Songs

Wednesday, February 26, 2025

27-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் அதிகாரம்:

 புல்லறிவாண்மை 


குறள் எண்:843

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

 செறுவார்க்கும் செய்தல் அரிது.


பொருள்: அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்

துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்."


பழமொழி :

சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.  


Form friendships after due deliberation, having done so do not give place to doubt.


இரண்டொழுக்க பண்புகள் :  


  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       


  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :


நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும்.- ஹெலன் கெல்லர்


பொது அறிவு : 


1. மீன்கள் இல்லாத ஆறு எது?  


விடை: ஜோர்டான் ஆறு.          


2. இந்தியாவில் உயர்கல்வியில்  அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 


விடை : தமிழ்நாடு  


English words & meanings :


 Hungry -  பசி


Interest. -  விருப்பம்


வேளாண்மையும் வாழ்வும் : 


மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கலாம்


நீதிக்கதை

எறும்பு 


ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் தனது சீடர்களுக்கு துன்பம் வந்தால் எப்படி தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு எறும்பு கதையின் மூலமாக  கூறி புரிய வைக்க நினைத்தார்.


 "ஒரு நாள் ஓர் எறும்பு  சற்று நீளமான உணவுப் பொருளை தன் வாயில் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது.அந்த விரிசலை தாண்டி உணவுப்பொருளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தது.


சிறிது நேரம் கழித்து, அந்த எறும்பு தனது உணவை அந்த விரிசலின் மீது வைத்து,அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலை கடந்து பின்பு தனது உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றது" என்று சீடர்களிடம் கூறினார்.


மேலும் "நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பத்தை பாலமாக வைத்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலே நமது வாழ்வின் துன்பங்களை எளிதில் கடந்து செல்லலாம்"என்று கூறி கதையை முடித்தார்



இன்றைய செய்திகள்

27.02.2025

* மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை  இடையேயான  பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

* அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* பெண்கள் புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்.

Today's Headlines

- The Tamil Nadu Electricity Distribution Corporation has secured 48th place with a score of 11.90 in the rankings of power distribution companies released by the Ministry of Power.¹

- Passenger ship services between Nagapattinam and Sri Lanka have been suspended for three days due to rough weather and strong winds in the Bay of Bengal.

- A 5.1-magnitude earthquake struck off the coast of Odisha near Puri in the Bay of Bengal.

- US President Donald Trump has announced plans to introduce a 'Golden Card' scheme for immigrants, which can be obtained by paying $5 million.

- India won a thrilling match against the Netherlands in the Women's Pro Hockey League.

- Archer achieved a remarkable feat in the international one-day cricket match, surpassing Anderson's record.


Monday, February 24, 2025

26-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:841


அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை

இன்மையா வையாது உலகு.


பொருள்:அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம்

அத்தகைய இல்லாமையாகக் கருதாது.


பழமொழி :

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது. 


Even a forest will not hold their wrath when the meek are enraged.


இரண்டொழுக்க பண்புகள் :  


  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       


  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :


படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை கருவியாகும்


–ஜோசப் அடிசன்


பொது அறிவு : 


1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?


விடை: பன்னா. 

2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?


விடை: ஜவஹர்லால் நேரு


English words & meanings :


 Grief - துக்கம்,


 Guilty - குற்ற உணர்ச்சி


வேளாண்மையும் வாழ்வும் : 


கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகளை சமாளிக்க ஒரு வழி தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், ஆரோக்கியமான தாவரங்கள் தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.


நீதிக்கதை

 பெற்றோர்


ரப்பரை பார்த்து பென்சில், "ஒவ்வொரு முறையும் நான் செய்த தவறுக்கு என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால் என்னை சுத்தப்படுத்தும் பொழுது நீ குறைந்து கொண்டே செல்கிறாய். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறியது.


 அதற்கு ரப்பர், "அது என் கடமை நான் படைக்கப்பட்டதே அதற்காகத்தான். என்னைக் கண்டு நீ வருத்தப்பட வேண்டாம். இதில் எனக்கு மிக மகிழ்ச்சியே. என்னால் உன் தவறுகள் அளிக்கப்பட்டு நீ முன்னேறிச் சென்றால்  அதுவே என் வெற்றி. நான் கரைவதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூறியது.


