Songs

Wednesday, January 8, 2025

09-01-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 






பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம் :நட்பு ஆராய்தல்


குறள் எண்:798


உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க

அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு .


பொருள்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும்; அதுபோல் துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.


பழமொழி :

வைகறைத் துயிலெழு. 


 Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.


இரண்டொழுக்க பண்புகள் :  


*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :


செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்.---சுந்தர் பிச்சை.


பொது அறிவு 


1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 


கிழக்கு சகாரா பாலைவனம். 


2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது? 


ஜெர்மனி.


English words & meanings :


Establish - நிறுவு

 Estate -பண்ணை

 Evade - மழுப்பு 


வேளாண்மையும் வாழ்வும் :

  • உணவு உற்பத்தி
    வேளாண்மை மூலம் மக்கட்தொகைக்கு தேவையான உணவுப் பொருட்கள், பருத்தி, எண்ணெய் வித்துகள், கீரைகள், காய்கறிகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

  • பொருளாதார வளர்ச்சி
    ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மைக்கு பெரும் பங்குள்ளது. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் வேளாண்மையை தழுவியே வாழ்கின்றனர்


  • 09-01-25  இன்று 


    வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்.  வெளி நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.  


    புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் (1921) நடைபெற்றது.  


    ஐ. நா. வின் தலைமையகம் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக (1951) திறக்கப்பட்டது. 


    சூரிய மண்டலத்தின் புறவழிக் கோள்கள் முதல் தடவையாக (1992)  கண்டுபிடிக்கப்பட்டன.  


    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ்  ஐ போனை (2007)  சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.  


    மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான ஹர் கோவிந்த் கொரானா (1922), பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் டி  ஆர்.  ராமச்சந்திரன் (1917)  ஆகியோரின் பிறந்த தினம்.

    தெனாலிராமன் மற்றும் கொள்ளையர் கும்பல்

    ஒருநாள் தெனாலிராமன் தனது கிராமத்தில் இருந்தபோது, சில கொள்ளையர்கள் அவருடைய வீட்டை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். தெனாலிராமன் அவர்கள் திட்டத்தை அறிந்து, புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள முடிவு செய்தார்.

    அவருடைய வீட்டின் பின்புறம் ஓர் பெரிய தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி வைத்தார். கொள்ளையர்கள் வந்த போது, அவ்விடத்தை அவர்களுக்கு செல்வங்களால் நிரப்பப்பட்ட களஞ்சியமாக தோற்றமளிக்கச் செய்தார்.

    அவர்கள் அனைத்து "செல்வங்களையும்" எடுத்துச் செல்வதற்காக தொட்டியை காலி செய்ய ஆரம்பித்தனர். அது வெறும் தண்ணீர்தான் என்பதை அவர்கள் உணர்ந்தபோது, அவர்கள் வழுக்கி விழுந்தனர், கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து தங்களது முயற்சியை கைவிட்டனர்.

    தெனாலிராமன் அவர்களது முயற்சியை தோற்கடித்தத뿐மல்லாமல், மற்றவர்களுக்கும் நீதியைக் கூறி, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று பாடம் கற்றுத்தந்தார்.

    கதைதான் சொல்லும் நீதிசாரம்:

    அறிவுக்கும், நகைச்சுவைக்கும் இணைந்தால், எந்த சிக்கலையும் சுலபமாக சமாளிக்கலாம்.

  • கதை


  • இன்றைய செய்திகள் - 09.01.2025


    * பொங்கல் பரிசுத்தொகுப்பு ரெடி... நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்!


    * ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


    * டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு.


    * இஸ்ரோ தலைவராக திரு. நாராயணன். தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து அரசு பள்ளியில் படித்து உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் சேர்ந்தவர் இன்று அதன் தலைவராகி உள்ளார்.


    * ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா - ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'.


    Today's Headlines


    * Pongal gift set ready... Distribution in ration shops from tomorrow!


    * Sriharikota: ISRO has announced that tomorrow's event to connect two 220 kg spacecraft launched on December 30 has been postponed.


    * Improvement in Delhi air pollution levels: Relaxation in vehicle ban.


    * ISRO Chairman Mr. Narayanan. Born in a humble background in Kumari district of Tamil Nadu, he studied in a government school and joined ISRO as an assistant and has become its chairman today.


