Songs

Tuesday, February 18, 2025

19-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 

19-02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்:818


 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

 சொல்ஆடார் சோர விடல்.


பொருள்:

முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை , அவர் அறியுமாறு

 ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்."


பழமொழி :

சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.


 He who has a brother does not fear to fight.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக்கொடுப்பது மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் - விவேகானந்தர்..


பொது அறிவு : 


1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 


 1914 ஆம் ஆண்டு 


 2. உலக சமாதான சின்னம் எது ?


 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :


 Confusedகுழப்பமான,


 Curiousஆர்வமாக


வேளாண்மையும் வாழ்வும் : 


நோயை ஒழிக்க பூச்சிக் கொல்லிகள் உபயோகப் படுத்துவதை விட இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீதிக்கதை

 போட்டி


ஒரு அரசருக்கு மூன்று மகன்கள். அவர்களில் யார் கையில் அரச பதவியை கொடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். ஆகவே அரசர் அவர்கள் மூவருக்கும் போட்டி ஒன்றை வைத்தார். 


 காட்டுக்குச் சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவினை எடுத்து வந்து  ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும் என்றார் அரசர்.


மகன்கள் மூவரும் காட்டிற்குச் சென்றனர். முதலாமவன் மரத்தின் மீது  சிரமப்பட்டு ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டையாக கட்டினான்.

 இரண்டாமவன் மரத்தின் மீது ஏற கஷ்டப்பட்டு கீழே கிடந்த அழுகிய பழங்களை  எடுத்து மூட்டையாக கட்டினான்.


மூன்றாமவன் ஏழை தானே சாப்பிட போகிறார்  என்று அலட்சியத்துடன் நினைத்து வெறும் குப்பைகளை மூட்டையாக கட்டினான்.


 மூவரும் அரசரிடம் வந்தனர். பின்பு அரசர் மூவரையும் பார்த்து, "நான் சொன்ன ஏழைகள் வேறு எவரும் இல்லை நீங்கள்தான்.


நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்களே சாப்பிடுங்கள்" என்று கூறினார். 


நல்ல பழங்களை கொண்டு வந்த முதலாமவனே நன்றாக சாப்பிட்டு  நலமுடன் திரும்பினார். பின்னர் அரச பதவியையும் ஏற்றார்.


நீதி :  நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்



இன்றைய செய்திகள் - 19.02.2025


* வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.


​* போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச் செயலர் முரு​கானந்தம் அறிவித்​துள்ளார்.


* புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


* தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


 * கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி.


* 3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே.


Today's Headlines


 * Tamil Nadu Chief Minister M.K. Stalin awarded the "Living Crafts Tradition Award" to 9 skilled craftsmen and the "Poompuhar State Award" to 9 skilled craftsmen.


* The certificates of teachers who were punished in the POCSO cases will be cancelled. Henceforth, police verification certificates will be made mandatory for new teacher appointments, announced Chief Secretary Muruganandam.


* Vivek Joshi, a 1989-batch Indian Administrative Service officer from Haryana, has been appointed as the new Election Commissioner, announced by Ministry of Law.Russia has expressed its readiness to hold talks with Ukrainian President Zelensky if necessary.


* Qatar Open Tennis Tournament: Spanish player Alcaraz qualifies for the 2nd round.


* 3rd One-Day Match: Zimbabwe wins the series by defeating Ireland




Monday, February 17, 2025

18-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

குறள் எண்:817


 நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்

 பத்துஅடுத்த கோடி உறும்.


பொருள்:

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின்

 நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்."


பழமொழி :

Do your duty and then ask for your rights


கடமையை செய்து பின்பு உரிமையைக் கேள்.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


சிரிக்க தெரிந்த மனிதன் தான், உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்.- கலைஞர் கருணாநிதி


பொது அறிவு : 


"1. புகையிலை உலராமல் தடுக்க பயன்படும் பொருள்


விடை: கிளிசரால்


2. இந்திய திட்ட நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது?


விடை: அலகாபாத்"


English words & meanings :


 Calm -  அமைதி,


Cautious -  எச்சரிக்கையாக


வேளாண்மையும் வாழ்வும் : 


களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.


நீதிக்கதை


 ஒரு காட்டு பகுதியில இருக்குற குளத்துக்கு பக்கத்துல ஒரு குரங்கும் ஆமையும் ரொம்ப நண்பர்களா இருந்துச்சுங்க. ஒருநாள் குளத்துல குதிச்ச குரங்கு நீச்சல் அடிக்க முயற்சி செஞ்சுச்சு ,


