Songs

Thursday, January 9, 2025

10-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:799


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்.


பொருள்:கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.


பழமொழி :

A bad day never hath a good night.


 முதல் கோணல் முற்றும் கோணல்.


இரண்டொழுக்க பண்புகள் :  


*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :


பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது. 


பொது அறிவு : 


1. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?


விடை: ரஷ்யா 


 2. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?


விடை: தாய்லாந்து 


English words & meanings :


 Daft – silly; foolish.

 குழந்தைத்தனமான,முட்டாள்தனமான. 


Dairy - a place on a farm where milk is kept and butter, cheese, etc. are made..பால் பண்ணை


வேளாண்மையும் வாழ்வும் : 


வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். அந்த அளவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. 



10-01-25 இன்று 


 உலகின் மிகப் பழமையான சுரங்க தொடர்ந்து பாதை லண்டனில் (1863) திறக்கப்பட்டது.  


முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவர  வெர்சாய் ஒப்பந்தம் (1920)  கையெழுத்திடப்பட்டது.  


நினைவு தினம்


தற்கால சூழலியலின் முன்னோடியான கரோலஸ் லின்னேயஸ் (1778), 


மண்இந்தியாவின் பெப்பீசு மற்றும் நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்தரங்கம் பிள்ளை (1761) ஆகியோரின்  நினைவு தினம். 


பிறந்த தினங்கள்


இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரருமான முதுபெரும் காங்கிரஸ் தலைவர் காளியண்ணன் (1921), 


புகழ் பெற்ற பின்னணி திரைப்பட இசை பாடகர்  பத்ம விபூஷன் முனைவர் கே. ஜே. இயேசுதாஸ் (1940), 


 பிரபல பஞ்சாப் இலக்கியவாதி  பத்ம ஸ்ரீ. குருதையாள் சிங் (1933) ஆகியோரின் பிறந்த தினம்.


நீதிக் கதை: 

"அறிவும் அகநாணமும்"

ஒரு கிராமத்தில் ராமு என்ற ஒருவன் வாழ்ந்தான். அவன் மிகவும் சாமர்த்தியமானவனாக இருந்தாலும், எளிமையாக ஆட்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதையே தனது வாழ்வாகக் கொண்டிருந்தான்.

ஒருநாள், அவன் மற்றொரு கிராமத்தில் சென்று, தங்க மாலையைப் போலவே தோற்றமளிக்கும் கம்பியை மாலையாக மாற்றி விற்றான். அவனிடம் மாலை வாங்கிய சிலர் அதை உண்மையான தங்கம் என்று நம்பி வாங்கினார்கள்.

அந்தக் கம்பி மாலையை வாங்கியவர் வீட்டுக்குச் சென்று தன் மனைவியிடம் பெருமையாக காட்டினார். ஆனால், அவருடைய மனைவி அதைத் தீயில் வைத்து சுத்தம் செய்ய முயன்றபோது, மாலை உருகி கம்பியாக மாறியது. உண்மையை அறிந்த அவர், மிகவும் கோபமடைந்து, கிராம தலைவரிடம் புகார் செய்தார்.

கிராமத்தலைவர், ராமுவை அழைத்து விசாரிக்க, அவன் தனது அறிவாற்றலால் தனது தவறை மறைக்க முயன்றான். ஆனால், தலைவரின் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ராமு தனது தவறை ஒப்புக் கொண்டான்.

தலைவர் ராமுவிடம், "அறிவு உனக்குண்டு. ஆனால், அதை நல்ல வழிகளில் பயன்படுத்த வேண்டும். தவறான வழியில் சென்றால், அது உன்னை கீழே தள்ளிவிடும். ஆட்களுக்குச் சதி செய்வதை விட்டுவிடு," என்று அறிவுரை கூறினார்.

நீதிசாரம்:

அறிவுடன் அகநாணமும் இணைந்தால் மட்டுமே அது நன்மையை தரும். சதி செய்து சம்பாதிப்பது தற்காலிகமானது; நேர்மையால் மட்டுமே நிலையான வெற்றியை அடையலாம்.