    * ISL Football Series: FC Goa - Hyderabad FC match 'Draw

  • Annual day dancing practice for kids

     


    Tuesday, January 7, 2025

    08-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

     



    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 

    08-01-2024

    திருக்குறள் 

    பால் : பொருட்பால்

    அதிகாரம்: நட்பு ஆராய்தல்

    குறள் எண்:797


    ஊதியம் என்பது ஒருவற்க்குப் பேதையார்

    கேண்மை ஒரீஇ விடல் .


    பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.


    பழமொழி :

    அழகு சோறு போடாது. 


    One cannot make soup out of beauty


    இரண்டொழுக்க பண்புகள் :  


    *தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


    *தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


    பொன்மொழி :


    நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே.-----ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


    பொது அறிவு : 


    1. இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு


    விடை: ஹீமேட்டாலஜி. 


    2. சுவாச மையம் எது?


    விடை: முகுளம்


    English words & meanings :


     avarice-பணபேராசை,


      greed-பேராசை


    வேளாண்மையும் வாழ்வும் 


    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை பெருகி மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும் விவசாயத்திற்கும் தேவையான நீரை நிலத்தடியில் இருந்து எடுக்க ஆரம்பித்தனர்


    08-01-25  இன்று


     ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியோனார்டோ டாவின்சியின் மோனா லிசா ஓவியம் வாஷிங்டன் தேசிய கலை காட்சியகத்தில் (1963)  காட்சிப்படுத்தப்பட்டது. 


    இத்தாலிய வணிகர் மார்க்கோ போலோ (1324),  இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலி (1642), சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவல் (1941) ஆகியோரின் நினைவு தினம். 


    கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் (1942), உயிரினங்களின் இயற்கை தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவருமான  ஆல்பர்ட் ரஸ்ஸல் வாலஸ் (1823)  ஆகியோரின் பிறந்த தினம்.


    நீதி கதை


    ஒரு நாள் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு நீதிபதி, தனது சேவையை நிறைவேற்றும் பணியில் இருந்தார். ஒரு விவகாரம் பரிசோதிக்கப்படுகிறது, இதில் இரண்டு பேர் தங்கள் சொந்தக் காணியைப் பற்றி வழக்கு நடத்திக் கொண்டிருந்தனர்.

    முதல் நபர் கூறினார், "இந்த நிலம் என் சொந்தமாகும். நான் அதை பத்து வருடங்களாகப் பராமரித்து வருகிறேன்."

    இரண்டாவது நபர் சொன்னார், "நீங்கள் அதை தவறாகப் பராமரித்துள்ளீர்கள். நான் அந்த நிலத்தின் உரிமையாளி."

    நீதிபதி அவர்களைப் பார்த்து, "நீங்கள் இருவரும் கூறுவது சரியல்ல. நிலம் மட்டும் அல்ல, அதோடு நம்பிக்கை, ஆளுமை, பொறுப்பு ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும்," என்று கூறினார்.

    அவர் சொல்லப்பட்ட அறிஞர்களை அழைத்து, நிலத்தின் உரிமையை பற்றிய சான்றுகளை ஆராய்வதற்காக விசாரணை நடத்தினார்.

    கடைசியாக, நீதிபதி ஒரு தீர்மானத்தை அறிவித்து, நிலத்தின் உரிமையை பராமரிக்க மற்றும் பாதுகாக்க நிலையான தீர்வு கண்டு, உண்மையான உரிமையாளருக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தக் கதை நமக்கு உணர்த்தும் பாடம்: உறுதியான நிலைப்பாடு மற்றும் பொறுப்புடன் எதையும் பராமரித்தல் அவசியம்.

    இன்றைய செய்திகள் - 08.01.2025


    * தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி வைரஸ் (HMPV) தானாகவே சரியாக கூடியது, எனவே பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


    * சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது.


    * வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம், மிகவும் பழமையான ஜாரவா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 19 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.


    * இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.


    * மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.


    Today's Headlines


    * As far as Tamil Nadu is concerned, the HMPV virus and its effect can be (HMPV)  recovered by itself, so there is no need to panic,” said M. Subramanian, Minister of Health and Public Welfare.