எப்படி முயற்சி செஞ்சாலும் அதுக்கு சரியா நீச்சல் அடிக்க வரல. அப்ப தண்ணியில குதிச்ச ஆமை ரொம்ப அழகா நீச்சல் அடிச்சுச்சு ,அத பார்த்த குரங்குக்கு ரொம்ப பொறாம வந்திடுச்சு. அப்பத்தான் நீங்க மட்டும் எப்படி சுலபமா நீச்சல் அடிக்கிறீங்க ஆமையாரேனு கேட்டுச்சு குரங்கு. அதுக்கு ஆமை சொல்லுச்சு என்னோட உடம்பு அப்படி இருக்கு எனக்கு இருக்குற பெரிய ஓடு தண்ணியில நீந்த உதவி செய்யுது அதனால தான் என்னால் சுலபமா நீந்த முடியுதுனு சொல்லுச்சு.இத கேட்ட முட்டாள் குரங்கு அடடா சுலபமா நீச்சல் அடிக்க பெரிய ஓடு இருந்தா போதும்னு நம்பிடுச்சு.  உடனே பக்கத்துல இருந்த இலவம் பஞ்சுகள சேகரிச்சு தன்னோட முதுகுல பந்து போல கட்டிகிடுச்சு


ஆமை போல இப்ப தனக்கு பெரிய ஓடு வந்திடுச்சுனு சொல்லிட்டு தண்ணிக்குள்ள குதிச்சுச்சு குரங்கு. தண்ணில குதிச்சதும் பஞ்சு நனைஞ்சு குரங்கை உள்ள அமுக்க ஆரம்பிச்சுடுச்சு. இத பார்த்த ஆமை தன்னோட நண்பர்களை கூப்பிட்டு குரங்கு கட்டியிருந்த பஞ்ச பிச்சி போட்டு ,குரங்கை தண்ணியில இருந்து காப்பாத்துச்சு. தான் முட்டாள் தனமா நடந்துக்கிட்டத நினச்சு வெட்க பட்டுச்சு குரங்கு


நீதி: நம் அனைவருக்கும் கடவுள்  தனித்துவமான திறமைகளைக் கொடுத்து உள்ளார். நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  


மற்றவர்களைப் பார்த்து அதைப் போன்று செய்ய நினைத்தால் தோல்வி தான் கிடைக்கும்


இன்றைய செய்திகள் - 18.02.2025


* கோடைகால மின் தேவையை சமாளிக்க, 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


* சென்னையில்பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் ரூ.5,000 அபராதம்: இடிபாட்டு கழிவுகள் மேலாண்​மை வழிகாட்டு​தல் வெளி​யீடு.


* தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.


* உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


* 6 வது புரோ ஆக்கி லீக் தொடர்: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.


* ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி.


Today's Headlines


* * To meet the summer electricity demand, the Electricity Regulatory Commission has granted permission to the Power Department to purchase 8,525 megawatts of electricity on a short-term contract basis.


* * In Chennai, a fine of Rs. 5,000 will be imposed for dumping construction waste in public places: Guidelines for Construction Waste Management released.


* * An earthquake occurred in Delhi and its surrounding areas yesterday, measuring 4.0 on the Richter scale.


* * Ukrainian President Vladinir Zelensky stated that they will not recognize agreements made without Ukraine's participation.


* In the 6th Pro Archery League, India won by defeating Spain.


* In the ISL football match, East Bengal won by defeating Mohammedan SC



Sunday, February 16, 2025

17-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.2.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்:816

 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்

 ஏதின்மை கோடி உறும்.


பொருள்:

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின்

 நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்."


பழமொழி :

தோலுக்கு அழகு செங்கோல் முறைமை.  


A sceptre of justice is the beauty of royalty.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


தெரியாது  என்பதை தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள் ...அதை நேரம் தெரியாததைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். -அப்துல் கலாம்.


பொது அறிவு : 


1.பெட்ரோல் காரை கண்டுபிடித்தவர் யார் ? 


 கால் பென்ஸ், 1888 . (ஜெர்மனி).


 2. நீராவியைக் கண்டுபிடித்தவர் யார் ?


 நிகோலஸ் குறாட்,1769. (பிரான்ஸ்).


English words & meanings :


 Anxiety - பதட்டம்,


Brave - துணிச்சல்


வேளாண்மையும் வாழ்வும் : 


களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.


நீதிக்கதை

 கற்றல் 


 ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சொல்லிக் கொடுத்த குருநாதர் மீது சீடனுக்கு கோபம். தன் நேரம் *வீணாவதாய்* வருந்தினான்.


அவனுக்கு விஷயங்களை புரிய வைக்க நினைத்த குரு,கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்து கோழிகளை திறந்து விடச் சொன்னார்.


 சீடன் திறந்து விட்டான். இப்போது திறந்துவிட்ட 10 கோழிகளையும் பிடித்து வர சொன்னார்.பத்தும் பத்து திசையில் ஓடிவிட்டன. அதனை பிடிக்க ஓடி ஓடி களைத்துப் போனான் சீடன். இப்போது குரு கழுத்தில் சிவப்பு நாடா கட்டப்பட்டிருக்கும் கோழியை மட்டும் பிடித்து வருமாறு கூறினார். அந்த ஒரு கோழியை மட்டும் குறி வைத்து துரத்தினான்.சிறிது நேரத்தில் பிடித்தும் விட்டான். 