முக்கிய  செய்திகள்* 📺


நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாட வலியுறுத்தல்


🗞️ யுஜிசி-யின் புதிய விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்; அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு, பாஜக வெளிநடப்பு!



🗞️ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 3 நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும் என்பதால், மாநகராட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள்!


🗞️ இன்று முதல் 4 நாட்களுக்கு பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்; சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்திற்கு இணைப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு!


🗞️ ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; L&T நிறுவனத் தலைவரின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்!


* Headlines* 📺


An appeal to celebrate the centenary of government schools that have passed one hundred years of existence.


🗞️ The Chief Minister's special resolution against the new rules of the UGC was unanimously passed; Parties including AIADMK, PMK support, BJP walks out!



🗞️ Filing of nominations for the Erode East by-election begins today; As the petition can be filed for only 3 days, elaborate arrangements have been made at the Corporation office!


🗞️ Pongal special buses to operate for 4 days from today; Arrangements for connecting buses from various parts of Chennai to Koyambedu, Kalampakkam, and Madhavaram!


🗞️ Employees should work 90 hours a week; L&T chairman's speech strongly condemned on social media!


Wednesday, January 8, 2025

09-01-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 






பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம் :நட்பு ஆராய்தல்


குறள் எண்:798


உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க

அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு .


பொருள்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும்; அதுபோல் துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.


பழமொழி :

வைகறைத் துயிலெழு. 


 Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.


இரண்டொழுக்க பண்புகள் :  


*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :


செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்.---சுந்தர் பிச்சை.


பொது அறிவு 


1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 


கிழக்கு சகாரா பாலைவனம். 


2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது? 


ஜெர்மனி.


English words & meanings :


Establish - நிறுவு

 Estate -பண்ணை

 Evade - மழுப்பு 


வேளாண்மையும் வாழ்வும் :

  • உணவு உற்பத்தி
    வேளாண்மை மூலம் மக்கட்தொகைக்கு தேவையான உணவுப் பொருட்கள், பருத்தி, எண்ணெய் வித்துகள், கீரைகள், காய்கறிகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

  • பொருளாதார வளர்ச்சி
    ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மைக்கு பெரும் பங்குள்ளது. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் வேளாண்மையை தழுவியே வாழ்கின்றனர்


  • 09-01-25  இன்று 


    வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்.  வெளி நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.  


    புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் (1921) நடைபெற்றது.  


    ஐ. நா. வின் தலைமையகம் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக (1951) திறக்கப்பட்டது. 


    சூரிய மண்டலத்தின் புறவழிக் கோள்கள் முதல் தடவையாக (1992)  கண்டுபிடிக்கப்பட்டன.  


    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ்  ஐ போனை (2007)  சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.  


    மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான ஹர் கோவிந்த் கொரானா (1922), பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் டி  ஆர்.  ராமச்சந்திரன் (1917)  ஆகியோரின் பிறந்த தினம்.

    தெனாலிராமன் மற்றும் கொள்ளையர் கும்பல்

    ஒருநாள் தெனாலிராமன் தனது கிராமத்தில் இருந்தபோது, சில கொள்ளையர்கள் அவருடைய வீட்டை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். தெனாலிராமன் அவர்கள் திட்டத்தை அறிந்து, புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள முடிவு செய்தார்.

    அவருடைய வீட்டின் பின்புறம் ஓர் பெரிய தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி வைத்தார். கொள்ளையர்கள் வந்த போது, அவ்விடத்தை அவர்களுக்கு செல்வங்களால் நிரப்பப்பட்ட களஞ்சியமாக தோற்றமளிக்கச் செய்தார்.

    அவர்கள் அனைத்து "செல்வங்களையும்" எடுத்துச் செல்வதற்காக தொட்டியை காலி செய்ய ஆரம்பித்தனர். அது வெறும் தண்ணீர்தான் என்பதை அவர்கள் உணர்ந்தபோது, அவர்கள் வழுக்கி விழுந்தனர், கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து தங்களது முயற்சியை கைவிட்டனர்.