    * On behalf of the tourism department, the 10th International Balloon Festival will begin on January 10th in Chennai, Madurai, and Pollachi.


    * The Andaman Nicobar Island administration department has recorded a special historical activity by adding the names of 19 people in the electoral roll who belong to the very ancient Jarawa tribal community and issuing them identity cards.


    * A powerful earthquake struck Tibet, situated at the Himalayan foothills. The Death toll rose. The quake was recorded as 7.1 on the Richter scale.


    * Malaysia Open Badminton: Trisha Jolly - Gayatri duo advance to 2nd round

    Monday, January 6, 2025

    07-01-2025 -பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்




    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01-2025

    திருக்குறள் 

    பால் : பொருட்பால்

    அதிகாரம்: நட்பு ஆராய்தல்

    குறள் எண்:797


    ஊதியம் என்பது ஒருவற்க்குப் பேதையார்

    கேண்மை ஒரீஇ விடல் .


    பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.


    பழமொழி :

    அழகு சோறு போடாது. 


    One cannot make soup out of beauty


    இரண்டொழுக்க பண்புகள் :  


    *தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


    *தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


    பொன்மொழி :


    நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே.-----ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


    பொது அறிவு : 


    1. இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு


    விடை: ஹீமேட்டாலஜி. 


    2. சுவாச மையம் எது?


    விடை: முகுளம்


    English words & meanings :


     avarice-பணபேராசை,


      greed-பேராசை


    வேளாண்மையும் வாழ்வும் 


    அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள்



    07-01-25  இன்று 


    கலிலியோ கலிலி ஜுபிடர் கோளின்  துணைக் கோள்களை (1610) கண்டறிந்தார். 


    வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்திற்கு (1894)  காப்புரிமம் பெற்றார். 


    இயற்கையில் கண்டறியக்கூடிய கடைசி தனிமமான ஃபேன்சியத்தை பெண் விஞ்ஞானி மார்க்ரேட் பெரே (1939) கண்டுபிடித்தார்.

    நாசாவின் சேர்வெயர் 7 விண்கலம் விண்ணில் (1968) ஏவப்பட்டது. 


    இயந்திர பொறியாளரும் மின் பொறியாளருமான நிக்கோலா தெஸ்லா (1943) நினைவு தினம். 


    ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்று வரை அறியப்படும் ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி (1943), அபிநய சரஸ்வதி பத்மபூஷன். சரோஜாதேவி (1938), தமிழுக்கு தொண்டாற்றிய  சிவதமிழ்ச்செல்வி. தங்கம்மா அப்பாகுட்டி (1925) ஆகியோரின் பிறந்த தினம்.


     நீதிக்கதை:


    முட்டாளும் சிங்கமும்

    ஒரு காலத்தில், ஒரு மிருககாட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அது மிகவும் பெருமையாக இருந்தது. "இந்த மிருககாட்டில் நான் தான் அரசன்," என்று நினைத்து மற்ற மிருகங்களைப் பிடித்து அழுத்தம் கொடுக்கும்.

    ஒரு நாள், சிங்கம் தன்னுடைய ஆண்மையை எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. அது ஒரு குட்டி நதியின் அருகே போய் தன்னுடைய முகத்தை தண்ணீரில் பார்த்தது. தண்ணீரில் சிங்கத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது.

    அது தன்னைப் பார்த்து: "இங்கே இன்னொரு சிங்கம் இருக்கிறது! அது என்னைவிட வலிமையானதாக இருக்க முடியாது," என்று நினைத்தது. அதை சந்திக்க சிங்கம் தண்ணீருக்குள் குதித்தது. ஆனால் அது வெறும் பிரதிபலிப்பாக இருந்தது என்பதை உணராமல், ஆழமான தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.

    அதனால், பெரிய பேரிலிருந்து தப்பிக்க முடியாமல், சிங்கம் தண்ணீரில் மூழ்கி மறைந்தது.


    நீதி:

    மிகுந்த பெருமை ஒருவரின் முற்றிலும் நாசமாக முடிக்கலாம். எப்போதும் முன் நினைத்து செயல்பட வேண்டும்.



    இன்றைய முக்கிய செய்திகள்

    07.01.2025

    * உதகையை உறைய வைக்கும் உறைபனி பொழிந்துவரும் நிலையில் அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரிக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    * சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

    * ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    * பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.