குரு,"ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று. பலவற்றைப் பிடிக்க நினைத்தால்,  எல்லாவற்றையும் இழந்து நிற்பாய். அதாவது ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே கற்றுக் கொள்வது நல்லது" என்பதை சீடனுக்கு விளக்கினார்.



இன்றைய செய்திகள் - 17.02.2025


* தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, விதிகளின்படி தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


* ஓட்டுநர் இல்லாத 2-வது மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


* மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


* கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


* ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி.


* கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்க வீராங்கனை  அமண்டா அனிசிமோவா.


Today's Headlines


* Union Education Minister Dharmendra Pradhan has said that the SSA project funds cannot be allocated to Tamil Nadu as per the rules until the national education policy is accepted.


* Metro Rail Company officials said that the 2nd Metro driverless train  will arrive soon.


* ISRO plans to send fruit flies into space in the first trip of the Gayanan project that will send humans to the sky.


* The US state's performance sector, led by billionaire Elon Musk, has announced the cancellation of $ 21 million funded in India to increase the percentage of voters in India.


* ISL Football Series: Chennai's FC team beat Punjab 2-1


* Qatar Open Tennis Tournament: Amanda Anisimova won the championship title



Thursday, February 13, 2025

14-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: தீ நட்பு

 குறள் எண்:815

 செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை

 எய்தலின் எய்தாமை நன்று.

பொருள்:காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்."

பழமொழி :

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.   

Where there is anger, there may be excellent qualities.

இரண்டொழுக்க பண்புகள் :  

  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  

*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.

பொன்மொழி :

நீ எதுவாக இருக்க விரும்புகிறாயோ அதற்கு அருகில் சென்று விட முனைந்து செயல்படு.-சாக்ரடீஸ்

பொது அறிவு : 

1. ஈராக் நாட்டின் தலைநகரம்?

விடை:பாக்தாக்

2. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்ட பெறுவர் யார்?

விடை:  பாரதிதாசன்

English words & meanings :

 Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. 

பெயர் சொல். both homonyms 

வேளாண்மையும் வாழவும் : 

"கையால் களையெடுப்பது

பூண்டு, லவங்க எண்ணெய், வெண்காரம்

சாப்பட்டு உப்பை தெளித்தல்"


நீதிக்கதை

மகிழ்ச்சி 

ஒரு ஊரில் ஒருவர் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். அதிக லாபம் இல்லை என்றாலும், தனது வாழ்க்கையை மகிழ்வுடன் நடத்தி வந்தார்.

அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தை பற்றிய ஒரு வதந்தி பரவிக் கொண்டிருந்தது. பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் பொழுது,நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.

இதனைக் கேட்ட அவர், உடனே தனது வியாபாரத்தை விட்டுவிட்டு, மறுநாள் காலையில் புதையலை எடுக்க  பாலைவனத்தை நோக்கிச்

சென்றார்.மலையை நோக்கி நின்று தனது நிழல் விழும் இடத்தில் தோண்ட ஆரம்பித்தார்.

அதுவரை வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர் தற்போது  புதையலை எடுக்க காலையிலிருந்து நிழல் விழும் இடத்திலிருந்து தோண்டினார்.  மாலையாகும்போது நிழல் அவரது காலடிக்குள் வந்து விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த அவர் அழுது புலம்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர் அவரிடம் "உன்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றைத்  தேடினால் துயரம் தான் ஏற்படும்" என்று கூறினார்.

நீதி:  இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வதே, வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல். 

இன்றைய செய்திகள் - 14.02.2025


* 800 ஆண்டு தொன்மையான 3 பாண்டியர் கால கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறையினர் 5 மணி நேரம் ஆய்வு செய்தனர்.


* அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை தொகுப்பது குறித்து பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் தமிழக அரசு அலுவலர்களுக்கு 4 நாட்கள் சிறப்பு பயிற்சி.


* பிரம்மபுத்திராவில் சீனாவின் மெகா அணை திட்டம்: தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய அரசு தகவல்.


* இந்தியா, பிரான்ஸ் இணைந்து ஏஐ ஆராய்ச்சி: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சந்திப்பில் முடிவு.


* ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் போட்டி: இந்தியா காலிறுதிக்கு தகுதி.


* ஒருநாள் கிரிக்கெட்: முதல் 50 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார் இந்திய வீரர் சுப்மன் கில்.


Today's Headlines


* Central Archaeological Survey of India (CSA) conducted a 5-hour study of 3 800-year-old Pandya-era inscriptions.


* 4-day special training for Tamil Nadu government officials at IIM Bangalore on compiling data required for government projects.


* China's mega dam project on Brahmaputra: Central government informed that it is actively monitoring it.


* India, France to jointly conduct AI research: Decision reached in meeting of Prime Minister Modi and French President Macron.


* Asian Mixed Teams Badminton Tournament: India qualifies for quarterfinals.


* One-day cricket: Indian player Shubman Gill sets world record for most runs scored in first 50 matches







02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...