    தெனாலிராமன் அவர்களது முயற்சியை தோற்கடித்தத뿐மல்லாமல், மற்றவர்களுக்கும் நீதியைக் கூறி, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று பாடம் கற்றுத்தந்தார்.

    கதைதான் சொல்லும் நீதிசாரம்:

    அறிவுக்கும், நகைச்சுவைக்கும் இணைந்தால், எந்த சிக்கலையும் சுலபமாக சமாளிக்கலாம்.

  • கதை


  • இன்றைய செய்திகள் - 09.01.2025


    * பொங்கல் பரிசுத்தொகுப்பு ரெடி... நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்!


    * ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


    * டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு.


    * இஸ்ரோ தலைவராக திரு. நாராயணன். தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து அரசு பள்ளியில் படித்து உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் சேர்ந்தவர் இன்று அதன் தலைவராகி உள்ளார்.


    * ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா - ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'.


    Today's Headlines


    * Pongal gift set ready... Distribution in ration shops from tomorrow!


    * Sriharikota: ISRO has announced that tomorrow's event to connect two 220 kg spacecraft launched on December 30 has been postponed.


    * Improvement in Delhi air pollution levels: Relaxation in vehicle ban.


    * ISRO Chairman Mr. Narayanan. Born in a humble background in Kumari district of Tamil Nadu, he studied in a government school and joined ISRO as an assistant and has become its chairman today.


    * ISL Football Series: FC Goa - Hyderabad FC match 'Draw

  • Annual day dancing practice for kids

     


    Tuesday, January 7, 2025

    08-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

     



    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 

    08-01-2024

    திருக்குறள் 

    பால் : பொருட்பால்

    அதிகாரம்: நட்பு ஆராய்தல்

    குறள் எண்:797


    ஊதியம் என்பது ஒருவற்க்குப் பேதையார்

    கேண்மை ஒரீஇ விடல் .


    பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.


    பழமொழி :

    அழகு சோறு போடாது. 


    One cannot make soup out of beauty


    இரண்டொழுக்க பண்புகள் :  


    *தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


    *தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


    பொன்மொழி :


    நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே.-----ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


    பொது அறிவு : 


    1. இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு


    விடை: ஹீமேட்டாலஜி. 


    2. சுவாச மையம் எது?


    விடை: முகுளம்


    English words & meanings :


     avarice-பணபேராசை,


      greed-பேராசை


    வேளாண்மையும் வாழ்வும் 


    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை பெருகி மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும் விவசாயத்திற்கும் தேவையான நீரை நிலத்தடியில் இருந்து எடுக்க ஆரம்பித்தனர்


    08-01-25  இன்று


     ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியோனார்டோ டாவின்சியின் மோனா லிசா ஓவியம் வாஷிங்டன் தேசிய கலை காட்சியகத்தில் (1963)  காட்சிப்படுத்தப்பட்டது. 


    இத்தாலிய வணிகர் மார்க்கோ போலோ (1324),  இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலி (1642), சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவல் (1941) ஆகியோரின் நினைவு தினம். 


    கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் (1942), உயிரினங்களின் இயற்கை தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவருமான  ஆல்பர்ட் ரஸ்ஸல் வாலஸ் (1823)  ஆகியோரின் பிறந்த தினம்.


    நீதி கதை


    ஒரு நாள் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு நீதிபதி, தனது சேவையை நிறைவேற்றும் பணியில் இருந்தார். ஒரு விவகாரம் பரிசோதிக்கப்படுகிறது, இதில் இரண்டு பேர் தங்கள் சொந்தக் காணியைப் பற்றி வழக்கு நடத்திக் கொண்டிருந்தனர்.

    முதல் நபர் கூறினார், "இந்த நிலம் என் சொந்தமாகும். நான் அதை பத்து வருடங்களாகப் பராமரித்து வருகிறேன்."

    இரண்டாவது நபர் சொன்னார், "நீங்கள் அதை தவறாகப் பராமரித்துள்ளீர்கள். நான் அந்த நிலத்தின் உரிமையாளி."