    * ஹாக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி.

    * மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

    Today's Headlines

    * Avalanche recorded a minus 1 degree Celsius temperature as Ooty was gripped by a freezing cold.

    * Chief Minister M.K. Stalin has announced that an individual or organization will be awarded one million US dollars (about Rs. 8.57 crore) if they help in understanding the Indus Valley Civilization script.

    * Asia's 15th largest air show - Aero India 2025 - will be held in Bengaluru, Karnataka from February 10 to 14, the Defense Ministry has said.

    * China has said that the world's largest dam to be built across the Brahmaputra river will not affect India and Bangladesh.

    * Hockey India League: Tamil Nadu Dragons defeat UP Rudras.

    * Women's Cricket: India's team announced for the ODI series against Ireland


    CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றால் என்னென்ன பண பலன் கிடைக்கும் ?..

     CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றால் என்னென்ன பண பலன் கிடைக்கும் ?..

    உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார் என வைத்துக் கொண்டால் அவர் பணிபுரிந்த காலத்தில் மாதா மாதம் செலுத்திய சிபிஎஸ் தொகைக்குண்டான வட்டியும் அதற்கு ஈடாக அரசு செலுத்தும் தொகைக்கு அதனுடைய வட்டியும் சேரும். தோராயமாக 24 லட்சங்கள் 


    அடுத்து SPF ரூ 20 மற்றும் ரூ 50 இதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை 


    அடுத்து ஈட்டிய விடுப்பு 240 நாட்கள்.  வைத்திருக்கிறீர்கள் என்றால் 

    அதற்கான கடைசி மாதத்தில் வாங்கிய சம்பளத்தில் 8 மாத சம்பளம்

    அடுத்து சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு 180 நாட்கள்..

    இதில் 90 (மூன்று மாத சம்பளம்) நாட்களுக்கு கடைசி மாத சம்பளத்திலிருந்து பணப்பலன் பெறலாம்


    அடுத்து ஒரு ஆசிரியர் 60 வயது முடிந்து பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெறுகிறார் என்றால் அடுத்த மூன்று மாதத்திற்கு மறு நியமனம் பெறலாம் ....(குறிப்பு தங்கள் பணி புரியும் வட்டாரத்தில் ஆசிரியர் பணியிடங்கள் surplus ஆக இருக்கக் கூடாது


    மேற்கண்ட பலன்களில் CPS ஐ  GPF ஆக மாற்றி பென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  முக்கிய இலக்கு என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்

    மனித மெட்டாப்நியூமோவைரஸ் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

     









    மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்றால் என்ன?


     மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது பொதுவாக ஜலதோஷம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும்.  இது பெரும்பாலும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் இது சில சமயங்களில் நிமோனியா, ஆஸ்துமா போன்ற குறைந்த சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம் அல்லது நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயை (சிஓபிடி) மோசமாக்கலாம்.  HMPV நோய்த்தொற்றுகள் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் மிகவும் பொதுவானவை.



    மனித மெட்டாப்நியூமோவைரஸ் தொற்றுக்கு என்ன காரணம்?


     ஒரு வைரஸ் — உங்கள் செல்களைப் பயன்படுத்தி அதிக நகல்களை உருவாக்கும் ஒரு சிறிய கிருமி - HMPVயை ஏற்படுத்துகிறது.  இது RSV, அம்மை மற்றும் சளியை உண்டாக்கும் வைரஸ்களின் குழுவின் ஒரு பகுதியாகும்.


     மனித மெட்டாப்நிமோவைரஸ் எவ்வாறு பரவுகிறது?


     HMPV அதைக் கொண்ட ஒருவருடன் நேரடித் தொடர்பு மூலமாகவோ அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களைத் தொடுவதிலிருந்தோ பரவுகிறது.  உதாரணமாக:


     இருமல் மற்றும் தும்மல்.


     கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல் அல்லது முத்தமிடுதல்.


     தொலைபேசிகள், கதவு கைப்பிடிகள், விசைப்பலகைகள் அல்லது பொம்மைகள் போன்ற மேற்பரப்புகள் அல்லது பொருட்களைத் தொடுதல்.


