Songs

Monday, March 31, 2025

01-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :மானம்

குறள் எண் :961


 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் 

குன்ற வருப விடல்.


பொருள்:இன்றியமையாதச் சிறப்பைத் தருவதாயினும் குடிப் பெருமைக்குக் குறைவானவற்றை செய்தலாகாது.


பழமொழி :

Face the danger boldly than live with in fear.


அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.


* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.


பொன்மொழி :


செய்யும் காரியம் தவறாகும் போது,நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.ஆனால் ஒருபோது மனம் தளராதே..


---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----


பொது அறிவு : 


1. எந்த மாதத்தில் பிறப்பு விகிதம் அதிகம்?


 விடை : ஆகஸ்ட். 


2. அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை முதன்முறை எங்கு செயல்பட்டது? 


விடை : சீனா


English words & meanings :


 Land.     -   நிலம் 


 Lighthouse.     -   கலங்கரை விளக்கம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 உலகம் முழுவதும், நீர் ஆதாரங்கள் மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன,


நீதிக்கதை

 காணிக்கை 


ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றிருந்தான்.


அவன் விரித்த வலையில் கழுகு ஒன்று  சிக்கிக்கொண்டது.


அந்த கழுகின் இறகுகளை மட்டும் வெட்டி அதனை சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்துக் கழுகை வாங்கி தன் வீட்டில் அன்புடன் வளர்த்து வந்தார்.


இறகுகள் நன்கு வளர்ந்த பின்பு அதனைப் பறக்க விட்டார். கழுகு பறந்து செல்லும்போது ஒரு முயலைப் பார்த்தது. அதை பிடித்து வந்து தன்னை காப்பாற்றிய அவருக்கு காணிக்கையாகக் கொடுத்தது.


இதைப் பார்த்த நரி, "உன்னை பிடித்த வேடனிடம் இந்த முயலை கொடுத்திருந்தால், பின்னாளில் அவன் உன்னை பிடிக்காமல் விட்டிருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய்?" என்று கேட்டது.


அதற்கு கழுகு,"இல்லை. நீ சொல்வது தவறு. வேடனிடம் கொடுத்திருந்தாலும் பின்னாளில் அவன் என்னை பிடிக்கத்தான் செய்வான். ஏனெனில் அது அவனுடைய தொழில். ஆனால் என்னை காப்பாற்றிய அவருக்கு நான் காணிக்கையாக இதைச் செய்தேன்"என்று கூறியது.


நீதி : உதவி செய்தவரிடம் நன்றியுடனும் விசுவாசத்தடனும் இருப்பது தான் பண்புள்ள செயல்.



இன்றைய செய்திகள் - 01.04.2025


* அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.


* வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப்ரல் 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்க உள்ளது.


* மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


* ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.


* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி செர்பிய வீரர் மென்சிக் சாம்பியன்.


* கால்பந்து காட்சி போட்டி: இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி.


Today's Headlines


* To address the increasing electricity demand, the Tamil Nadu Electricity Board plans to implement a 660-megawatt expansion project for the Ennore Thermal Power Plant.


   * A "ChatGPT" training workshop for business owners and entrepreneurs will be held in Chennai on April 3rd.


   * The Armed Forces Special Powers Act has been extended for another six months in Manipur and other northeastern states.

 

   * The death toll from the earthquake in Myanmar has risen to 2,056.More than 3,900 people have been injured.270 people are still missing, according to the Myanmar military junta.


   * Serbian player Mensik defeated Djokovic to win the Miami Open tennis championship.

 

   * The Brazilian legends team defeated the India All-Stars team in a football friendly match




Thursday, March 27, 2025

28-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 

28-03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம் :குடிமை 

குறள் எண்: 960. 


நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்

 வேண்டுக யார்க்கும் பணிவு


பொருள்:

புகழ் போன்ற நன்மை வேண்டின், தீயது செய்ய அஞ்ச வேண்டும். குலப்பெருமை வேண்டின், எவர்க்கும் பணிந்து செல்ல வேண்டும்.


பழமொழி :

சொல் வல்லனை வெல்வது அரிது. 


 It is difficult to overcome the eloquent.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


பணிவு என்ற பண்பு இல்லாதவன் வேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே--நபிகள் நாயகம்


பொது அறிவு : 


"1. ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை இடும்? 


விடை : 228 முட்டைகள்.


2. அணிலின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்? 


விடை :7 ஆண்டுகள்"


English words & meanings :


 Jungle.     -     காடு

 

Land.       -      நிலம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நிலையான நீர் மேலாண்மையானது, மக்கள், சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும் அதே வேளையில், நீரின் நன்மையான பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது.


நீதிக்கதை

 ஆமை


சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றை கண்டான்.அதனை மெதுவாக தொட்டவுடன் ஆமை தனது தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.


 சிறுவன் என்னென்னவோ செய்து பார்த்தும் ஆமை தனது தலையையும், கால்களையும் வெளியில் நீட்டவே இல்லை.


