில ஒட்டகங்கள் படுக்கும் பொழுது வேறு சில ஒட்டகங்கள் எழுந்து கொண்டன. ஆக மொத்தத்தில் எல்லா ஒட்டகங்களையும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க இயலவில்லை. அதனால் நான் தூங்குவதற்கு செல்லவே இல்லை" என்று கூறினார்.


குரு சிரித்துக்கொண்டே, "இதுதான் வாழ்க்கை. பிரச்சினைகளை முடிப்பது என்பது ஒட்டகங்களை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாகவே முடிந்து விடும். சில பிரச்சனைகளுக்கு


நாம் தீர்வு காணலாம். சில பிரச்சனைகளை முடிக்கும் போது வேறு சில பிரச்சினைகள் தோன்றும். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால் தான் தூங்க முடியும் என்றால் இந்த உலகத்தில் எவராலும் தூங்க இயலாது.


தீர்க்க முடிந்த பிரச்சனைகளை தீர்த்து விட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு, உங்களுக்கான ஓய்வறையில்  நிம்மதியாக தூங்குங்கள்" என்றார்.


சில நாட்கள் கழித்து, திரும்பி வந்து குருவிடம் அவர், "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான்  நிம்மதியாக இருக்கிறேன்" என்று கூறினார்


.




Monday, March 3, 2025

04-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:850

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.


பொருள்:உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.


பழமொழி :

Time stoops to no man's cure.


காலம் யார் கணிப்புக்கும் அடிபணியாது


இரண்டொழுக்க பண்புகள் :  


 *நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன். 


*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.


பொன்மொழி :


மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான் ---சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு : 


1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?


விடை: மொழி


2. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?


விடை: மதுரை


English words & meanings :


 Shock       -     அதிர்ச்சி, 


Shy           -      கூச்சம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 யூரோப்பியன் யூனியன் போன்ற சில அரசாங்கங்கள், கரிம வேளாண்மைக்கு பெரும் அளவில் மானியம் வழங்குகின்றன

நீதிக்கதை

 கண்ணாடி 


ஒரு நாள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தகவல் பலகையில் ஏதோ எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சென்றனர்.


அதில்," உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரை நான் பெட்டிக்குள் அடைத்து விட்டேன். அந்தப் பெட்டி அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ளது. அனைவரும் வந்து பார்த்துச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.


 நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரா,அது யாராக இருக்கும்? என்று அனைவர் மனதினுள் ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதில் காணும் ஆர்வத்தில் அனைவரும் அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றனர். அங்கே ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. 


அனைவரும் அந்த பெட்டியின் உள்ளே  பார்த்தபின் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்தப் பெட்டினுள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. எவர் பார்த்தாலும் அவர்களது முகமே அதில் தெரிந்தது.


 அந்த கண்ணாடியின் அருகில், "உங்கள் வளர்ச்சிக்கு  நீங்கள் தான் காரணம்.நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும்  தடுத்து நிறுத்த முடியாது" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது


நீதி :  உங்கள் வாழ்க்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது.உங்கள் வாழ்க்கையை உங்கள் நண்பனால் மாற்ற முடியாத. நீ நினைத்தால் மட்டுமே உங்களது வாழ்வை மாற்ற முடியும்.


இன்றைய செய்திகள் - 04.03.2025


* தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் இனி கிளாம்பக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


* தமிழக சட்டப்​பேர​வை​யில் வரும் 14-ம் தேதி பட்ஜெட் தாக்​கலின் போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட​வுள்​ளது.


* மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது.


* ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பில் ஐ.டி. ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.  இதில் 80 சதவீதம் பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


* அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கி உள்ளது.


* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.


* சிலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இந்தியாவின் ரித்விக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines


* Buses coming from southern Tamil Nadu will now operate only up to Koyambedu, as announced by the Transport Department.


* The Economic Survey Report will be presented for the first time on February 14, along with the budget, in the Tamil Nadu Legislative Assembly.


* The CUET exam for undergraduate admissions in central universities will be held from May 8 to June 1.


* A study by Hyderabad University found that 80% of IT employees suffer from fatty liver disease.


* The US Blue Ghost lunar lander successfully landed on the moon.


* Indian chess players Praggnanandhaa and Aravindh are performing well in the Braintree Masters International Chess Tournament.


* India's Ritwik pair won the championship title in the Chile Open International Tennis Tournament








Sunday, March 2, 2025

03-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -

03-03-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்: புல்லறிவாண்மை


 குறள் எண்:848


 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 

போஒம் அளவும்ஓர் நோய்.


பொருள்:தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய்,தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்."


பழமொழி :

Well began is half done


நல்ல தொடக்கம் பாதி வெற்றி


இரண்டொழுக்க பண்புகள் :  


 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்


 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்


பொன்மொழி :


தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார் -- பிடல் காஸ்ட்ரோ


பொது அறிவு : 


1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?


விடை: 27


2. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?


விடை: கால்சியம் பாஸ்பேட்


English words & meanings :


 Proud     -  பெருமை


Sad       -   சோகம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்



நீதிக்கதை

 கடல்


 கடலில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அன்று  அவர் நினைத்ததை விடவே அதிகமான மீன்கள் கிடைத்தன. எனவே கடற்கரையில் அவர் "இக்கடல் பெரும்  கொடையாளி" என்று எழுதினார்.


 இளைஞர் ஒருவர் கடலில் முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு கரைக்கு திரும்பினார். அவர் கடற்கரையில், "இந்த கடல் ஒன்றே போதும் நான் மகிழ்ச்சியுடன் வாழ" என்று எழுதினார்.


கடற்கரையில் பந்து விளையாடி கொண்டு இருந்த சிறுவனின் பந்தை, கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த சிறுவன் கடற்கரையில், " இந்த கடல் பெரும் தொல்லை" என்று எழுதினான்.


முதிய பெண்மணி  ஒருவரின் பொருட்களை கடலலை இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த பெண்மணி கடற்கரையில், " இந்த கடல் மிகவும் பேராசை கொண்டது" என்று எழுதினார்.


ஆனால் கடலோ இவர்கள் எழுதியது அனைத்தையும்  அலை ஒன்றை அனுப்பி அழித்துவிட்டு சென்றது.


 மனிதா! இவ்வாறு பிறர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள்.


 உன்னுடைய நட்பும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் எனில்,நீ பிறரின் தவறுகளை  உன் மனதில் இருந்து அழித்துவிடு. வாழ்க்கை சிறக்கும்



இன்றைய செய்திகள் - 03.03.2025


* தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.


* தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.


* உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்.


* துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...