     மனித மெட்டாப்நியூமோவைரஸின் ஆபத்து காரணிகள் யாவை?


     எவரும் HMPV ஐப் பெறலாம், ஆனால் நீங்கள் பின்வரும் பட்சத்தில் கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளீர்கள்:


     5 வயதுக்கு குறைவானவர்கள் (குறிப்பாக முன்கூட்டிய குழந்தைகள்) அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.


     பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு (எச்.ஐ.வி., புற்றுநோய் அல்லது ஆட்டோ இம்யூன் கோளாறுகள் அல்லது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்துகள் போன்றவை)


     ஆஸ்துமா அல்லது சிஓபிடி.


    மனித மெட்டாப்நியூமோவைரஸ் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?


     மனித மெட்டாப்நியூமோவைரஸுக்கு சிகிச்சையளிக்கும் வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.  பெரும்பாலான மக்கள் தங்கள் அறிகுறிகளை அவர்கள் நன்றாக உணரும் வரை வீட்டிலேயே நிர்வகிக்க முடியும்.


     நீங்கள் அல்லது உங்கள் குழந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.  அங்கு, சுகாதார வழங்குநர்கள் உங்கள் நிலையைக் கண்காணித்து, நீங்கள் நோய்வாய்ப்படாமல் தடுக்க உதவுவார்கள்.  அவர்கள் உங்களை உபசரிக்கலாம்:


     ஆக்ஸிஜன் சிகிச்சை.  உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், ஒரு வழங்குநர் உங்கள் மூக்கில் உள்ள குழாய் அல்லது உங்கள் முகத்தில் முகமூடி மூலம் கூடுதல் ஆக்ஸிஜனை வழங்கலாம்.


     IV திரவங்கள்.  உங்கள் நரம்புக்கு (IV) நேரடியாக வழங்கப்படும் திரவங்கள் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.


     கார்டிகோஸ்டீராய்டுகள்.  ஸ்டெராய்டுகள் வீக்கத்தைக் குறைக்கலாம் மற்றும் உங்கள் அறிகுறிகளில் சிலவற்றை எளிதாக்கலாம்.


     மனித மெட்டாப்நியூமோவைரஸுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையா?


     இல்லை. ஆன்டிபயாடிக்குகள் பாக்டீரியாவை மட்டுமே குணப்படுத்துகின்றன.  HMPV ஒரு வைரஸ் என்பதால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதை அகற்றாது.  சில சமயங்களில் HMPV இலிருந்து நிமோனியாவைப் பெறுபவர்களும் ஒரே நேரத்தில் பாக்டீரியா நோய்த்தொற்றைப் பெறுகிறார்கள் (இரண்டாம் நிலை தொற்று).  உங்கள் வழங்குநர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைத்தால், அது இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதாக இருக்கும்.






    Sunday, January 5, 2025

    06-01-2025- பள்ளி காலை நேர வழிபாட்டு செயல்பாடுகள்



    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -                                     06.01.2025

    திருக்குறள் 

    பால் : பொருட்பால்


    அதிகாரம்: நட்பு ஆராய்தல்

    குறள் எண்:796


    கேட்டினும் உண்டுஓர் உறுதி இளைஞரை

    நீட்டி அளப்பதோர் கோல் .


    பொருள்:கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.


    பழமொழி :

    விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.  


    Perseverance kills the game.


    இரண்டொழுக்க பண்புகள் :  


    *தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


    *தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


    பொன்மொழி :


    கல்வி என்றால் ஏதோவொரு சான்றிதழைப் பெறுவது அல்ல, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வது.-----சத்குரு


    பொது அறிவு : 


    1. மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதத்தின் அளவு


    விடை : 100%.

     2. நரம்பு மண்டலத்தின் அலகு 


    விடை: நியூரான்


    English words & meanings :


     curt-வெடுக்கென்று,


     risk- விறுவிறுப்பான


    வேளாண்மையும் வாழ்வும் : 


    வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.



    06-01-25  இன்று 


    சர்வதேச வேட்டி (2015 முதல்) தினம்.  


    கலாஷேத்திரா பவுண்டேஷன் (1936) சென்னையில் தொடங்கப்பட்டது. 