    நீதிபதி அவர்களைப் பார்த்து, "நீங்கள் இருவரும் கூறுவது சரியல்ல. நிலம் மட்டும் அல்ல, அதோடு நம்பிக்கை, ஆளுமை, பொறுப்பு ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும்," என்று கூறினார்.

    அவர் சொல்லப்பட்ட அறிஞர்களை அழைத்து, நிலத்தின் உரிமையை பற்றிய சான்றுகளை ஆராய்வதற்காக விசாரணை நடத்தினார்.

    கடைசியாக, நீதிபதி ஒரு தீர்மானத்தை அறிவித்து, நிலத்தின் உரிமையை பராமரிக்க மற்றும் பாதுகாக்க நிலையான தீர்வு கண்டு, உண்மையான உரிமையாளருக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தக் கதை நமக்கு உணர்த்தும் பாடம்: உறுதியான நிலைப்பாடு மற்றும் பொறுப்புடன் எதையும் பராமரித்தல் அவசியம்.

    இன்றைய செய்திகள் - 08.01.2025


    * தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி வைரஸ் (HMPV) தானாகவே சரியாக கூடியது, எனவே பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


    * சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது.


    * வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம், மிகவும் பழமையான ஜாரவா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 19 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.


    * இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.


    * மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.


    Today's Headlines


    * As far as Tamil Nadu is concerned, the HMPV virus and its effect can be (HMPV)  recovered by itself, so there is no need to panic,” said M. Subramanian, Minister of Health and Public Welfare.


    * On behalf of the tourism department, the 10th International Balloon Festival will begin on January 10th in Chennai, Madurai, and Pollachi.


    * The Andaman Nicobar Island administration department has recorded a special historical activity by adding the names of 19 people in the electoral roll who belong to the very ancient Jarawa tribal community and issuing them identity cards.


    * A powerful earthquake struck Tibet, situated at the Himalayan foothills. The Death toll rose. The quake was recorded as 7.1 on the Richter scale.


    * Malaysia Open Badminton: Trisha Jolly - Gayatri duo advance to 2nd round

    Monday, January 6, 2025

    07-01-2025 -பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்




    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01-2025

    திருக்குறள் 

    பால் : பொருட்பால்

    அதிகாரம்: நட்பு ஆராய்தல்

    குறள் எண்:797


    ஊதியம் என்பது ஒருவற்க்குப் பேதையார்

    கேண்மை ஒரீஇ விடல் .


    பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.


    பழமொழி :

    அழகு சோறு போடாது. 


    One cannot make soup out of beauty


    இரண்டொழுக்க பண்புகள் :  


    *தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


    *தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


    பொன்மொழி :


    நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே.-----ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


    பொது அறிவு : 


    1. இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு


    விடை: ஹீமேட்டாலஜி. 


    2. சுவாச மையம் எது?


    விடை: முகுளம்


    English words & meanings :


     avarice-பணபேராசை,


      greed-பேராசை


    வேளாண்மையும் வாழ்வும் 


    அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள்



    07-01-25  இன்று 


    கலிலியோ கலிலி ஜுபிடர் கோளின்  துணைக் கோள்களை (1610) கண்டறிந்தார். 


    வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்திற்கு (1894)  காப்புரிமம் பெற்றார். 


    இயற்கையில் கண்டறியக்கூடிய கடைசி தனிமமான ஃபேன்சியத்தை பெண் விஞ்ஞானி மார்க்ரேட் பெரே (1939) கண்டுபிடித்தார்.

    நாசாவின் சேர்வெயர் 7 விண்கலம் விண்ணில் (1968) ஏவப்பட்டது. 


    இயந்திர பொறியாளரும் மின் பொறியாளருமான நிக்கோலா தெஸ்லா (1943) நினைவு தினம். 


    ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்று வரை அறியப்படும் ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி (1943), அபிநய சரஸ்வதி பத்மபூஷன். சரோஜாதேவி (1938), தமிழுக்கு தொண்டாற்றிய  சிவதமிழ்ச்செல்வி. தங்கம்மா அப்பாகுட்டி (1925) ஆகியோரின் பிறந்த தினம்.