அதை பார்த்த சிறுவன் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ஆமையை நெருங்கினான். அப்பொழுது சிறுவனுடைய மாமா, "தம்பி நீ என்னதான் தொந்தரவு செய்தாலும் ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே 


நீட்டவே நீட்டாது" என்று கூறினார்.


சிறுவன், "ஆமையை பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. அதனை எவ்வாறு வெளியில் கொண்டு வருவது என்று கூறுங்கள்" என்று  கேட்டான்.


 உடனே மாமா, " தம்பி ஆமையை மெதுவாக எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கதகதப்பான ஒரு இடத்தில் வை.எந்த தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் இருந்தால், ஆமை தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்ல தொடங்கும்"என்று கூறினார்.


சிறுவனும் அதே போல் செய்ய ஆமையும் ஓட்டை விட்டு வெளியே வந்து ஊர்ந்ததை பார்த்து சிறுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.


ஆச்சரியம் அடைந்த சிறுவன் இது எப்படி என்று தனது மாமாவிடம் கேட்டான். அதற்கு அவனுடைய மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் இப்படித்தான்" என்றாராம். 


மேலும்,"உன்னை சுற்றி இருப்பவர்களை மாற்ற விரும்பினால், நீ உன்னுடைய இன்முகத்தை அவர்களிடம் காட்ட வேண்டும். உன் கனிவான இரக்கம் கொண்ட இதயத்தால் மட்டுமே மற்றவர்களை மாற்ற இயலும்" என்றும் கூறினார்.





Wednesday, March 26, 2025

27-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்: 959


நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.


பொருள்:

நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.


பழமொழி :

தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு. 


Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்--- தந்தை பெரியார்


பொது அறிவு : 


1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?


மகாத்மா காந்தி மறைந்த தினம் .


2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.


English words & meanings :


 Hill      -     மலை

 

 Island         -     தீவு


வேளாண்மையும் வாழ்வும் : 


 நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.


நீதிக்கதை

 தலைமை அமைச்சர்


ஒரு அரசன் தன்  முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை  தலைமை  அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார்.அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில்  வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.


தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.


 மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர்  மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.


மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை. 


இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே  தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.


நீதி :  முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.



இன்றைய செய்திகள் - 27.03.2025


* அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


* கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.


* டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


* வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


* மியாமி ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Minister Rajagannappan said in the legislative session that there is a great demand for Aavin ghee in the United States.


* Rural Development Minister E. Periyasamy has announced that community health complexes will be built in rural areas at an estimated cost of Rs 3150 crore.


* It was reported in the Lok Sabha that 83,668 whatsup numbers and 3,962 Skype accounts have been crippled in connection with digital arrests.


* The US has announced that 25 per cent additional tax will be imposed on countries that import oil and gas from Venezuela.


* Miami Open tennis: Improvement of American player Taylor Britz quarterfinals




Tuesday, March 25, 2025

26-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: குடிமை 

குறள் எண் :958


 நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்

 குலத்தின்கண் ஐயப் படும்.


பொருள்:

குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின், அவன் குலப் பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.


பழமொழி :

சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.  


Learning the future by looking at things past.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் --சுபாஷ் சந்திரபோஸ்


பொது அறிவு : 


1. முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது? 


விடை : உருகுவே         


  2. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?


 விடை :உதடு


English words & meanings :


 Field.    -     வயல்

 

 Forest.   -     காடு


வேளாண்மையும் வாழ்வும் : 


  நீர் பற்றாக்குறை தீர நீர் வளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் முறையான நீர் மேலாண்மை, முக்கியமாக அனைத்து பயன்பாடுகளுக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

நீதிக்கதை


 அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து


ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும்.பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.


ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்றுகட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.


ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.


யோகி ஒரு நாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.


யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குபின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.



இன்றைய செய்திகள் - 26.03.2025


* ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்க பயணிகளுக்கு சிறப்பு பரிசு: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.


* தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.


* அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


* நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு.


* கேலோ இந்தியா பாரா விளையாட்டு: பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்தனர் ஜாண்டு குமார் மற்றும் சீமா ரானி.


* 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதிச் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி தகுதி.


Today's Headlines


*  To encourage  online booking reservation scheme, The Tamil Nadu State Transport Corporation has announced  special lucky draw 


 * Toll Fees at 40 Toll Plazas in Tamil Nadu to be Increased from April 1st: National Highways Authority of India Announced.


 * Comprehensive Screening Centers to Detect All Types of Cancer to be Launched in All Districts of Tamil Nadu Within 10 Days: Minister Ma. Subramanian. This method is first in the Country.


 * India Urges at the United Nations that Pakistan Continues to Illegally Occupy the Jammu and Kashmir Region and Should Vacate it Immediately.


 * Earthquake in New Zealand: Recorded 6.7 on the Richter Scale.


 * Khelo India Para Games: Jaandu Kumar and Seema Rani Set National Records in Weightlifting.


 * 2026 World Cup Football: New Zealand Team Qualifies for the Qualifying Round




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...