    பார்வையற்றவர்களுக்கான  எழுத்தை உருவாக்கிய லூயி ப்ரெயில் (1852), மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் (1884)  ஆகியோரின் நினைவு தினம். 


    இசை புயல்  பத்ம பூஷன்ஏ. ஆர். ரகுமான் (1967)  இந்திய கிரிக்கெட் அணியின்  தலைவர்  பத்ம பூஷன் கபில்தேவ் (1959), ஓவியர் கவிஞர் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலீல் ஜிப்ரான் (1883) ஆகியோரின் பிறந்த தினம்.



    குரங்கும் தொப்பியும்

    ஒரு மழைக்காலத்தில், ஒரு தொப்பி வியாபாரி கிராமங்களுக்கு நடுவே சென்றுகொண்டிருந்தார். இரவில் தூங்க சாலையின் ஓரத்தில் ஒரு பெரிய மரத்தின்கீழ் தங்கினார். அதே மரத்தில் பல குரங்குகள் வசித்தன.

    அந்தக் குரங்குகள் வியாபாரியின் பையில் இருந்த அழகான தொப்பிகளை கவனித்தன. வியாபாரி உறங்கியதும், குரங்குகள் பையை திருடி, ஒவ்வொருவரும் ஒரு தொப்பியை அணிந்துகொண்டன.

    வியாபாரி விழித்தபோது, குரங்குகள் அனைத்து தொப்பிகளையும் உடைத்து மரத்திற்குப் போய் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். வியாபாரி பலவிதமாக முயற்சித்தார், ஆனால் குரங்குகள் ஒற்றுமையாக இருந்தன.

    அதற்குப் பிறகு, அவருக்கு ஒரு யோசனை வந்தது. குரங்குகள் மனிதர்களை நகலெடுக்க விரும்புவதாக அவர் அறிந்திருந்தார். உடனே, அவர் தனது தொப்பியை வெளியே எடுத்து, தரையில் போட்டார். குரங்குகள் கூட அதையே செய்தன! அவர்களின் தொப்பிகளை ஒருவருக்கொருவர் தரையில் போட்டன.

    வியாபாரி திருப்தியாக அனைத்தையும் திரும்பக் கூடுங்கோட்டியில் சேகரித்தார்.


    நீதி:

    அறிவு, நேர்மறையான யோசனைகள், மற்றும் தன்னம்பிக்கையுடன் நீங்கள் எந்த பிரச்சினையும் சமாளிக்க முடியும்!



    இன்றைய தலைப்புச் செய்திகள்!


    ‣ தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. கடந்த கால சர்ச்சைகளின் காரணமாக, கவனம் பெற்றுள்ள ஆளுநர் உரை.



    ‣ அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு. தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் விநியோகிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


    ‣ ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே உயரமான ரயில்வே பாலத்தில், பயணிகள் ரயில் சோதனை ஓட்டம். இந்தியாவின் முதல் ரயில்வே கேபிள் பாலத்தில், ரயில் ஓடிய கண்கொள்ளாக் காட்சி.


    ‣பஞ்சாப்பில் விவசாயி ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதம் 41 நாட்களைக் கடந்தது. சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு, உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தகவல்


    ‣பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் அதிருப்தி. ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்கியிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றும் ஆதங்கம்.


    Today's Headlines!


    ‣ The Tamil Nadu Legislative Assembly session begins today with the Governor's address. The Governor's address has received attention due to past controversies.


    ‣ Online booking to participate in the Avaniyapuram, Palamedu, Alanganallur Jallikattu competitions from today. The district administration has announced that tokens will be distributed only to eligible persons.


    ‣ Passenger train test run on the world's highest railway bridge in Jammu and Kashmir. A spectacular sight as the train ran on India's first railway cable bridge.


    ‣ Farmer Jagjit Singh Thallewal's hunger strike in Punjab has crossed 41 days. Doctors have informed that his kidney and liver are affected and his condition has deteriorated.


    ‣Border - Sunil Gavaskar is unhappy that he was not invited to present the Gavaskar Trophy.  I think I would have been happy if the trophy had been given to the Australian team.

    32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!*

     


    32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!*


     வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)


     விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025


     விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.


     அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.


     பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.

    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    தகுதியுள்ள அனைவரும்

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

    02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

      பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...