     நீதிக்கதை:


    முட்டாளும் சிங்கமும்

    ஒரு காலத்தில், ஒரு மிருககாட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அது மிகவும் பெருமையாக இருந்தது. "இந்த மிருககாட்டில் நான் தான் அரசன்," என்று நினைத்து மற்ற மிருகங்களைப் பிடித்து அழுத்தம் கொடுக்கும்.

    ஒரு நாள், சிங்கம் தன்னுடைய ஆண்மையை எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. அது ஒரு குட்டி நதியின் அருகே போய் தன்னுடைய முகத்தை தண்ணீரில் பார்த்தது. தண்ணீரில் சிங்கத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது.

    அது தன்னைப் பார்த்து: "இங்கே இன்னொரு சிங்கம் இருக்கிறது! அது என்னைவிட வலிமையானதாக இருக்க முடியாது," என்று நினைத்தது. அதை சந்திக்க சிங்கம் தண்ணீருக்குள் குதித்தது. ஆனால் அது வெறும் பிரதிபலிப்பாக இருந்தது என்பதை உணராமல், ஆழமான தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.

    அதனால், பெரிய பேரிலிருந்து தப்பிக்க முடியாமல், சிங்கம் தண்ணீரில் மூழ்கி மறைந்தது.


    நீதி:

    மிகுந்த பெருமை ஒருவரின் முற்றிலும் நாசமாக முடிக்கலாம். எப்போதும் முன் நினைத்து செயல்பட வேண்டும்.



    இன்றைய முக்கிய செய்திகள்

    07.01.2025

    * உதகையை உறைய வைக்கும் உறைபனி பொழிந்துவரும் நிலையில் அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரிக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    * சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

    * ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    * பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.

    * ஹாக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி.

    * மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

    Today's Headlines

    * Avalanche recorded a minus 1 degree Celsius temperature as Ooty was gripped by a freezing cold.

    * Chief Minister M.K. Stalin has announced that an individual or organization will be awarded one million US dollars (about Rs. 8.57 crore) if they help in understanding the Indus Valley Civilization script.

    * Asia's 15th largest air show - Aero India 2025 - will be held in Bengaluru, Karnataka from February 10 to 14, the Defense Ministry has said.

    * China has said that the world's largest dam to be built across the Brahmaputra river will not affect India and Bangladesh.

    * Hockey India League: Tamil Nadu Dragons defeat UP Rudras.

    * Women's Cricket: India's team announced for the ODI series against Ireland


    CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றால் என்னென்ன பண பலன் கிடைக்கும் ?..

     CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றால் என்னென்ன பண பலன் கிடைக்கும் ?..

    உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார் என வைத்துக் கொண்டால் அவர் பணிபுரிந்த காலத்தில் மாதா மாதம் செலுத்திய சிபிஎஸ் தொகைக்குண்டான வட்டியும் அதற்கு ஈடாக அரசு செலுத்தும் தொகைக்கு அதனுடைய வட்டியும் சேரும். தோராயமாக 24 லட்சங்கள் 


    அடுத்து SPF ரூ 20 மற்றும் ரூ 50 இதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை 


    அடுத்து ஈட்டிய விடுப்பு 240 நாட்கள்.  வைத்திருக்கிறீர்கள் என்றால் 

    அதற்கான கடைசி மாதத்தில் வாங்கிய சம்பளத்தில் 8 மாத சம்பளம்

    அடுத்து சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு 180 நாட்கள்..

    இதில் 90 (மூன்று மாத சம்பளம்) நாட்களுக்கு கடைசி மாத சம்பளத்திலிருந்து பணப்பலன் பெறலாம்


    அடுத்து ஒரு ஆசிரியர் 60 வயது முடிந்து பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெறுகிறார் என்றால் அடுத்த மூன்று மாதத்திற்கு மறு நியமனம் பெறலாம் ....(குறிப்பு தங்கள் பணி புரியும் வட்டாரத்தில் ஆசிரியர் பணியிடங்கள் surplus ஆக இருக்கக் கூடாது


    மேற்கண்ட பலன்களில் CPS ஐ  GPF ஆக மாற்றி பென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  முக்கிய இலக்கு என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்

    02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

      பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...