பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.02.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண் :820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
பொருள்:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து ,பலர் கூடிய மன்றத்தில் பழித்துப்
பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்."
பழமொழி :
The fearless goes into the assembly.
அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
முயற்சி என்பது விதை போல.... அதை விதைத்துக் கொண்டே இரு... முளைத்தால் மரம் இல்லையேல் அது மண்ணிற்கு உரம். - கோ.நம்மாழ்வார்.
பொது அறிவு :
1. வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?
விடை : ரிபோபிளேவின்.
2. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?
விடை: ஜான் டால்டன்
English words & meanings :
Foolishமுட்டாள்தனமான
Gladமகிழ்ச்சி
வேளாண்மையும் வாழ்வும் :
தீமைபயக்கும் பூச்சிகளை அழிக்க உபயோகப் படுத்த படும் கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன.
நீதிக்கதை
முதல் நிலை.
பேராசிரியர் ஒருவர் மூன்று கேள்விகளை கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் எழுதுமாறு மாணவர்களிடம் கூறினார்.
அதில் மிகக் கடினமான கேள்விக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விக்கு 80 மதிப்பெண்களும், எளிதான கேள்விக்கு 60 மதிப்பெண்களும் தருவதாக கூறினார்.
மாணவர்களை ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் அளிக்கக் கூறினார். தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்களில் உள்ள விடைகளை பார்க்காமல் கடினமான கேள்விகளை தேர்ந்தெடுவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தடுத்த கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை தந்தார்.
மாணவர்களோ, "பதில்களையே பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே! கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்கள் சரியாக பதில் எழுதி உள்ளார்களா? என நீங்கள் பார்க்க வேண்டும் அல்லவா?"என்று கேட்டனர்.
அதற்கு அவர் "உங்கள் பதிலுக்காக நான் இந்த தேர்வை வைக்கவில்லை. உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறினார்.
மேலும்,"கடினமாக உழைப்பவர்களே எப்பொழுதும் முதல் நிலையை அடைவார்கள் என்பதை நீங்கள் அறியவே நான் இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறி முடித்தார்.
நீதி: விடாமுயற்சியுடன் கடின உழைப்பும் இருந்தால் எந்த கடினமான செயல்களையும் எளிதாக செய்ய இயலும்.
இன்றைய செய்திகள் - 24.02.2025
* தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.
* தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
* இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
* உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: மனு பாக்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.
* புரோ ஹாக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி.
Today's Headlines
* The Tamil Nadu government has begun the counseling of doctors to select 2,642 doctors tobe appointed in Tamilnadu government hospitals.
* The Chennai Meteorological Centre has announced that there is a possibility of rain in one or two places in Tamil Nadu from February 25 to 28.
* The Ayushman Bharat Yojana is the world's largest government-run health insurance program, and 75 crore people have received its identity cards, according to External Affairs Minister S. Jaishankar.
* Former US President Donald Trump has again alleged that the previous president Joe Biden's administration provided $18 million to aid Indian elections.
* The Indian team, led by Manu Bhaker, has been announced for the World Cup shooting competition.
* In the Pro Hockey League, India defeated Ireland to achieve their fourth victory
No comments:
Post a Comment