அந்த ரப்பர் வேறு யாரும் இல்லை நமது பெற்றோர் தான். அவர்கள் தான் ஆயுள் முடியும் வரை நமது தவற்றை திருத்திக் கொண்டே இருப்பார்கள்.நம் மீது பொறாமை படாத உள்ளங்கள் நம் பெற்றோர்களே.

இன்றைய செய்திகள்

26.02.2025

* மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.194.67 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. 193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

 * ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று தொடக்கம். விதர்பா - கேரளா அணிகள் மோதல்.

Today's Headlines

- *Women's Self-Help Groups*: The Tamil Nadu government has announced that products made by women's self-help groups have been sold for ₹194.67 crore.

- *Chief Minister's Pharmacies*: Chief Minister M.K. Stalin has inaugurated 1,000 pharmacies across Tamil Nadu, providing quality medicines at affordable prices to the public.

- *Cancer Treatment*: According to the Indian Council of Medical Research, three out of five cancer patients in India die due to inadequate treatment.

- *UN Resolution*: India has abstained from voting on a UN resolution demanding Russia's withdrawal from Ukraine. 93 countries voted in favour, 18 against, and 65 abstained.

- *Ranji Trophy Finals*: The Ranji Trophy finals begin today, with Vidarbha facing Kerala




24-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண் :820


எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

 மன்றில் பழிப்பார் தொடர்பு.


பொருள்:

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து ,பலர் கூடிய  மன்றத்தில் பழித்துப்

 பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்."


பழமொழி :

The fearless goes into the assembly.


அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :  


  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       


  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :


முயற்சி என்பது விதை போல.... அதை விதைத்துக் கொண்டே இரு... முளைத்தால் மரம் இல்லையேல் அது மண்ணிற்கு உரம். - கோ.நம்மாழ்வார்.


பொது அறிவு : 


1. வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?


விடை : ரிபோபிளேவின்.        


2. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?


விடை:  ஜான் டால்டன்


English words & meanings :


 Foolishமுட்டாள்தனமான


 Gladமகிழ்ச்சி


வேளாண்மையும் வாழ்வும் : 


தீமைபயக்கும் பூச்சிகளை அழிக்க உபயோகப் படுத்த படும் கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன.


நீதிக்கதை

முதல் நிலை.


பேராசிரியர் ஒருவர் மூன்று கேள்விகளை கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் எழுதுமாறு மாணவர்களிடம் கூறினார். 


அதில் மிகக் கடினமான கேள்விக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விக்கு 80 மதிப்பெண்களும், எளிதான கேள்விக்கு 60 மதிப்பெண்களும் தருவதாக கூறினார்.


மாணவர்களை ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து  பதில் அளிக்கக் கூறினார். தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்களில் உள்ள விடைகளை பார்க்காமல் கடினமான கேள்விகளை தேர்ந்தெடுவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தடுத்த கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை  தந்தார்.


மாணவர்களோ, "பதில்களையே பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே!  கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்கள் சரியாக பதில் எழுதி உள்ளார்களா? என நீங்கள் பார்க்க வேண்டும் அல்லவா?"என்று கேட்டனர். 


அதற்கு அவர் "உங்கள் பதிலுக்காக நான் இந்த தேர்வை வைக்கவில்லை. உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறினார்.


 மேலும்,"கடினமாக உழைப்பவர்களே எப்பொழுதும் முதல் நிலையை அடைவார்கள் என்பதை  நீங்கள் அறியவே நான் இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறி முடித்தார்.


நீதி: விடாமுயற்சியுடன் கடின உழைப்பும் இருந்தால் எந்த கடினமான செயல்களையும் எளிதாக செய்ய இயலும்.


இன்றைய செய்திகள் - 24.02.2025


* தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.


* தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


* இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


* உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: மனு பாக்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.


* புரோ ஹாக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி.


Today's Headlines


* The Tamil Nadu government has begun the counseling of  doctors to select 2,642 doctors tobe appointed in Tamilnadu government hospitals.


* The Chennai Meteorological Centre has announced that there is a possibility of rain in one or two places in Tamil Nadu from February 25 to 28.


* The Ayushman Bharat Yojana is the world's largest government-run health insurance program, and 75 crore people have received its identity cards, according to External Affairs Minister S. Jaishankar.


* Former US President Donald Trump has again alleged that the previous president Joe Biden's  administration provided $18 million to aid Indian elections.


* The Indian team, led by Manu Bhaker, has been announced for the World Cup shooting competition.


* In the Pro Hockey League, India defeated Ireland to achieve their fourth victory




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...